என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal Package"

    • வீடு, வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
    • பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 ரொக்க பணம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

    அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதன்படி இன்று முதல் வீடு, வீடாக ரேஷன் கடை பணியாளர்கள் சென்று பொங்கல் தொகுப்பு டோக்கன்களை வழங்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 1,183 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று ரேஷன் கடை பணியாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பொங்கல் தொகுப்பு டோக்கனை விநியோகம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணி வருகிற 8-ம் தேதி வரை நடைபெறும். இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

    அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அது குறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆலங்குடி புதுக்கோட்டை விடுதியில் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கபட்டது
    • பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர்

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி ஊராட்சியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை கொண்ட பொங்கல் தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம் தலைமையில் பொங்க தொகுப்பு வழங்கப்பட்ட நிகழ்வில் கிளைச் செயலாளர் முத்துவீர் பாலாஜி, வடிவேல், வீரமணி, தர்மராஜ், மதி, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்கள்.

    பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர். பின்னர் அமைதியாக பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக் கள் வாங்கிச்சென்றனர். விழாவில் ஒன்றிய நகர பேரூர் கழக திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 10-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.
    • இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 பணமும் ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இந்த துரித தொகுப்பை 10-ந் தேதி தொடங்கி வைத்த அதே நாளில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

    2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் டோக்கன் பெறாத 40லட்சம் பேர் 14-ந் தேதி ரேசன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் ரூ.1000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட்டது

    இதுவரை 95 சதவீதம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை.
    • ரூ.199 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று சென்னை, தேனாம்பேட்டை, டி.யு.சி.எஸ். காமதேனு கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத்துறையின் மூலம் "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள பொங்கல் தொகுப்பு விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

    அவரது அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை நடைபெறுகிறது.

    இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு. இனிப்பு பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என மூன்று வகையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    பச்சரிசி 500 கிராம், பாகுவெல்லம் 500 கிராம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி 50கிராம், ஆவின் நெய்-50 கிராம், பாசிபருப்பு 100 கிராம், உலர் திராட்சை-50 கிராம் என 7 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, சிறிய பையுடன் ரூ.199 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    மஞ்சள் தூள்-50 கிராம், சர்க்கரை-500 கிராம், துவரம் பருப்பு-250 கிராம், கடலைப் பருப்பு-100 கிராம், பாசிப் பருப்பு-100 கிராம். உளுத்தம் பருப்பு-250 கிராம், கூட்டுறவு உப்பு-1கிலோ, நீட்டு மிளகாய்-250 கிராம். தனியா-250கிராம், புளி-250 கிராம்.

    பொட்டுக்கடலை-200கிராம், மிளகாய் தூள்-50 கிராம், செக்கு கடலை எண்ணெய் ½ லிட்டர், கடுகு-100 கிராம், சீரகம்-50 கிராம், மிளகு-25 கிராம், வெந்தயம்-100 கிராம், சோம்பு-50 கிராம், பெருங்காயம்-25 கிராம் என 19 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, மளிகை பையுடன் ரூ.499 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    மஞ்சள் தூள்-50கிராம், சர்க்கரை-500கிராம், கூட்டுறவு உப்பு-1கிலோ, துவரம் பருப்பு-250கிராம், உளுத்தம் பருப்பு-250கிராம், கடலைப் பருப்பு-200கிராம், பச்சைப் பட்டாணி-100கிராம், பாசிப் பருப்பு (சிறுபருப்பு)-250கிராம், வெள்ளை சுண்டல்-200கிராம், வேர்க்கடலை-200கிராம், பொட்டுக்கடலை-200கிராம், வரமிளகாய்-250கிராம், புளி-200கிராம், தனியா-250கிராம், கடுகு-100கிராம், மிளகு-50கிராம், சீரகம்-50கிராம், வெந்தயம்-100கிராம். சோம்பு-50கிராம், ஏலக்காய்-5கிராம், செக்கு கடலை எண்ணெய்-½லிட்டர், வரகு-500கிராம், சாமை-500கிராம். திணை-500கிராம். ரவை-500கிராம், அவல்-250கிராம், ராகிமாவு-500கிராம்.

    கோதுமை மாவு-500கிராம், ஜவ்வரிசி-200கிராம், வறுத்த சேமியா-170கிராம், மல்லி தூள்-50கிராம், சாம்பார் தூள்-50கிராம். மிளகாய் தூள்-50கிராம். பெருங்காயத் தூள்-25கிராம் என 34 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, பெரிய மளிகை தொகுப்புடன் ரூ.999 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பெரும் பொங்கல் தொகுப்புடன் மட்டும் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.

    இந்த தொகுப்புகள் அனைத்தும் வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனையினை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைய கேட்டுக்கொள்கிறேன்.

    • தமிழகத்தில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது.
    • புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

    இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரொக்கப் பணம் ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டத.

    இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.750 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×