என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "provided welfare"

    • ராமநாதபுரத்தில் 314 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மஸ்தான் வழங்கினர்.
    • சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    விழாவில் அமைச்சர் மஸ்தான் பேசுகையில், பன்முக நோக்கத்தோடு இந்தியாவில் எந்த மாநி லத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தை அமைதி மாநிலமாக மாற்றி ஆளுமை திறன் கொண்ட முதல்வராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.

    இங்கு பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசின் திட்டங்களை பெற்றுதர பக்கபலமாக இருப்பேன் என்றார். இதையடுத்து சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 314 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்து 99 ஆயிரத்து 983 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி தொகுத்து வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், திருவாடனை கருமாணிக்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசுப்பி ரமணியன், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×