search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perur pateeswarar temple"

    • தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
    • தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கோவை- பேரூர் பட்டீசுவரர் திருக்கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த நீதிமன்றத்தை நாடவேண்டிய அவலம் உள்ளது. நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்த பின்னரும் மேல்முறையீடு செய்யப்பட்டு இன்று அவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.

    நல்லத் தீர்ப்பு வருமென நம்பிக்கையோடிருப்போம்.

    சமஸ்கிருதத்தை தேவமொழி என நம்பும் சங்கப் பரிவாரங்கள் தமிழ்நாட்டில் வலுப்பெற்றால், தமிழ் - தமிழர் நிலை என்ன ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    தமிழில் வழிபாடு மற்றும் குடமுழுக்கு நடத்துவது கடவுள் நம்பிக்கையுள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும்.

    அரசமைப்புச் சட்டம் வழங்கும் அந்த உரிமையை நீதிமன்றம் பாதுகாக்குமென நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.



    • கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
    • கோவையில் இருந்து பேரூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    பேரூர்:

    கோவை மாவட்டம் பேரூரில் பிரசித்தி பெற்ற பச்சை நாயகி உடனமர் பட்டீசுவரசுவாமி கோவில் உள்ளது. மேலைச்சிதம்பரம் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நடந்தது.

    ராஜகோபுரம், விமான கோபுரங்கள் உள்பட அனைத்து பகுதிகளிலும் வர்ணம் பூசப்பட்டு தற்போது கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து வருகிற 10-ந்தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான கும்பாபிஷேக விழா தொடங்கி நடந்து வருகிறது.

    இன்று காலை பிள்ளையார் வழிபாடு, புனித தீர்த்தங்கள் மற்றும் அக்னி அழைத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 4.35 மணிக்கு முதற்கால யாக வேள்வி பூஜை தொடங்குகிறது.

    8-ந் தேதி காலை 8.45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 108 மூலிகை பொருட்கள் ஆகுதி, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால வேள்வி, மலர் போற்றுதல் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    9-ந்தேதி காலை 9 மணிக்கு நான்காம் கால வேள்வியும், மாலை 4.15 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜை, இடைகலை, பிங்கலை பூஜைகளும் நடக்கின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 10-ந் தேதி காலை 9.05 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடக்கிறது. அன்று காலை 5.45 மணிக்கு ஆறாம் கால வேள்வி பூஜையும், காலை 9.50 மணிக்கு ராஜகோபுரம் அனைத்து விமானங்கள் மற்றும் திருச்சுற்று தெய்வங்கள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழாவும், 10.05 மணிக்கு பட்டிப்பெருமான், பச்சைநாயகி அம்மன், நடராச பெருமான், தண்டபாணி ஆகிய மூலமூர்த்திகள் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பேரூருக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட உள்ளது. 

    கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் பாடல்பெற்ற ஸ்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரூர் என்னும் பாடல்பெற்ற ஸ்தலம். நால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இங்கு “நடராஜப்பெருமான்“ ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

    முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம்.அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . . .அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். இதைப் பார்த்த ஒருவன் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்தவர்தான் நமது பட்டீஸ்வரர்.

    கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்தவர் இவர். இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த நிலை, . . .மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக் கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்பதுபோல் கங்கை, அன்னமும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள்,

    இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப் படுகின்றன.இதையெல்லாம் பார்த்த மக்கள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க ளைச் சொறிந்து கொண்டிருக் கின்றன. ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத் தன்ற கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்னன் திப்பு சுல்தான்.

    இந்தக் கோயில் அதிசயங்களை எல்லாம் பார்க்க வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்தை இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் சிவலிங்கம் அடிக்கடி அசையும் என்று, இதை நம்பாமல் சிவலிங்கத்தின் மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்னன் திப்பு சுல்தான் அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கினறன. நெருப்பின்மீது கைகள் வைப்பதுபோல் உணர்ந்து துடித்திருக்கிறான்.

    கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத் திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.

    கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்.

    இவனைப்போன்றே ஹதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்பதாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.இக்கோயிலின் ஸ்தல விருட்சம் அரச மரமாகும்.

    இங்குள்ள அம்மனின் பெயர் பச்சை நாயகியாகும்.பச்சை நிறமாகிய மரகதக் கல்லில் அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள்.அன்னையின் அன்புமுகத்தைப்பார்த்து கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அதன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல்வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன. அற்புதமாக கலை நுட்பத்துடன் காண்போர் வியக்கும் வண்ணம் சிங்கத்தின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள். இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோயிலின் வட பக்கம் உள்ள பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல, தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது.

    நால்வரில் ஒருவராகிய சுந்தரர், இங்குள்ள பட்டீஸ் வர்ரை“ வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம். எப்போதுமே சுந்தரரிடம்“ ஒரு நல்ல குணம் உண்டு.எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார்.ஏன் என்றால், இவர் இறைவனின் தோழன் அல்லவா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம். செல்வ செழிப்போடு இருந்த ஈசனுக்கே ஒருமுறை பணம் தட்டுப்பாடாம். சுந்தரர் வந்தால், பணம் கேட்பானே என்ன செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர் சுந்தரரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக நிலத்தில் நாற்று நடும் கூலித் தொழிலாளியாய், “பச்சையம் மனுடன் சேர்ந்து நாற்று நடும்போது சுந்தரர் பார்த்து விடுகின்றார். அதை பார்த்த சுந்தரர் பாட்டு பாடவைத்து மகிழ்ந்துள்ளார்.

    பேரூரில் இறைவனும் இறைவியும் நாற்று நட்ட வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்கள் ஆணி மாதத்தில்வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாகமாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள். 
    ×