என் மலர்
நீங்கள் தேடியது "press freedom"
- பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் விமரிசித்துள்ளது.
- பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்
இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் கொள்கைகளை விமர்சித்த டெம்போ என்ற பத்திரிகைக்கு கொடூரமான முறையில் அச்சுறுத்தல் விருட்க்கப்பட்டுள்ளது.
ஒரு பன்றியின் தலையும், வெட்டபட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியும் டெம்போ பத்திரிகையின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
1970 களில் இருந்து இந்தோனேசியாவின் சிறந்த வாராந்திர வெளியீடுகளில் ஒன்று டெம்போ. சமீபத்தில் அதிபர் பிரபோவோவின் கொள்கைகள் குறித்த விமர்சன அறிக்கைகளை வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) (மார்ச் 22), டெம்போவின் அலுவலகத்தில் துண்டாக்கப்பட்ட எலிகளின் உடல்கள் அடங்கிய பெட்டியை துப்புரவுப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். அதே நேரத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பன்றியின் தலையும் அங்கு அனுப்பப்பட்டது.
இந்த அச்சுறுத்தலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது பத்திரிகை சுதந்திரத்திற்கு ஒரு தீவிரமான கவலையாக மாறியுள்ளது.

இந்தோனேசியாவில் பத்திரிகையாளராக இருப்பது "மரண தண்டனைக்கு சமம்" என்று ஆய்வு அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் - இன் இந்தோனேசியாவின் நிர்வாக இயக்குனர் உஸ்மான் ஹமீத் விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். சர்வதேச பத்திரிகையாளர் குழுவும் இந்த சம்பவத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
"பயமுறுத்துவதே நோக்கம் என்றால், நாங்கள் பயப்படப் போவதில்லை, ஆனால் இந்த கோழைத்தனமான செயலை நிறுத்த வேண்டும்" என்று டெம்போவின் இதழின் தலைமை ஆசிரியர் செட்ரி யசாரா தெரிவித்துள்ளார். அரசின் சமீபத்திய பட்ஜெட் வெட்டுகள் தொடர்பான விமர்சனங்களும், அதைத் தொடர்ந்து போராட்டங்களும் இந்தோனேசியாவில் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
- முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்து 2009ல் தொடங்கப்பட்டது இந்த ஊடகம்
- சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
முற்போக்கு சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க இந்தியாவிலிருந்து இயங்கும் இணையதள ஊடகம், நியூஸ்க்ளிக்.
2009ல் தொடங்கப்பட்ட நியூஸ்க்ளிக், பல்வேறு மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை குறித்து செய்தியளிப்பதிலும், அரசின் தவறான கொள்கைகள் குறித்து விரிவாக செய்திகளை தருவதிலும் புகழ் பெற்றது. பிபிகே நியூஸ் க்ளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் பிரபீர் புர்கயாஸ்தா என்பவரால் நிறுவப்பட்டது.
இந்நிலையில், நியூஸ்க்ளிக் ஊடகத்தின் அலுவகத்திலும், அதன் பல்வேறு நிரூபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் இல்லங்களிலும், டெல்லி காவல்துறை சோதனை நடத்தியது. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சீனாவிடமிருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையின் சிறப்பு பிரிவின் மூலமாக நடைபெற்ற இந்த சோதனை, 30 இடங்களில் நடத்தப்பட்டது.
சோதனை நிறைவடைந்ததை அடுத்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பா.ஜ.க.வின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உருவாகிய இந்தியா எதிர்கட்சிகள் கூட்டணி இந்த சோதனைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
அக்கூட்டணி இது குறித்து அறிவித்திருப்பதாவது:
உண்மையை மக்களிடையே விளக்கி சொல்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து செயல்படுகிறது. வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுபவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்கள் ஊடகங்களை கைப்பற்ற உதவுவதற்காக, இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஊடகங்கள் பகுப்பாய்வு செய்து புள்ளி விவரங்களோடு அரசின் தவறுகளை வெளியே சொல்வதை இந்த அரசு தடுக்க விரும்புகிறது. உலக அரங்கில் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என கருதப்பட்டு வந்த இந்தியாவிற்கு, இதன் மூலம் பெரும் பின்னடைவு ஏற்பட போகிறது. பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பஜார், பாரத் சமாச்சார் மற்றும் வயர் ஆகிய ஊடகங்கள் குறி வைக்கப்பட்ட வரிசையில் நியூஸ்க்ளிக் சேர்ந்துள்ளது.
இவ்வாறு எதிர்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், நியூஸ்க்ளிக் பத்திரிக்கைக்கு ஆதரவாகவும் இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கமும் கருத்து தெரிவித்திருக்கிறது.
- சமூக கட்டுக்கோப்பிற்கு பத்திரிகைகள் பெரிதும் உதவுகின்றன
- நேர்மையாக செய்திகளை தரும் பணியில் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்
ஜனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Pillar of Democracy) என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள்.
அரசியல், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை பொதுமக்களின் நன்மைக்காக செயல்படும் அமைப்புகள். இவற்றினால் விளையும் நன்மை தீமைகள் குறித்து பொதுமக்கள் அறிவதற்கும், சிந்திக்கவும், ஆலோசிக்கவும் பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன.
ஒரு சமூகம் கட்டுக்கோப்புடன் வளர்ச்சி பாதையில் செல்லவும், பல்வேறு சிந்தனைகள் மற்றும் சித்தாந்தங்களை கொண்ட பொதுமக்கள் ஒன்றுபட்டு நாட்டை முன்னோக்கி எடுத்து செல்லவும், விமர்சனங்கள், எதிர்கருத்துக்கள், ஆரோக்கியமான விவாதங்கள், செய்தி பரவுதல், கருத்து பரிமாற்றங்கள் உள்ளிட்டவை மிக அவசியம். இத்தகைய பெரும்பணியை பத்திரிகைகள் திறம்பட செய்கின்றன.
ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் பல பத்திரிகைகள் மற்றும் அதன் ஆசிரியர்கள் அப்போதைய அரசாங்கத்தால் பெரும் அடக்குமுறையை சந்தித்து வந்தனர். அதையும் மீறி இந்திய சுதந்திர உணர்வை மக்களிடையே ஊக்குவிக்க அவர்கள் பாடுபட்டனர்.
காகித வடிவிலான அச்சு பத்திரிகையிலிருந்து வானொலி, தொலைக்காட்சி என அடுத்த கட்டத்திற்கு சென்ற பத்திரிகைகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு பேப்பர், டிஜிட்டல் வலைதளங்கள், மென்பொருள் செயலிகள் என நினைத்து பார்க்க முடியாத வடிவங்களை அடைந்திருக்கின்றன.
அடுத்த கட்ட நவீனமயமாக்கலில் இணையதளத்தில் பெருகி வரும் சமூக வலைதளங்களின் மூலம் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு மேடைகளாகவும் மிகப்பெரும் பரிணாம வளர்ச்சியை பத்திரிகைகள் கண்டுள்ளன.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ.) எனப்படும் இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் நவம்பர் 16, 1966 அன்று உருவாக்கப்பட்டது.
பொறுப்புள்ள, நேர்மையான, சுதந்திரமான, நடுநிலை உள்ள அமைப்பாக பத்திரிகைகள் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 16-ஆம் தேதி இந்திய பத்திரிகை கவுன்சிலால் "தேசிய பத்திரிகை தினம்" கொண்டாடப்படுகிறது.
ஒரு சட்டபூர்வமான அமைப்பாக இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய பத்திரிகை கவுன்சில், பத்திரிகைகள், தங்கள் தொழில் தர்மத்தை கடைபிடித்து, செய்திகளை நெறிப்படுத்தி செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்திலும் தேசிய பத்திரிகை தினத்தை கொண்டாடி வருகிறது.
தேசிய பத்திரிகை தினத்தன்று, நேர்மையாக செய்திகளை மக்களுக்கு தருவதில் தங்கள் உயிரையும் தியாகம் செய்த பல பத்திரிகையாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர். சிறப்பாக பணியாற்றிய பத்திரிகையாளர்களை பாராட்டி கவுரவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் இன்று நம் நாட்டில் பல அமைப்புகளால் நடத்தப்படும்.
உலகெங்கிலும் பல நாடுகளில் வன்முறையின்றி, ரத்தம் சிந்தாமல் ஆட்சி மாற்றத்திற்கும் பல புரட்சிகளுக்கும் பத்திரிகைகள் வழிவகுத்தன என்பது பத்திரிகை துறையினர் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க பதிவாகும்.
வருடம் முழுவதும் 24 மணி நேரமும், வெயில், மழை, பனி என பாராமல், ஓய்வின்றி மக்களுக்கு செய்திகளை வழங்க பத்திரிகையாளர்கள் பாடுபடுகின்றனர். உணவு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை போல் பத்திரிகைகளின் சேவையும் பொதுமக்களுக்கு அவசியமாகி விட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசுக்கு எதிரான விமர்சனத்தைக் கலைக்க பொய் வழக்குகள் போடப்பட்டன
- நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது கடந்த வருடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போடப்பட்டு அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டார்.
அரசுகளுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் குறிவைக்கப்படுவதாக க உலக செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், அரசுக்கு எதிரான விமர்சனத்தைக் கலைக்க பணமோசடி, வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், சட்டவிரோத, நிதி மோசடி உள்ள பொய் வழக்குகள் போடப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் டெல்லியில் இயங்கி வரும் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது கடந்த வருடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போடப்பட்டு அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டதை இந்த சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளது.


இதுபோல உலகம் முழுவதும் உள்ள பல அரசாங்கங்கள் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாக அவ்வமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை நியூஸ் கிளிக் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்து அமைப்பினரால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் கைதான குற்றவாளிகள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.