என் மலர்
நீங்கள் தேடியது "Prohibition order"
- தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
- அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நாளை (10-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ந்தேதி) வீரசக்க தேவி ஆலய திருவிழா நடைபெறுவதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 12-ந்தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவில் கலந்து கொள்ள அழைத்து வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாட்களில் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற இருந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வழக்கம்போல் பிளாஸ்டிக் கவர்கள் புழங்குகின்றன.
- மக்கள் மனது வைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம்.
திருப்பூர்:
சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பாலிதீன் பொருட்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜூலை 1 முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது.ஆனால் தடை உத்தரவை மீறி, திருப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவை தடையின்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முந்தைய ஆட்சிக்காலங்களில் இதுபோன்ற தடை உத்தரவுகள் பலமுறை அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவை பெயரளவுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டன.
தற்போது வழக்கம்போல் பிளாஸ்டிக் கவர்கள் புழங்குகின்றன.கடந்த ஓராண்டுக்கு முன் தடை உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டபோது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இனி கிடைக்காது என்ற முடிவுக்கு வந்த பொதுமக்களும், துணி பைகளுக்கு மாறினர். இதனால் துணிப்பைகளின் பயன்பாடு அதிகரித்து, ஜவுளி உற்பத்தியாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது காலமே நீடித்தது. மீண்டும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்து விட்டது.
மக்கள் மனது வைத்தால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம். தடை உத்தரவை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள், இவற்றை கண்காணித்து பிளாஸ்டிக் பைகளை அழிப்பதுடன் மொத்த வியாபாரிகளை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து பத்தினம்திட்டா கலெக்டர் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் மாஜிஸ்திரேட்களின் கருத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Sabarimala #SabarimalaProhibition