என் மலர்
நீங்கள் தேடியது "Plex"
- கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது.
- இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு வைக்கப்பட்டி ருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிழித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன சேவையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
- பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அரசு ரத்த மையங்களுக்கான ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனம் சேவை தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வாகன சேவையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாகனத்திற்குள் பிரதமர் மோடி இடம் பெற்ற திட்டம் குறித்த பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. வாகனத்திற்கு பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டாம் என்ற அடிப்படையில் கலெக்டர் உமா அதை அகற்ற சொன்னதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் டீன் சாந்தா அருள்மொழி, டாக்டர், ஊழியர்களிடம் அகற்றுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது. பிரதமர் உருவப்படத்துடன் கூடிய பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.