search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pilgrims Gathering"

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.
    • ஆவணி திருவிழா என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமான் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை நாள், நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ஆவணித் திருவிழா நடைபெற்று வருவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்தும், சிலர் பரிகார பூஜைகள் செய்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலை மோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினம், நாளை கிருஷ்ண ஜெயந்தி, ஆவணி திருவிழா என்பதாலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

    வழக்கம் போல் அதி காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியால் போக்கு வரத்து ஸ்தம்பித்தது. ஆனாலும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வாறு சரி செய்தனர்.

    பக்தர்கள் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் போலீஸ் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×