என் மலர்
நீங்கள் தேடியது "Panchapalli Dam"
- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது.
- பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் 148 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாலக்கோடு:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது.
50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 48.3 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 140 கன அடியாக உள்ளது.
அதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் 148 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4,500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.
அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் எந்த நேரத்திலும் அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படும் பட்சத்தில் ஆற்றோரும் வீடுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
- பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து நள்ளிரவு திடீரென அதிகரித்துள்ளது. வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
- 3-வது நாளாக சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளியில் சின்னாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இதனால் சின்னாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக கடந்த 17-ந்தேதி அன்று அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே சின்னாற்றில் திறந்து விடப்பட்டது.
இதையடுத்து தளி, அஞ்செட்டி பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பியது. இதில் சில ஏரிகள் நீர்வரத்து அதிகரிப்பால் உடைந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து நள்ளிரவு திடீரென அதிகரித்துள்ளது. வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
இதனால் அணையின் மதகுகள் சட்டரை தாண்டி முழு கொள்ளளை எட்டியதை கவனித்த அணையின் ஊழியர்கள் உடனே வெள்ளஅபாய எச்சரிக்கை ஒலியை அடித்தனர்.
பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி இன்று ஆற்றில் உபரிநீர் 28 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இதனால் 3-வது நாளாக சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தால் பஞ்சப்பள்ளி-மாரண்டஅள்ளி சாலை துண்டிக்கப்பட்டது. சாலைக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பாலக்கோடு-தேன்கனிக்கோட்டை சாலையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.