என் மலர்
நீங்கள் தேடியது "Patel"
- 2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது
- ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இனி இந்தியர்களே அதிகம் இடம் பெறப் போகிறார்கள் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் அதிக அளவில் கிரிக்கெட் ஆடி வருவதாக குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள "Play HQ" என்ற செயலி ஒன்று உள்ளது.
அதில், 2023-24-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளில் பதிவு செய்யப்பட்ட வீரர்களில் 4262 பேர் சிங் என்கிற குடும்ப பெயர்களை கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து, ஸ்மித் என்கிற குடும்ப பெயரை 2,364 பேர் கொண்டுள்ளனர். படேல் என்கிற குடும்ப பெயரை 2323 பேர் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கணிசமானோர் ஸ்மித் என்கிற குடும்ப பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்மித் என்கிற குடும்ப பெயரை விட சிங் என்கிற குடும்ப பெயர் கொண்டோர் ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடம் பிடித்துள்ளனர்.
2018-19 ஆண்டில் ஸ்மித் என்கிற குடும்ப பெயரை சிங் என்கிற குடும்ப பெயர் தாண்டியது. அன்றிலிருந்து இப்போது வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிங் பெயர் கொண்டவரே அதிகமாக உள்ளனர்.
சர்மா, கான், குமார் ஆகிய இந்திய வம்சாவளி குடும்ப பெயர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பதிவு செய்யப்பட்ட முதல் 16 பெயர்களில் இடம் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தற்போது தெற்காசிய வம்சாவளியை சேர்ந்த 70,000 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் முதல்தர, ஆண்கள் மற்றும் பெண்கள் பிக் பாஷ் லீக்கில் (BBL) கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு 100 வீரர்களில், தெற்காசிய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவம் 4.2 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2-3 வயதுடைய சிறுத்தை ஒன்று, குஜராத்தில் ஒற்றுமை சிலைக்கு அருகில் உள்ள கெவாடியா வனப் பகுதிக்குள் நுழைந்தது
- சிறுத்தை திடீரென அடைப்புக்குள் நுழைந்ததில் மான்கள் பீதியடைந்தன
குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை அமைந்துள்ளது. அதை சுற்றி உள்ள ஜங்கிள் சபாரி பகுதிக்குள் கடந்த புத்தாண்டு தினத்தன்று சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.
அந்த சிறுத்தை பிளாக்பக் எனப்படும் கரும்புலி வகை மான் ஒன்றை வேட்டையாடி கொன்றுள்ளது. ஒரு பிளாக்பக் மான் இறந்த அதிர்ச்சியிலேயே மற்ற 7 மான்களும் இறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

2-3 வயதுடைய சிறுத்தை ஒன்று, குஜராத்தில் ஒற்றுமை சிலைக்கு அருகில் உள்ள கெவாடியா வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலய ஜங்கிள் சஃபாரி பூங்காவின் வேலியிடப்பட்ட எல்லைகளைத் தாண்டி வந்துள்ளது. அங்கு பிளக்பக் மான்கள் இருந்த அடைப்புக்குள் நுழைந்து ஒரு மானை வேட்டையாடி உள்ளது.

வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, எட்டு சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டன.
வனத்துறை துணைப் பாதுகாவலர் (டிசிஎஃப்) அக்னீஸ்வர் வியாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுத்தை திடீரென அடைப்புக்குள் நுழைந்ததில் மான்கள் பீதியடைந்தன. பணியில் இருந்த காவலர்கள் அதை விரட்ட முயற்சித்த போதிலும், சிறுத்தை ஒரு கரும்புலியைக் கொன்றது, அதே நேரம் குழப்பம் மற்றும் அதிர்ச்சி மற்ற 7 மான்களின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமை சிலை அருகே உள்ள சூல்பனேஷ்வர் வனவிலங்கு சரணாலயம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது, அங்கு பல சிறுத்தைகள் உள்ளன. இருப்பினும் சஃபாரி பூங்காவிற்குள் சிறுத்தை நுழைவது இதுவே முதல் முறை.
ஜங்கிள் சஃபாரியில் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், நுழைவாயில் மற்றும் அடைப்புக்கு அருகில் உள்ள கேமராக்கள் சிறுத்தை நுழைவதை காட்டுகிறது. சிறுத்தை முழுவதுமாக ஜங்கிள் சஃபாரியை விட்டு வெளியேறிவிட்டதா என்பது இன்னும் உறுதியாக தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி நேற்று ஹனுமன்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரசாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் சீக்கிய கோவில் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தார். குருநானக் தேவுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை, சீக்கிய மதத்தினரின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிக்கவில்லை.
அதனால், 70 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் செய்த இந்த தவறுக்கு தற்போது புதிய பாதையை அமைத்து நான் பரிகாரம் தேட வேண்டியுள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை உங்கள் தீர்ப்புக்கே நான் விட்டு விடுகிறேன் என்று கூறினார்.
இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலடி தந்துள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தி இந்தி மொழியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இறுதியாக தற்போது மோடியின் மனதில் உருவாகியுள்ள எண்ணத்தின்படி, தன்னை மேன்மைப்படுத்தி காட்டுவதற்காக மகாத்மா காந்தியையும் சர்தார் வல்லபாய் பட்டேலையும்கூட இழிவுப்படுத்துவார்’ என அந்த பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாடு விடுதலை பெற்றபோது அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைய வேண்டும். பிரிவினைக்காக காத்திருந்த பாகிஸ்தான் என்ற புதிய நாட்டுக்கு எந்தெந்த பகுதிகள் செல்ல வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்துவதில் பின்னர் இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாக பதவியேற்ற சர்தார் வல்லபாய் பட்டேல் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #demeanGandhi #demeanPatel #RahulGandhi #Kartarpur
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
அவரது போராட்டம் 13-வது நாளை நெருங்கிய நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இட ஒதுக்கீடு போராட்டத்தை வென்றெடுக்க நீங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்று அவரது நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவை ஹர்திக் மாற்றிகொண்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. #HardikPatel #19days