என் மலர்
நீங்கள் தேடியது "Pedestrians"
- குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
- விக்டோரியா ரோட்டில் எந்த நேரமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்ற வண்ணம் இருக்கும்.
பெங்களூரு:
பெங்களூருவில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோரங்களில் நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சாலையின் இருபுறங்களிலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக இந்த நடைபாதை அமைக்கப்படுகிறது. நகரின் முக்கியமான சாலைகளில் உள்ள நடைபாதைகளில் செடிகள் வைத்தும், தொட்டிகள் வைத்தும், இரும்பால் ஆன தூண்கள் வைத்தும் மாநகராட்சியால் அழகு படுத்தப்படுகிறது.
ஆனால் நகரில் பல பகுதிகளில் நடைபாதையின் மேலே போடப்பட்டு இருக்கும் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து பாதசாரிகள் நடந்து செல்ல முடியாதபடி உள்ளது. விக்டோரியா லே-அவுட், 1-வது கிராசில் அமைக்கப்பட்டு இருந்த நடைபாதையே மாயமாகி இருக்கிறது. நடைபாதையையொட்டி ஒருபுறத்தில் செடிகள் முளைத்து நிற்பதுடன், அங்கு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இன்னும் சிறிது தூரத்தில் நடைபாதையே தெரியாத அளவிற்கு அதன்மீது கட்டிட கழிவுகள், மண் குவியல் கிடக்கிறது. நடைபாதையில் கழிவுகள் கிடப்பதால், அசுத்தமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் சாலையில் இறங்கி செல்கிறார்கள். விக்டோரியா ரோட்டில் எந்த நேரமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சென்ற வண்ணம் இருக்கும்.
பாதசாரிகள் கொஞ்சம் கவனக்குறைவாக சென்றாலும், அவர்கள் மீது வாகனங்கள் மோதி விட வாய்ப்புள்ளது. எனவே பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாக அங்கு நடைபாதை அமைக்க வேண்டும் என்றும், ஏதேனும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக நடைபாதை அமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது.
- பனிப்பொழிவின் காரணமாக திருவாரூர் ெரயில் நிலையத்தை முழுமையாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது.
காலை 8 மணிக்குப் பின்னரும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர்.
மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக திருவாரூர், கூத்தாநல்லூர், மாங்குடி, நன்னிலம், கொரடாச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
பனிப்பொழிவின் காரணமாக திருவாரூர் ெரயில் நிலையத்தை முழுமையாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.
மேலும் தற்போது சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்கள் முழுவதுமாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.
இதேபோன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் முழுவதும் பனி மூட்டத்தின் காரணமாக குளம் முழுவதும் மூடுபனியால் மறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடுமை யான பனிப் பொழிவின் காரணமாக கோவிலுக்குச் செல்ப வர்களும்மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலையில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர்.