என் மலர்
நீங்கள் தேடியது "Pinarai Vijayan"
- கேரள சாகித்ய அகாடமி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள இவர், காவல்துறையில் 30 ஆண்டுகள் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
- நையாண்டி மற்றும் கார்ட்டூன் துறையில் முத்திரை பதித்தவர் சுகுமார் என்று பினராயி விஜயன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில பிரபல கார்ட்டூனிஸ்ட் மற்றும் நையாண்டி கலைஞராக திகழ்ந்தவர் சுகுமாரன் பொட்டி. இவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1996-ம் ஆண்டு, வாயில் வண்ணத்து கொத்தக்கு பாட்டு என்ற படைப்புக்காக கேரள சாகித்ய அகாடமி விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ள இவர், காவல்துறையில் 30 ஆண்டுகள் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக சுகுமார், காலமான நிலையில், அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நையாண்டி மற்றும் கார்ட்டூன் துறையில் முத்திரை பதித்தவர் சுகுமார் என்று பினராயி விஜயன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
- கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
- நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.
தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.
அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.
மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.
பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.
இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .
கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.
சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.
சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
- தற்போது வரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் உடல்கள் அடங்கும்.
- 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இன்னும் 206 பேரை காணவில்லை.
கேரள மாநிலம் வயநாட்டில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. கடந்த 29-ந்தேதி இரவு கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. 30-ந்தேதியில் இருந்து மீட்புப்பணிகள் தொடங்கின. தற்போது வரை மாயமான மக்களை தேடுதல் மற்றும் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப்பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "தற்போதுவரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் உடல்கள் அடங்கும். அவற்றில் 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேரை காணவில்லை. 81 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பஞ்சாயத்து சார்பில் இறுதிச்சடங்கு நடத்தப்படும். பாதுகாப்பான பகுதி கணடறியப்பட்டு நகர்ப்புறம் உருவாக்கப்படும்.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
- திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார்.
- சமூக நீதி வரலாற்றின் முதல் வெற்றி விழா நகரமான வைக்கம் நகரில் தமிழகம், கேரள அரசு இணைந்து கொண்டாடுவது சிறப்பு என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோவிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து செல்லவே கூடாது என்னும் கொடிய தடை இருந்தது. அந்தத் தடையை நீக்கக்கோரி 1924-ம் ஆண்டு வைக்கம் போராட்டம் நடைபெற்றது.
வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதால் தந்தை பெரியார் "வைக்கம் வீரர்" எனப் போற்றப்பட்டார்.
கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோவில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. தந்தை பெரியார் சமூகநீதி காக்க போராடிப் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், தந்தை பெரியா ருக்கு வைக்கத்தில் நினைவுச் சின்னம் அமைக்க உத்தரவிடப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடத்தை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.8 கோடியே 14 லட்சம் ரூபாயில் புனரமைக்கப்பட்டு உள்ளது. அங்கு புதுப்பொலிவாக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நினைவகத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருதினை மைசூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மஹாதேவாவுக்கு, விருதுடன் ரூ.5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார்.
முதலில் மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு தமிழில் உரையாற்றினார்.
தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் எடுத்த ஊரில் இன்றைக்கு புகழ் மாலை சூட்டி இருக்கக் கூடிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது தான் பெரியாரின் வெற்றி. பெரியார் இயக்கத்தின் வெற்றி. திராவிட இயக்கத்தின் வெற்றி.
அந்த வகையில் சமூக நீதியின் வரலாற்றையும் இந்த நாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். பெரியார் தொடங்கிய திராவிட இயக்கத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க. தலைவரான நான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்போடு, இந்த நினைவகத்தை திறந்து வைப்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரலாற்று பெருமையாக அமைந்துள்ளது.
இந்த நேரத்தில் என் நெஞ்சின் அடி ஆழத்தில் ஒரு சின்ன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், இந்த காட்சியை காண முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் நம்மிடையே இல்லையே என்ற எண்ணம் தான்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6-ம் நாள் 'தோள் சீலை' போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. நானும் பினராயி விஜயனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். வைக்கம் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டு பேசினேன்.
2023 ஏப்ரல் 1 அன்று கேரள அரசின் சார்பில் மிகச் சிறப்பான விழாவாக ஏற்பாடு செய்து, என்னையும் முதலமைச்சர் பினராயி விஜயன் அழைத்திருந்தார்.
இப்போது எங்கள் அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கிறார் பினராயி விஜயன்.
இந்திய அளவில் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கக் கூடியவர் பினராயி விஜயன். பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டுவதற்கான அனுமதியை தந்தது முதல், எல்லா முன்னெடுப்புகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
அவருக்கும் கேரள அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் என்னுடைய அன்பையும், மரியாதையையும், நன்றியையும் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ, அதைப்போலவே இந்த நினைவகத்தையும் கம்பீரமாக அழகியலோடு, அறிவுக் கருவூலமாக உருவாக்கி இருக்கக்கூடிய அமைச்சர் எ.வ.வேலுவை மனதார பாராட்டுகிறேன். இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்ட செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமி நாதனுக்கும் என்னுடைய பாராட்டுகள்.
கேரளம் இயற்கை எழில் கொஞ்சக் கூடிய தளம். இது சிறப்புக்குரிய ஒரு சுற்றுலாத் தலம். கல்வியிலும், அரசியல் விழிப்புணர்ச்சியிலும் முன்னேறி இருக்கக்கூடிய மாநிலம் கேரளம். அப்படிப்பட்ட மண்ணில் சமூக அரசியல் போராட்ட வெற்றியின் சின்னமாக இந்த வைக்கம் நினைவகம் உருவாகி இருக்கிறது.
கேரளாவுக்கு வருகிற எல்லோரும் கட்டாயம் இந்த வைக்கம் நினைவகத்தை பார்த்து, ஒடுக்கப்பட்ட மக்கள் அடிமை விலங்கை உடைத்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம். அதனுடைய ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் மொழி, உணர்வுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடி, சாதனைப் படைத்த தேவநூர மஹா தேவாவுக்கு முதலாவது வைக்கம் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
வைக்கம் போராட்ட நினைவகங்களையும் மிக விரைவில் வெளியிட இருக்கிறோம். பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரை பற்றி, அவரது சிறப்பு பற்றி சொல்லும்போது, குறிப்பிட்டதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஒருவர் புறப்பட்டு ஓயாமல் உழைத்து, உள்ளத்தை திறந்து பேசி எதுக்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ள செய்வதில் வெற்றி பெற்ற வரலாறு இங்கே இல்லாமல் எங்கும் இருந்ததில்லை என்று சொன்னார்.
இப்போது நவீன வளர்ச்சிகளால் பாகுபாடுகளை களைய முடிவதில்லை. வெற்றியின் சின்னமாக வைக்கம் நினைவகம் அமைந்துள்ளது. விரைவில் அஞ்சல் தலையும் வெளியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர்கள் துரை முருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன், கேரள மந்திரிகள் வி.என். வாசவன், சஜிசெரியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், பிரான்சிஸ் ஜார்ஜ் எம்.பி, சி.கே. ஆஷா எம்.எல்.ஏ, கோட்டயம் கலெக்டர் ஜான்வி, சாமுவேல், வைக்கம் நகர்மன்ற தலைவர் பிரீத்தா ராஜேஷ், நகர்மன்ற கவுன்சிலர் ராஜசேகர் பங்கேற்றனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். கேரள மாநில தலைமை செயலாளர் சாரதா முரளிதரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார்.