என் மலர்
நீங்கள் தேடியது "Plus1"
- தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
- 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
- ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இயற்பியலில் 440 பேரும், வேதியியல் 107 பேரும், உயிரியல் 65 பேரும், தாவரவியல் 15 பேரும், விலங்கியல் 34 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
- ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள் பிளஸ்-1 வகுப்பில் 100 சதவீத வெற்றி பெற்றுள்ளனர்.
- அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் நோபிள் ராஜ் பாராட்டினார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் 61 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அனைவரும் வெற்றிபெற்றனர்.
இது 100 சதவீத வெற்றி ஆகும். மாணவி ஆதி ஸ்ரீ துர்கா 600-க்கு 545 மதிப்பெண் பெற்று முதலிடமும், ஸ்ரீ குமரன் 531 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், ரீனா ஜெனிபர் 502 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளார்.
மேலும் 90 மதிப்பெண்களுக்கு மேல் தமிழ் பாடத்தில் 15 மாணவ, மாணவிகளும், ஆங்கில பாடத்தில் 4 மாணவ, மாணவிகளும், கணிதத்தில் ஒரு மாணவியும், கணக்கியலில் 2 மாணவர்களும், வணிகவியலில் 2 மாணவர்களும், கணித அறிவியலில் 2 மாணவ, மாணவிகளும், கணினி பயன்பாட்டில் 2 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களை பள்ளி தாளாளர் நோபிள் ராஜ் பாராட்டினார்.