என் மலர்
நீங்கள் தேடியது "Pollachi Market"
- கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.
- வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். அதன்படி நேற்று காலை ஆட்டுச்சந்தை தொடங்கியது.
இதற்காக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெள்ளாடு, செம்மறியாடு உள்பட சுமார் 800-க்கும் மேற்பட்டவவை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
மேலும் சிலர் ஆட்டுக்குட்டிகளையும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதால், பொள்ளாச்சி சந்தையில் சுமார் 800 முதல் 1000 வரையிலான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
மேலும் அவற்றை வாங்கி செல்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதன்காரணமாக பொள்ளாச்சி சந்தையில் ஆடுகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
தொடர்ந்து அங்கு 8 கிலோ முதல் 25 கிலோ வரையிலான ஆடுகள் எடைக்கு ஏற்ப தரம் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதாவது 8 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5500 வரையும், 20 கிலோ ஆடு ரூ.16-17 ஆயிரம் வரையும், 25 கிலோ ஆடு ரூ.22 ஆயிரம் வரையும் விலை போனது.
பொள்ளாச்சி சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகளின் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலையில் சிறிதும் சரிவு ஏற்படவில்லை. இருந்தபோதிலும் வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
இதன் காரணமாக பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் நேற்று மட்டும் ரூ.80 லட்சம் வரை ஆடுகளின் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
- நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
- கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது.
பொள்ளாச்சி:
பக்ரீத் பண்டிகை வருகிற 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வருகிறார்கள்.
இந்தநிலையில் புகழ்பெற்ற பொள்ளாச்சி சந்தை நேற்று கூடியது. இதில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக இருந்ததுடன், கூடுதல் விலையும் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே ஒரு பகுதியில் வாரந்தோறும் ஆடு விற்பனை நடைபெறுகிறது. இங்கு பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கோட்டூர், உடுமலை, மடத்துக்குளம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடாக்களை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள.
இந்த மாதத்தில் கடந்த சில வாரமாக சந்தைக்கு ஆடுகள் வரத்து ஓரளவே இருந்தாலும் நேற்று நடந்த சந்தையின் போது அதிகாலை முதலே வியாபாரிகள் அதிகளவு ஆடுகளை கொண்டு வந்தனர்.
நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனால் பல மாதத்துக்கு பிறகு மீண்டும் சந்தை களை கட்டியது.
பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆடுகளை வாங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரள வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதனால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்புடன் இருந்ததுடன் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதிலும் எடை அதிகம் உள்ள கிடாவுக்கு கிராக்கி ஏற்பட்டது.
கடந்த வாரத்தில் அதிகபட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனை ஆனது. ஆனால் நேற்று 28 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ரூ.26 ஆயிரம் வரையிலும், சுமார் 40 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான கிடா கொண்ட பெரிய அளவிலான கிடா ரூ.37 ஆயிரம வரையிலும் என எப்போதும் இல்லாத வகையில் கூடுதல் விலை போனது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.1.25 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியூர்களில் பீன்ஸ் சாகுபடி அதிகமாக காணப்பட்டது.
- வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதனை ரூ.25 முதல் 30 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அதிகளவில் வருகிறது.
இதில் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வெளியூர்களில் பீன்ஸ் சாகுபடி அதிகமாக காணப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மற்றும் மே என சில மாதமாக அறுவடை செய்யப்பட்ட பீன்ஸ் மார்க்கெட்டுக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டது.
வரத்து அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் அதனை ரூ.25 முதல் 30 வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர். தற்போது பல மாவட்டங்களில் மழைப்பொழிவு இருப்பதால் பீன்ஸ் சாகுபடி சற்று குறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பீன்ஸ் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் நேற்று மார்க்கெட்டில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.85 முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.