என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pawan kalyan"

    • ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    • வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.

    திருப்பதி:

    மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்து வருகிறது.

    ஆந்திராவிலும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்து சென்ற பிறகு அங்கு ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் பாஜக உள்ளது. ஆனால் ஆந்திராவில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யானின் ஜனசேனா கட்சியுடன் இணைந்து கடந்த தேர்தலை சந்தித்தது. பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை எப்படியாவது பலப்படுத்த வேண்டும் என எண்ணுகின்றனர்.

    இந்நிலையில் பாஜகவுடன் பிரபல திரைப்பட நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் மிகுந்த நெருக்கமாக உள்ளார். இதனால் பாஜக, ஜனசேனா கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.

    கட்சி தொடங்கிய கடந்த 10 ஆண்டுகளில் ஜனசேனா கட்சிக்கு நகர்ப்புறங்களில் அதிக செல்வாக்கு உள்ளது.

    பவன் கல்யாண் செல்லும் இடங்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    அதே நேரம் கிராமப்புறங்களில் ஓரளவு மட்டுமே செல்வாக்கு உள்ளதால் அந்தப் பகுதிகளில் கட்சியை பலப்படுத்த பவன் கல்யாண் முடிவு செய்துள்ளார்.

    ராயலசீமா பகுதியில் அவரது கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பவன் கல்யாண் கடும் விமர்சனம் செய்து பேசி வருகிறார்.

    பவன் கல்யாண் கட்சியால் தெலுங்கானா, ஆந்திராவில் 40 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க. செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது பா.ஜ.க. பவன் கல்யாண் கட்சி தொண்டர்களிடம் உற்சாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வாட்ஸ் அப்-பில் இரண்டு நடிகர்களின் படம் வைப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்ப்பட்டது
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிகுமாரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஏலூர் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் பவன் கல்யாண் ரசிகர்.

    அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஹரிகுமார். இவர் பிரபல நடிகரான பிரபாஸ் ரசிகர் மன்றத்தின் செயலாளராக உள்ளார்.

    ஓவியர்களான இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் அத்திலிக்கு வேலை தேடி வந்தனர். நேற்று மாலை இருவரும் வேலை முடிந்து மது குடித்தனர். அப்போது ஹரிக்குமாரின் செல்போனில் நடிகர் பிரபாசின் படம் வைத்து இருந்தார்.

    இதனைக் கண்ட கிஷோர் உன்னுடைய ஸ்டேட்டஸில் நடிகர் பவன் கல்யாண் படத்தை வைக்க வேண்டும் என கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார் இரும்பு கம்பி மற்றும் கற்களால் கிஷோரை தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்து கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரி குமாரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவன் கல்யாண் ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல முடிவு செய்தார்.
    • ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலிருந்து இவரது யாத்திரை தொடங்குகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி தொடங்கியுள்ளார்.இவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக உடன் கூட்டணியில் உள்ளார்.

    பவன் கல்யாண் ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல முடிவு செய்தார். இதற்காக வாராஹி என்ற ராணுவம் வாகனம் போன்ற பிரத்தியேக வாகனத்தை தயார் செய்துள்ளார்.

    பவன் கல்யாண் தனது வாராஹி வாகனத்தில் ஆந்திராவில் நாளை முதல் 23-ந் தேதி வரை யாத்திரை செல்கிறார். ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலிருந்து இவரது யாத்திரை தொடங்குகிறது.

    இதனையொட்டி குண்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று பவன் கல்யாண் யாக பூஜை செய்தார்.

    புதிய தலைமை அலுவலகத்தில் நேற்று காலை கணபதி ஹோமம், அங்குரார் பணத்துடன் யாகசாலை பூஜை நடந்தது. இந்த யாகசாலை பூஜையில் 30-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

    யாக பூஜையின் போது நடிகர் பவன் கல்யாண் வெள்ளை நிற பட்டு வேஷ்டி அணிந்து தரிசனம் செய்தார்.

    வாராகி யாத்திரை வெறும் ஊர்வலமாக இருக்காது. அடித்தட்டு மக்களை இதன் மூலம் தொடர்பு கொள்வேன். அவர்களின் பிரச்சினைகள் இதன் மூலம் எனக்கு தெரிய வரும்.

    அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து உத்தியை உருவாக்குவேன். 175 தொகுதிகளில் கண்டனக் கூட்டங்களை நடத்துவேன்.

    ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் வாராகி யாத்திரையில் மாணவர்கள் இளைஞர்கள் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

    • அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.
    • பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    திருமலை:

    ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடும் என தெரிகிறது.

    அதற்கேற்ப அக்கட்சியின் தலைவரான நடிகர் பவன்கல்யாண் நேற்று முன்தினம் தனது வாராஹி யாத்திரை தொடங்கினார்.

    கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் காக்கிநாடா அருகே உள்ள கத்திப்புடி பகுதியில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவரது 'வராஹி' எனப்படும் பிரத்யேக நவீன வசதியுடன் கூடிய வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் நானும் ஒருவன். சம்பாதிப்பது மட்டுமே நோக்கமாக இருந்திருந்தால் வெறும் நடிகனாக மட்டுமே இருக்க முடியும்.

    ஆனால் மக்களுக்கு நல்லது செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். எனது பிள்ளைகளுக்காக சேர்த்த சொத்துக்களை விற்று கட்சி தொடங்கி நடத்தி வருகிறேன்.

    தற்போதைய ஆந்திர முதல்வர், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் உட்பட அனைவரும் எனது தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து விமர்சிக்கின்றனர்.

    அடுத்த ஆண்டு கண்டிப்பாக ஜனசேனா கட்சி ஆந்திர சட்டமன்றத்திற்குள் பெருவாரியான எம்.எல்.ஏ.க்களுடன் நுழையும்.

    தேவைப்பட்டால் முதல்வராக அமர்வேன். கூட்டணியுடன் வருவேனோ அல்லது தனித்து வருவேனோ என சில மாதங்களில் தெரிந்து கொள்வீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பவன் கல்யாணின் முதல்வர் பதவி கனவு, சந்திரபாபு நாயுடு தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    பவன்கல்யாண் மற்றும் பாஜக கூட்டணியுடன் ஆட்சியை பிடிக்க சந்திரபாபு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அந்த கட்சிகளுக்கு 80 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இதுபோன்ற பிரசாரத்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பவன் கல்யாண் நடிபில் வெளியான டோலி பிரேமா படம் நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டது.
    • அப்போது படம் பார்க்க வந்தவர்கள் கூச்சலிட்டு, திரையை கிழித்தும் சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

    ஆந்திராவின் பிரபல நடிகர் பவன் கல்யாண் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு டோலி பிரேமா என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான பவன் கல்யாண் ஜனசேனா என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

    ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியையும், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் உள்ள குறைகளை சுற்றி காட்டி வராகி பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாண் நடித்த டோலி பிரேமா திரைப்படம் ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டது.

    நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் டோலி பிரேமா படத்தை கண்டு ரசித்தனர். நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள திரையரங்கில் டோலி பிரேமா திரையிடப்பட்டது. அப்போது படம் பார்க்க வந்தவர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். திரையரங்கின் திரையை கிழித்தும் சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

    இதனை தடுக்க வந்த திரையரங்க ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரகளையில் ஈடுபட்ட நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து திரையரங்க நிர்வாகிகள் கூறுகையில் நடிகர் பவன் கல்யாண் ரசிகர்கள் இந்த செயலில் ஈடுபடவில்லை. டோலி பிரேமா திரைப்படத்திற்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் சதி செய்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண்.
    • இவர் தற்போது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் அரசியல் என பரபரப்பாக இயக்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ப்ரோ, ஹரி ஹர வீரா மாலு, உசாத் பகத் சிங் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இவருக்கென பல லட்சம் ரசிகர் பட்டாளமே உள்ளது.



    இந்நிலையில் பவம் கல்யாண் தற்போது சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இவர் இன்ஸ்டாவில் இணைந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் அவரை பின் தொடர தொடங்கினர். ஒரு மணி நேரத்தில் 15 லட்சம் ஃபாலோவர்கள் பின் தொடர்ந்துள்ளனர். இது இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையாக கூறப்படுகிறது.

    • அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
    • 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏலூரில் ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாண் யாத்திரை சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்:-

    ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 18000 பெண்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

    இது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏன் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. வீட்டில் உள்ள பெண்கள் காதலித்து வருகிறார்களா அல்லது விதவைப் பெண்களா என்ற விவரங்கள் சமூக விரோதிகளின் கைகளுக்கு வழங்கப்படுகிறது .

    விவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகு பெண்களை காதல் வலையில் விழ வைத்து கடத்திச் செல்வது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பவன் கல்யாண் பேச்சுக்கு விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இதுகுறித்து மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி பத்மா கூறியதாவது:-

    ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசி உள்ளார். அவருக்கு யார் இந்த புள்ளி விவரங்களை வழங்கியது. எந்த மத்திய புலனாய்வு அதிகாரி இவருக்கு சொன்னார்.

    நடிகர் பவன் கல்யாண் போன்றவர்கள் பள்ளி காதல், கல்லூரி காதல் என சினிமாவில் நடிக்கிறார்கள்.

    அதனால்தான் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. 18 வயது பெண்கள் காணாமல் போவதற்கு இவர்களை போன்றவர்கள் நடித்த படங்கள் தான் காரணம்.

    பவுன் கல்யாண் பேசிய புள்ளி விவரத்திற்கு ஆதாரங்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அரசியல் ஆதாயத்துக்காக பெண்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். 10 நாட்களுக்குள் ஆதாரம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தற்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க வாக்குகளை பொருட்படுத்தாமல் உதவி செய்து வருகிறது.

    ஆந்திரா மாநில முன்னாள் முதல்-அமைச்சர் நடிகர் என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜ.க.வின் புதிய மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று முதன் முதலாக விஜயவாடா வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் பா.ஜ.க.வினர் பூக்களை தூவி வரவேற்றனர்.

    அப்போது அவர் கூறியதாவது:- ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிட உயர்நிலைக் குழு கவனித்துக் கொள்ளும். ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்துவேன்.தற்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. எதிர்காலத்திலும் அவர்களுடன் கூட்டணி தொடரும்.


    புரந்தேஸ்வரி மீது மலர்களை தூவிய மக்கள்

    ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க வாக்குகளை பொருட்படுத்தாமல் உதவி செய்து வருகிறது. மத்திய அரசு வீட்டு வசதி திட்டங்களுக்காக கடந்த 9 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 65 சதவீதம் வீடுகள் தற்போது கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 35 சதவீத குடியிருப்புகள் கூட தயாராக இல்லை.

    ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் காரணமாக மாநிலத்தில் சாலைகள் மோசமாக உள்ளன. தேசிய திட்டமான போலவரம் பாசன திட்டத்தின் பணிகள் மெதுவாக நடக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி அரசு திட்டமிட்டபடி அதனை முடிக்க முடியாவிட்டால் அதன் கட்டுமானத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மறைமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவியின் சகோதரியான புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி குறித்து எதுவும் பேசாதது அந்த கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
    • இவர் இளைஞர் நலத்துறை அமைச்சரும் நகரி எம்.எல்.ஏவுமாக இருக்கிறார்.

    ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2 வாரமாக 'யாத்ரா' என்ற நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நடை பயணத்தின் போது முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடும் விமர்சனம் செய்தார்.



    இதற்கு ரோஜா பதில் கூறுகையில், "பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறாது. பவன் கல்யாண் முதல்- மந்திரிக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் போது சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது என்று பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்திலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது.

    இந்தநிலையில் சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் ரோஜா பேசிய வீடியோவை வெளியிட்டு நான் ஆபாச நடிகைதான். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை. உங்களை போல் இல்லாமல் நான் என்ன செய்ய விரும்பினாலும் அதை வெளிப்படையாகவே செய்வேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.



    • கிராம வார்டு தொண்டர்களின் செயலாளர் அமைப்பை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு எந்த தகுதியும் இல்லை.
    • நாரா லோகேஷ் குடித்துவிட்டு நீச்சல் குளத்தில் 10 சிறுமிகளுடன் நடனமாடும் வீடியோக்களும் இணையத்தில் உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திரா முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி அடுத்த வெங்கடகிரியில் ஒய்.எஸ்.ஆர். நேதன்னா நேஸ்தம் திட்ட 5-வது தவணை தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் வெளிச்சம் கொண்டு வரவும், அவர்களுக்கு உதவவும் ஒய்.எஸ்.ஆர்.நேதன்னா என்ற திட்டத்தில் மூலம் மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

    ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள 80 ஆயிரத்து 686 கைத்தறி நெசவாளர்களுக்கு கணக்கில் நேரடியாக ரூ.193.64 கோடி டெபாசிட் செய்யப்படும்.

    ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் 4 திருமணங்கள் செய்து கொண்டவர். அவர்அரசை விமர்சிக்க தகுதியற்றவர். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு 4 ஆண்டுகளில் விவாகரத்து செய்தார். மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர் இருக்கும் போதே மற்றொரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார்.

    கிராம வார்டு தொண்டர்களின் செயலாளர் அமைப்பை விமர்சிக்க பவன் கல்யாணுக்கு எந்த தகுதியும் இல்லை.

    சந்திரபாபு நாயுடுவின் வளர்ப்பு மகன்தான் பவன் கல்யாண். பாலகிருஷ்ணாவின் மருமகனும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் குடித்துவிட்டு நீச்சல் குளத்தில் 10 சிறுமிகளுடன் நடனமாடும் வீடியோக்களும் இணையத்தில் உள்ளது.

    அவர்கள் அரசைபற்றி விமர்சிக்க தகுதியற்றவர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 'வினோதய சித்தம்' படத்தை தற்போது 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.
    • தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர்.

    சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் . 


    தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் தயாராகியுள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.




    இந்நிலையில் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பவன் கல்யாண் பேசியதாவது, 'ப்ரோ' நிகழ்ச்சிக்கு வந்த எங்கள் குடும்பத்தினருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தக் கதையைக் கேட்டதும் சமுத்திரக்கனியின் தீவிர ரசிகனாகிவிட்டேன். ஏனென்றால் தெலுங்கு மொழியின் மீது நமக்கு பிடிப்பு மிகக் குறைவு. ஆங்கிலம் கலந்து பேசுவோம். 


    எனக்கு தெலுங்கில் பத்து வாக்கியம் கூட பேச வராது. இடையில் நான்கு ஆங்கில வாக்கியங்கள் பேசுவேன். அதை சரி செய்து கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்குனர் சமுத்திரக்கனி. அவர் நமது மொழியும் கூட இல்லை, முதல் நாளே ஸ்கிரிப்ட் ரீடிங்கிற்கு போனார். தெலுங்கை கற்று கொண்டார். நீங்கள் தெலுங்கு கற்று இவ்வளவு செய்ததால். நான் தமிழ் கற்று ஒரு நாள் தமிழில் உரை நிகழ்த்துவேன். தமிழ் கற்று திருக்குறள் சொல்ல விரும்புகிறேன். தெலுங்கு மொழியைக் கற்று எங்கள் கண்களைத் திறந்தவர் நீங்கள். நீங்கள் தெலுங்கை நன்றாகக் கற்றுக்கொண்டீர்கள். நம் தாய்மொழியில் இலக்கியம் மிகவும் வளமானது. அது தெரிந்தால். பல சிறந்த படங்களை எடுக்கலாம். மேலும் நம் மொழியில் தேர்ச்சி பெற்று இப்படி ஒரு படத்தை எடுத்த சமுத்திரக்கனிக்கு நன்றி. தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான் காரணம்.

    எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும்போது தான், அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்துக்குள் அடைத்து விடும். சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தெலுங்குப் படங்களை இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் ஏராளமான தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார். 'ப்ரோ' படத்தில் கூட பல மொழிபேசும் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புதி விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் 'ஆர்ஆர்ஆர்' போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்' என்று பவன் கல்யாண் பேசினார். 

    தமிழ்ப் படத்தில் தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) சமீபத்தில் ஒரு புதிய விதியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • 'வினோதய சித்தம்' படத்தை தற்போது 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார்.
    • பவன் கல்யாண், சாய் தேஜ் நடிப்பில் உருவான இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் 'வினோதய சித்தம்'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை 'ப்ரோ' என்ற பெயரில் சமுத்திரக்கனி தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார்.



    தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் இப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இந்நிலையில் ப்ரோ திரைப்படம் ஐஎம்டிபி-யில் நல்ல வரவேற்பை பெற்று 10-க்கு 9 மதிப்பெண் பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக இயக்குனர் சமுத்திரக்கனி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    ×