என் மலர்
நீங்கள் தேடியது "Pamban Bridge"
+2
- ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
- நடுக்கடலில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறை, பாலத்தில் உள்ள சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மண்டபம்:
ராமேசுவரம் தீவினை இந்தியாவுடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள், தூக்குப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி 1.03.2019 அன்று அடிக்கல் நாட்டினார். அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
2,078 மீட்டர் நீள புதிய பாலம், கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது. 101 தூண்களைக் கொண்ட இந்த பாலத்தில் 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட்டு பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளம், 27 மீட்டர் உயரத்திற்கு ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் கட்டுமான பணிகள், தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத் தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள் முடிந்து, அதனை தூக்கி இறக்கும் சோதனை, ரெயில்கள் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இறுதிகட்டமாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் சார்பாக இரண்டு நாள் ஆய்வு பாம்பனில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் தொடங்கியது. இதில் ரெயில்வே அதிகாரிகள், பாம்பன் அக்காள் மடத்தில் உள்ள ரெயில்வே கேட்டில் இருந்து டிராலி மூலம் சென்று பாம்பன் ரெயில் நிலையம், பாம்பன் தெற்குவாடி ரெயில்வே கேட், புதிய பாம்பன் பாலம், புதிய பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப்பாலம், இதற்காக நடுக்கடலில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறை, பாலத்தில் உள்ள சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும், சின்னப்பாலம் ரெயில்வே கேட்டில் இறங்கி, புதிய வழித்தடத்தின் செயல் பாடுகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்தும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். காற்றின் வேகம், நிலையை கண்காணிப்பதற்கான அனிமோ மீட்டர் அமைப்பு மற்றும் பாலத்தின் சிக்னல் அமைப்புகளையும் அவர் ஆய்வு செய்தார்.
தூக்குப் பாலத்தை இயக்கும் ஆபரேட்டர் அறைக்குள் சென்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். பின்னர் தூக்குப்பாலத்தில் இருந்து மண்டபம் நோக்கி உள்ள ரெயில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து மாலை 6 மணிக்கு முதல்கட்ட ஆய்வை நிறைவு செய்தார். சுமார் 10 மணிநேரம் நடந்த ஆய்வில் புதிய பாலத்தில் ரெயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து உறுதி செய்யப்பட் டது. மேலும் தூக்கு பாலத்தை திறந்து அதன் வழியாக கப்பல்களை இயக்கியும் சோதனை செய்யப்பட்டது.

இரண்டாவது நாளான இன்று முக்கிய அம்சமாக மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து புதிய பாம்பன் ரெயில் பாலம் வழியாக பாம்பன் ரெயில் நிலையம் வரையிலும் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 பெட்டிகளுடன் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது. குறிப்பாக செங்குத்து தூக்கு பாலத்தின் அதிர்வுகள், உறுதித்தன்மை தொடர்பாக பாதுகாப்பு ஆணையர் ரெயில் பயணம் செய்தவாறு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தலைமை திட்ட மேலாளர் கமலாகர் ரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி அமித்குமார் மனுவால், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவத்சவா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தேதி முறைப்படி அறிவிக்கப்படும், என்றும் அதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
- சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
* பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
* பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
* தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
* புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பாம்பன் பாலம் திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரெயில்வே அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம்.
இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன?
இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
- கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
- தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கியது. கடலின் நடுவே 101 தூண்கள் கட்டப்பட்டு செங்குத்தாக லிப்ட் முறையில் பாலம் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாலத்தை ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையர் சவுத்ரி இந்திய ரெயில்வே வாரிய செயலாளருக்கு ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அந்த ஆய்வறிக்கையில்," பாலம் சிறு தொழில்நுட்பக் கோளாறுகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்சனையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை.
தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் ஒலி அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
புதிய ரெயில் பாலத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக மாறு ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும்" எனவும் ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே திறக்க வேண்டும் என மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
தெற்கு ரெயில்வேயின் மூத்த அதிகாரி சவுத்ரி, பாம்பனில் புதிதாக கட்டப்படும் ரெயில்வே பாலத்தின் தரம் குறித்த தனது கருத்து மற்றும் பரிந்துரைகளை இந்திய ரெயில்வேக்கு அனுப்பியிருப்பதை நான் புரிந்துகொண்டேன்.
அவரது கண்காணிப்பின் பேரில் கீழே உள்ள முக்கிய பகுதிகளுக்கு பரிந்துரைத்துள்ளார். பாலம் கட்டும் போது அரிப்பு தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது சில தூண்கள் மற்றும் மூட்டுகளில் கடல் அரிப்புக்கான அறிகுறிகள் உள்ளன.
மேலும், ரெயில் பாதையை கடந்து செல்லும் போது பெரும் சத்தம் ஏற்படுகிறது. வேலை கிட்டத்தட்ட முடிந்து, ரெயிலின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. ஆனால் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எதிர்வரும் நாட்களில் பாலத்தை பயன்படுத்தவிருக்கும் பல லட்சம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பாலம் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு, தெற்கு ரெயில்வே பாதுகாப்பு துறை ஆணையரின் அனைத்து ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது.
- பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா வந்தார். அவர் டிராலியில் சென்று, பாலத்தை பார்வையிட்டு மையப்பகுதிக்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தை திறந்து மூட கட்டப்பட்டுள்ள ஆபரேட்டர் அறை, அங்குள்ள தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார்.
பின்னர் தூக்குப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் மூலமாக உயரே சென்று தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்காக அமைக்கப்பட்ட சாதனங்களையும் பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலத்தை ஆய்வு செய்தார்.
பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர். பின்னர் அங்கிருந்து டிராலி மூலம் புறப்பட்டு பாம்பன் வந்தார். தொடர்ந்து ராமேசுவரம் சென்றார். புதிய ரெயில் பாலத்தில் ஒரு சில குளறுபடிகள் உள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கை அளித்திருந்த நிலையில், மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி, ஆய்வு செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
- ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன.
- அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ரெயில் பால பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்தபோது, சிலவற்றை சரிசெய்ய தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று முடிவடைந்தன.
இந்தநிலையில், நேற்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். மண்டபத்தில் இருந்து டிராலி மூலம் வந்த அவர், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தபடி மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்திற்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள லிப்ட் மூலமாக மேலே சென்று தூக்கு பாலத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார். பின்னர் ஆய்வுக்காக தூக்குப்பாலம் ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் தூக்குப்பாலம் இறக்கப்பட்ட பின்னர் தூக்குப்பாலம் கீழே ஒன்றுசேரும் இடத்தையும் ரெயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பிறகு கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா கூறியதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன. தற்போது புதிய ரெயில் பாலம் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரெயில் பாலத்தை விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு ரெயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
- திறப்பு விழாவை மண்டபத்தில் நடத்துவதா அல்லது ராமேசுவரத்தில் நடத்துவதா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே பழைய ரெயில் பாலம் அருகில், ரூ.545 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் 650 டன் எடையுடன் செங்குத்து வடிவில் திறந்து மூடக்கூடிய தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புதிய ரெயில் பாலம் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் இருந்து பாம்பன் புதிய பாலம் வழியாக ராமேசுவரம் ரெயில் நிலையம் வரை தனியாக என்ஜின் ஒன்று இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் சோதனை ஏற்பாடாக கடலோர காவல் படை கப்பல் ஒன்றை பாம்பன் தூக்குப்பாலத்தை திறந்து இன்று (வெள்ளிக்கிழமை) கடக்க வைக்கிறார்கள். அதன்பின்னர் மீண்டும் பாலத்தை மூடி ரெயிலை இயக்கி சோதனையும் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தைப்பூச தினமான 11-ந் தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளோ இருக்க வாய்ப்புள்ளது. இந்த புதிய பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார்.
தொடர்ந்து கப்பலில் சென்றபடியே பழைய மற்றும் புதிய பாலங்களை பிரதமர் பார்வையிடுகிறார். அதன் பின்னர் புதிய ரெயில் பாலத்தில் போக்குவரத்தை தொடங்கி வைத்து அந்த ரெயிலில் பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவை மண்டபத்தில் நடத்துவதா அல்லது ராமேசுவரத்தில் நடத்துவதா என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் உறுதி தன்மை குறித்து தொடர் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன.
ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. தொடர்ந்து இரும்பால் ஆன இணைப்பு பகுதியை செங்குத்தாக மேலே தூக்கி இறக்கி கப்பல்கள், ரெயில்களை இயக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் பொது மக்கள் விரைவில் புதிய ரெயில் பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பாம்பன் புதிய ரெயில் பாலம் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து பாம்பன் பாலத்தில் இறுதிகட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் மண்டபம் வந்தனர். அங்கிருந்து புதிய ரெயில் பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலத்தின் உறுதித்தன்மை, தூக்கு பாலத்தின் தரம் உள்ளிட்ட வைகளை இறுதி கட்டமாக ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
திறப்பு விழாவில் பங்கேற்க உள்ள நிலையில் மண்டபம் மற்றும் பாம்பனில் அதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

ராமேசுவரம் பாம்பன் ரெயில் தூக்குப்பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பராமரிப்பு பணிகள் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று முழுமையாக முடிவடைந்துள்ளன. ஆனால் இதுவரை பாம்பன் ரெயில் பாலம் வழியாக பயணிகளுடன் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை நேற்று தெற்கு ரெயில்வேயின் உதவி தலைமை பொறியாளர் ஸ்ரீகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன. ரெயில் பாலம் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துவிட்டதால் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டிய பாலமாகும். அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புகளில் துருப்பிடிக்காமல் இருக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை அலுமினிய பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தூக்குப்பாலம் மிகவும் பழமையாகி விட்டதால் இனி மூன்று மாதத்திற்கு ஒருமுறை பெயிண்ட் அடிக்க முடிவு செய்துள்ளோம்.
புதிய ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்படும் வரை தற்போது உள்ள ரெயில்வே பாலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும்.
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து பாதுகாப்பாக உள்ளது. எனவே அந்த பாலத்தில் வருகிற 26 அல்லது 27-ந்தேதி முதல் மீண்டும் ராமேசுவரத்திற்கு பயணிகளுடன் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமேசுவரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலம், 1914–ம் ஆண்டு கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் பழமையான இப்பாலம், 2006–ம் ஆண்டு அகல பாதையாக மாற்றப்பட்டது. இப்பாதையில் சென்னையில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
சமீபத்தில், பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேசுவரத்துக்கு செல்ல வேண்டிய ரெயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், புத்தாண்டு பரிசாக, பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்தது. பழைய பாலம் 104 ஆண்டுகள் பழையதாக இருப்பதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன.
தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும்.
புதிய பாலத்தின் நீளம் இரண்டரை கி.மீ. ஆக இருக்கும். இரட்டை ரெயில் பாதையாக இப்பாலம் அமையும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும்வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும்.
இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ஸ்லீப்பர் கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படும். இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும்.
இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.#PambanBridge
மண்டபம் - ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் கடலில் 3 கி.மீ. தூரத்துக்கு ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பாலத்தை 146 தூண்கள் தாங்குகின்றன. பாலத்தின் மத்தியில் கப்பல்கள் செல்ல வசதியாக தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை, காரைக்குடியில் இருந்து ரெயில்வே என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டு இரவு-பகலாக சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி நேற்று வரை முடியவில்லை.
இந்த நிலையில் பாலத்தின் உறுதித் தன்மையை சோதிக்கும் வகையில் நேற்று ராமேசுவரத்தில் இருந்து பாம்பனுக்கு 5 கி.மீ., 15 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனை தென்னக ரெயில்வே பாலம் தலைமை பொறியாளர் ரவீந்திரபாபு, மதுரை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் லலித் குமார்மனுஷ்கான் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் ரெயிலை இயக்க தற்போது சாத்தியக்கூறுகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 3-வது நாளான இன்று பெங்களூரில் இருந்து ரெயில்வே என்ஜினீயர்கள் பாம்பனுக்கு வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் சிறப்பு ரெயில் என்ஜின் பாம்பன் பாலத்தில் இயக்கப்பட உள்ளது. அதன் பின் ரெயில்கள் இயக்குவது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
இன்று 3-வது நாளாக பாம்பன் ரெயில் பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக 3-வது நாளாக இன்றும் ராமேசுவரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ராமேசுவரத்துக்கு ரெயில் மூலம் வருவார்கள். பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்போது மண்டபத்திலேயே ரெயில்கள் நிறுத்தப்படுவதால் அங்கிருந்து யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் ராமேசுவரம் செல்கின்றனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. #pambanBridge