என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic rice"

    • ‘பிரிஞ்சி' என்ற சைவ பிரியாணி கடைகள்தான் கைகொடுத்து வருகின்றன.
    • ‘பிரிஞ்சி' கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் குடும்ப செலவுகளை சமாளிப்பதற்காக கணவன், மனைவி என 2 பேரும் வேலைக்கு செல்லவேண்டிய நிலை இருக்கிறது. இதனால் காலையில் வேலைக்கு புறப்படுவது முதல் அலுவலகம், கம்பெனிகளுக்கு சென்றடைவது வரை பெரும்பாலான தம்பதிகள் கடுமையான நேர நெருக்கடியை சந்திக்கிறார்கள். இதுஒருபுறம் இருக்க, பிள்ளைகளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

    இத்தனை வேலைகளுக்கு இடையே சமையல் செய்வது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த இல்லத்தரசிகள் வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் காலை உணவு சமைத்துவிட்டு, மதிய உணவுக்கு விடுமுறை அளித்துவிடுகிறார்கள். இதுபோன்ற சமயத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதான சாலைகளில் புதிது, புதிதாக முளைத்துள்ள 'பிரிஞ்சி' என்ற சைவ பிரியாணி கடைகள்தான் கைகொடுத்து வருகின்றன.

    'பிரிஞ்சி' கடைகளில் ரூ.20, ரூ.30, ரூ.40 என வெவ்வேறு கட்டணங்களில் பிரியாணி பொட்டலம் போட்டு விற்கப்படுகிறது. மிகவும் குறைந்த செலவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பசியாறிவிடமுடியும் என்பதால் பெரும்பாலானவர்களின் பிரதான தேர்வாகவும் இவை இருக்கின்றன.

    இந்தநிலையில், 30 ரூபாய் பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் பொய்யான தகவல். சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் இருப்பது பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சியல்ல. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வதந்தி பரப்பி வருகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் சித்தாண்டி பாளையத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த கடையில் வாங்கப்பட்ட ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதி பொதுமக்கள் கலப்படம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அரிசியை தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியை கலப்படம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பொதுமக்கள் பிளாஸ்டிக் அரிசி வினியோகம் செய்ததாக எத்திலோடு ரேஷன் கடை முன்பு திரண்டு புகார் அளித்தனர்.
    • இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அரிசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு ரேஷன் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி விநியோகம் செய்ய ப்பட்டது. இந்த அரிசியை வாங்கி சென்ற பொதுமக்கள் வீட்டில் அரிசி ஊற வைத்த போது அதில் ஒரு சில அரிசிகள் அப்படியே மேலே மிதந்து வந்தது.

    இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பிளாஸ்டிக் அரிசி என நினைத்து பதறி எத்திலோடு ரேஷன் கடை முன்பு திரண்டு புகார் அளித்தனர். உடனே அங்கிருந்த விற்பனையாளர் பொதுமக்களிடம் கடந்த 2 மாதங்களாக செறிவு ஊட்டப்பட்ட அரிசி தான் வழங்கப்படுகிறது. இந்த அரிசியை தான் வழங்க ப்பட்டது. அந்த அரிசியில் சற்று கூடுதலான சத்து கிடைப்பதாக மேல் அதிகாரிகள் எங்களிடம் கூறியிருந்தார்கள். ஆகையால் பயப்படாமல் அரிசியை கீழே போடாமல் சாப்பிடலாம் என்று கூறியுள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல் ரேஷன் கடையை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து நிலக்கோ ட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பொது மக்களிடம், இதுகுறித்து அரசு தரப்பில் வழங்கப்பட்ட அரிசி தான். அதில் சத்துக்கள் நிறைந்த அரிசியாக விநியோகிக்க ப்பட்டுள்ளது. நிச்சயமாக இது பிளாஸ்டிக் கலந்த அரிசி அல்ல எனக்கூறி சமரசம் செய்தார். இதை த்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் வழங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதால் பிளாஸ்டிக் அரிசி ஆக இருக்கும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். எனவே இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அரிசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்ப தாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
    • அதிகாரிகள் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அதிக சத்துள்ள செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்ப தாக பொதுமக்கள் குற்றம்சா ட்டினர். எனவே பிளாஸ்டிக் அரிசி இதில் கலந்துள்ளதா என சந்தேக மடைந்து ஊழி யர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இந்த செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது. ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசிஉள்ளதாக வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரி ரேசன்கடை களில் ஆய்வு செய்தார்.

    அதில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பது தெரி யவந்தது. அதைதொடர்ந்து வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் அதிக சத்துள்ள செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் தண்ணீரில் மிதப்பதாக விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

    இேதபோல் அனைத்து ஊராட்சிகளிலும் அதிகாரிகள் விழிப்புணர்வு விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வின்போது கூட்டுறவு த்துறை தனிசார்பதிவாளர் பாஸ்கரன், தனிவருவாய் ஆய்வாளர் சரவணமுத்து மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் உடனிருந்தனர்.

    ×