என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paytm"

    • பேடிஎம் மற்றும் கேஷ் ப்ரீ நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.
    • போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியர்கள் போலி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் சுமார் 1,100 மின்னணு கடன் செயலிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமாக 600 கடன் செயலிகள் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. சீன கடன் செயலிகளும் இதில் அடங்கும்.

    இந்த செயலிகள், இந்தியர்களை கடன் வலையில் வீழ்த்தி, ரூ.500 கோடிவரை முறைகேடாக சம்பாதித்துள்ளன. அவர்களின் மிரட்டலுக்கு 52 இந்தியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்நிலையில், சீனர்களால் நடத்தப்படும் மொபைல்போன் மூலம் சட்ட விரோதமாக கடன் வழங்கும் செயலிகள் குறித்த வழக்கு தொடர்பாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலியான ரேசர்பே, பேடிஎம் மற்றும் கேஷ் ப்ரீ நிறுவனங்களில் ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 6 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.

    சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.17 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனத்தில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்தியர்களை போலி இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பேடிஎம் நிறுவன வருவாய் அறிக்கை வெளியாகி இருக்கிறது.


    டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் பேடிஎம் நிறுவனம் இண்டர்நெட் மூலம் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி, விமான டிக்கெட், ரெயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றுக்கு கட்டணம் செலுத்தும் வசதி, செல்போன், டி.டி.ஹெச். போன்ற சேவைகளை ரீசார்ஜ் செய்யும் வசதிகளை வழங்கி வருகிறது.

    பேடிஎம் நிறுவனம் 2021-2022 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

    பேடிஎம் நிறுவனத்துக்கு இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் 64 சதவீதம் வருவாய் உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் ரூ.1,090 கோடி வருவாய் கிடைத்துள்ளது. யு.பி.ஐ. அல்லாத பண பரிவர்த்தனை சேவை இந்த காலாண்டில் 54 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நிதி சேவை மற்றும் இதர வருவாய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

     பேடிஎம்

    பரிவர்த்தனை மற்றும் நிதியில் சேவைப்பிரிவு மூலம் வருமானம் 69 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்து ரூ.842.60 கோடியாக உயர்ந்துள்ளது.
     இதேபோன்று வர்த்தகம் உள்ளிட்ட வேறு சேவைப்பிரிவு வருமானம் 47 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.243.80 கோடியாக உள்ளது.

    பை நவ் பே லேட்டர் (இப்போது வாங்குங்கள், பணத்தை பின்னர் செலுத்துங்கள்) என்ற திட்டத்தின் மூலம் நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை பேடிஎம் அறிமுகம் செய்து இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் இரண்டாவது காலாண்டில் 28 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இது, கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 714 சதவீதம் அதிகம் ஆகும்.

    பங்குகள் பட்டியலிடப்பட்ட பின்பு அதிரடியாக சரிவை கண்டதால் விஜய் சேகர் சர்மா கண்ணீர் விட்டார். கண்களில் வழிந்தோடிய கண்ணீரை அவர் தனது கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டார்.
    மும்பை:

    ரூபாய் மதிப்பிழப்பிற்கு பிறகு டிஜிட்டல் சேவையில் பேடிஎம் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.இந்நிறுவனத்தை தொடங்கியவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா தனது நிறுவன பங்குகள் சரிவை கண்டதால் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 8-ம் தேதி அன்று பங்குகளை வெளியிட்டது.

    பங்கு வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் 18,300 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டது. இதில் 8,300 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டின் மூலமும், மீதம் உள்ள 10,000 கோடி ரூபாய் அதன் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளார்களிடம் இருந்தும் விற்பனை செய்தும் திரட்ட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி பங்கு வெளியிடப்பட்டு நவம்பர் 10-ம் தேதி அன்று முடிவடைந்தது.இன்று பங்கு சந்தையில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டன.

    பேடிஎம் ஒரு பங்கின் மதிப்பு 2,080 ரூபாய் முதல் 2,150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இதன் விலை தொடக்கத்திலேயே சரிவை கண்டது.

    ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 27 சதவீதம் வரை பங்குகள் சரிந்தன. இதனால் பேடிஎம் பங்குகள் வாங்கிய முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

    பங்குகள் பட்டியலிடப்படும் நிகழ்வில் நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா கலந்து கொண்டார்.அப்போது பங்குகள் பட்டியலிடப்பட்ட பின்பு அதிரடியாக சரிவை கண்டதால் அவர் கண்ணீர் விட்டார். கண்களில் வழிந்தோடிய கண்ணீரை அவர் தனது கர்ச்சிப்பால் துடைத்துக் கொண்டார்.

    ஆன்லைனில் ஐபோன் வாங்க முயன்று ரூ.26,000 விலையுள்ள சாதனத்திற்கு பேடிஎம் மூலம் ரூ.73,000 கொடுத்த வாலிபர், தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி புலம்புகிறார். #iPhone #SCAM


    இந்தியர்கள் விலை குறைந்த பொருட்களை வாங்க ஆர்வம் செலுத்துவது புதிதல்ல. எனினும் விலை குறைந்த பொருட்களை வாங்கும் அனுபவம் எப்போதும், அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதில்லை. ஆன்லைன் வர்த்தக பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இதன் மூலம் பணம் இழப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    அந்த வரிசையில் சித்தார்த் என்ற டெக்கி புதிதாக இணைந்திருக்கிறார். தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வரும் சித்தார்த் ஓ.எல்.எக்ஸ் (OLX) வலைத்தளத்தில் ஐபோன் விளம்பரம் ஒன்றை பார்த்து, அதனை வாங்க திட்டமிட்டுள்ளார். இவர் ஆன்லைனில் பார்த்த ஐபோன் 8 பிளஸ் மாடலின் விலை ரூ.26,500 என நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், சித்தார்த் அதனை உடனடியாக வாங்க ஆர்வம் காட்டினார்.

    சந்தையில் புத்தம் புதிய ஐபோன் 8 பிளஸ் (64 ஜி.பி. மாடல்) ரூ.68,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விலை குறைவாக இருந்ததால் ஐபோன் 8 பிளஸ் மாடலை வாங்க அந்த விளம்பரத்தை பதிவிட்ட சாஹில் குமாரை சித்தார்த் தொடர்பு கொண்டு பேசினார். மறுபுறம் அழைப்பை ஏற்று பேசிய நபர் பெங்களூரு கெம்பகவுடா விமான நிலையத்திற்கு வந்து பணம் கொடுத்து ஐபோனை பெற்றுக் கொள்ள கூறியிருக்கிறார்.



    இதை நம்பி விமான நிலையம் விரைந்த சித்தார்த் ஐபோனினை விற்க தயாராக இருந்த சாஹிலை தொடர்புகொண்டார். மறுபுறம் பேசிய சாஹில் வேலை சுமை காரணமாக வெளியில் வர முடியாது என்றும், ஐபோனிற்கான முதல் தவணையாக ரூ.5,000 செலுத்தி சுங்க பிரிவில் ஐபோனை பெற்றுக் கொண்டு மீதித் தொகையான ரூ.21,500 செலுத்த சித்தார்த்திடம் கேட்டார். 

    ஆர்வ மிகுதியில் சித்தார்த் தனது பேடிஎம் அக்கவுன்ட் மூலம் சாஹில் அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினார். எனினும், தனக்கு பணம் வரவில்லை என கூறியதால் சித்தார்த் தொடர்ச்சியாக 11 தவணையாக சாஹில் அக்கவுன்ட்டில் மொத்தம் ரூ.73,091 தொகையை செலுத்தியிருக்கிறார்.

    பின் தனக்கான ஐபோனினை வாங்க விமான நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்து பின் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். வீடு திரும்பிய சித்தார்த் தனக்கு நடந்த சம்பவத்தை நண்பரிடம் பகிர்ந்து கொண்ட பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டார். ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் உடனடியாக காவல் நிலையம் விரைந்த சித்தார்த் சாஹில் மீது புகார் தெரிவித்தார்.

    காவல் நிலையத்தில் சாஹில் மீது இந்திய குற்றப்பரிவு எண் 420 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ×