என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "pm netanyahu"
- தலைநகர் டமாஸ்கஸ் நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
- அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாக தகவல் வெளியானது.
டெல் அவிவ்:
சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதற்கிடையே, தலைநகர் டமாஸ்கஸ் நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பைக் கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர். அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில்,மத்திய கிழக்கில் ஒரு வரலாற்று நாள். ஆசாத்தின் ஆட்சி, டமாஸ்கஸின் கொடுங்கோல் ஆட்சி சரிந்தது. ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், பெரிய அளவிலான ஆபத்துகளும் உள்ளன. எங்களுடைய எல்லையைக் கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதிக்கரம் நீட்டுகிறோம். ட்ரூஜ், குர்த், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் என இஸ்ரேலில் அமைதியாக வாழ விரும்பும் அனைவருக்கும் ஆதரவு கரம் நீட்டுகிறோம் என பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் ஒயிட் கட்சிக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
இஸ்ரேல் பிரதமராக 4 முறை பதவி வகித்துள்ள பெஞ்சமின் நேதன்யாகு, இந்த முறையும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக அரியணை ஏறுவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். தனது நெருங்கிய நண்பரான நேதன்யாகுவின் வெற்றியை உறுதிப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே ஆதரவு திரட்டும் பிரசாரத்தில் நேரடியாக ஈடுபட்டார்.
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரமாக அங்கீகரித்தது, கோலன் ஹைட்ஸ் மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்தது என பல்வேறு வகைகளில் இஸ்ரேல் மக்களிடையே பெஞ்சமின் நேதன்யாகுவின் செல்வாக்கை நிலைநாட்ட டிரம்ப் அதீத அக்கறை காட்டி வருகிறார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201904091627229905_1_israel._L_styvpf.jpg)
வாக்குச்சீட்டு முறையில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு எதிராக முத்திரை பதிக்கும் இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தையும் எண்ணும் பணிகள் இன்றிரவு பத்து மணியில் இருந்து தொடங்குகிறது.
நாளை பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் தெரியவரும். எனினும், அந்நாட்டு தேர்தல் கமிஷன் வெற்றி-தோல்வி நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட ஓரிரு நாட்கள் ஆகும் என தெரிகிறது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் புதிய மந்திரிசபை பதவி ஏற்கும்.
தேர்தலுக்கு முந்தைய நிலவரப்படி எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் பெஞ்சமின் நேதன்யாகு - பென்னி கான்ட்ஸ் இருவருமே சமபலத்துடன் இருப்பதாகவே தெரிகிறது.
எனினும், 13 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்த காலத்தில் இஸ்ரேல் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க துணிச்சலான சில முடிவுகளை எடுத்தவர், அண்டைநாடான ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை திறம்பட எதிர்த்து சமாளித்தவர் என்ற வகையில் பெஞ்சமின் நேதன்யாகு(69) மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புவதாக பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தின்போது பெஞ்சமின் நேதன்யாகு 3 ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியதால் ஆட்சி தலைமையில் மாற்றம் தேவை என எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், ஒருவேளை நேதன்யாகு ஐந்தாவது முறை பிரதமராக பதவி ஏற்றால் பிரான்ஸ் நாட்டில் உள்ளதுபோல் ஆட்சியின் தலைவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் நடவடிக்கை எடுக்க முடியாதவாறு இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிய சட்டத்தை கொண்டுவந்து அவர் தப்பிக்க வாய்ப்புள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Netanyahu #Israelpolls