என் மலர்
நீங்கள் தேடியது "Pradhosha worship"
- தொண்டி, திருவாடானை பகுதிகளில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது.
- பூஜைக்கான ஏற்பாடுகளை வாசு, சுவாமிநாதன் செய்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரனேசுவரி சமேத நம்புஈசுவரர் கோவிலில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது. நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், இளநீர், தயிர், அரிசிமாவு, விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நாகநாதர், பைரவர், விஷ்ணு துர்க்கை, விநாயகர் முருகன், கல்யாண நவக்கிரகம் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதேபோல் தொண்டி சிதம்பரேசுவரர், திருவாடானை ஆதிரத்தினேசுவரர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேசுவரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களிலும் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது. உற்சவமூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. வாசு, சுவாமிநாதன் பூஜை ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- தொண்டி, திருவாடானையில் பிரதோச வழிபாடு நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள அன்னபூரனேஸ்வர சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசம் நடந்தது. இதைெயாட்டி நந்திக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம், விபூதி, அரிசி மாவு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், நாகநாதர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பைரவர், கல்யாண நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பூஜை ஏற்பாடுகளை வாசு, சுவாமிநாதன் செய்திருந்தனர். சர்க்கரை பொங்கல், எள் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதே போல தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவன் கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
- தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை அன்ன பூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம் பன்னீர், சந்தனம், இளநீர் விபூதி, அரிசி மாவு, தேன் பஞ்சாமிர்தம் மற்றும் அபிசேக பொடிகளால் நந்திக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். அபிஷேக பால் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. வாசு, கருப்பசாமி ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல் திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.