என் மலர்
நீங்கள் தேடியது "Public opinion"
- எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்.
- அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டம் தொடர்பாக தங்களது ஆதரவு கருத்துகளையும் எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்தனர்.
வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவது தொடர்பானக் கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை எர்ணாவூர் மகாலட்சுமி நகரில், பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் தி.மு.தனியரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அனல் மின் நிலைய விரிவாக்கம் திட்டம் தொடர்பாக தங்களது ஆதரவு கருத்துகளையும் எதிர்ப்பு கருத்துகளையும் தெரிவித்தனர்.
அப்போது, கூட்டத்தில் பேசிய சீமான், "சமீப காலமாக நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டங்களில் நியாயமாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு அளிப்பதில்லை. இக்கருத்து கேட்பு கூட்டத்திலும் ஆளுங்கட்சியினர் மட்டுமே இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து மக்களிடம் வீடு வீடாகச் சென்று கருத்துகளை பெறவேண்டும்" என்றார்.
மேலும் அவர், "சுற்றுச்சூழலை பாதுகாக்க எண்ணூர் அனல் மின் நிலையம் அமைப்பதை தடுக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார் அவர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சீமான் வெளியேற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கருத்து கேட்பு கூட்டம் குறித்து சூழலியல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவருமான ஜி.சுந்தர்ராஜன் தனது எக்ஸ தளப்பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறுகையில், "பொதுமக்களை கட்சியினர் மிரட்டியது, பாதி கூட்டத்திற்கு தி.மு.க. எல்.எல்.ஏ.வே தலைமை தாங்கி நடத்தியது, உரிய பாதுகாப்பு வழங்காத காவல்துறை, கூட்டத்தை சட்டப்படி முடிக்காமல் மாவட்ட ஆட்சியர் வெளியேறியது என எண்ணூர் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அப்பட்டமான விதிமீறலாக நடந்துள்ளது" என்றார்.
இறுதிக்கட்ட பிரசாரம் 6 மணிக்கு முடிந்த நிலையில், தேர்தல் ரத்து என்பது வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் இப்படி அறிவித்தது வேதனை அளிக்கிறது. அரசு அதிகாரிகள் இரவு பகலாக உழைத்த உழைப்பு வீணடிக்கப்பட்டு விட்டது. மக்களை தேர்தல் கமிஷன் ஏமாற்றிவிட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் பணம் கொடுத்த புகார்கள் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், 15 நாட்களுக்கு முன்பு பணம் கைப்பற்றப்பட்டதற்கு இப்போது தேர்தலை ரத்து செய்திருப்பது தேவையில்லாத ஒன்று என்று பொதுமக்கள் தங்களது கருத்தை கூறினர்.
தேர்தல் ரத்து குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பரந்தாமன் முன்னாள் எம்.எல்.ஏ. - வேலூர்

வேட்பாளரிடம் பணம் பறிமுதல் செய்திருந்தால் உரிய விசாரணை நடத்தி உடனே தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு தேர்தல் ரத்து என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கபட்டுள்ளது.
ஷீலா - தோட்டபாளையம்
தேர்தல் ரத்து செய்தது சரியான நடவடிக்கை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு எந்தவித நலத் திட்டங்களையும் செய்யமாட்டார்கள். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அறவே ஒழிக்க வேண்டும்.
தாமோதரன் - ஆம்பூர்
தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்திருப்பது சரி என்றால் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தலையும் ரத்து செய்திருக்க வேண்டும்.

தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க சென்னையில் வேலை பார்க்கும் நான் விடுப்பு எடுத்து ஆவலாக ஊருக்கு வந்தேன், ஆனால் தேர்தல் ஆணையம் திடீரென நேற்று தேர்தலை ரத்து செய்து விட்டது.
இது எனக்கும் என்னை போன்ற இளம் வாக்காளர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
இக்பால் வாணியம்பாடி
தேர்தலை ரத்து செய்திருப்பது சரியல்ல, இதனால் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் பணத்தை பறிமுதல் செய்த அன்றே இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்பு இவ்வாறு நடந்து கொள்வது தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.
சுகுமார் - வாணியம்பாடி
தேர்தல் ரத்து என்பது வேலூர் மாவட்ட தொகுதியில் மட்டும் செய்திருப்பது சரியானதல்ல. எல்லா தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தை திரும்ப பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தேர்தல் நடப்பதற்கு முன்பே இவ்வளவு குளறுபடி என்றால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் என்னென்ன நடக்கும் தேர்தல் ரத்து செய்தது ஒரு விதத்தில் நல்லது தான். ஆனாலும் வெளியூரில் இருந்து லீவு போட்டு ஓட்டுபோட வந்தவர்களுக்கு ஏமாற்றம். மீண்டும் அவர்கள் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
தேர்தல் கமிஷன் எடுத்த முடிவு சரிதான். அரசியல்வாதிகளிடம் பிடிபட்ட பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியாக பல தரப்பு மக்களும் தேர்தல் கமிஷன் எடுத்த ரத்து முடிவுக்கு தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மீண்டும் தேர்தல் நடத்தும் போதாவது பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினர். #LokSabhaElections2019 #VelloreConstituency
தீபாவளியன்று இரவில் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து பட்டாசு தொழிலாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
சிவகாசியை சேர்ந்த தொழிலாளி சுந்தரமூர்த்தி கூறியதாவது:-
தற்போது பருவமழை சீசன் உள்ளது. தீபாவளியன்று இரவு நேரத்தில் மழை பெய்தால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் போய்விடும். தீபாவளி பண்டிகை என்பது தீமையை அழித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தினமாகும். தீபாவளி அன்று பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த இரவு வரை காத்திருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல.

பிரபு என்பவர் கூறுகையில், பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலை நம்பித்தான் உள்ளது. இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கிறது.
இதனால் அரசு வேலையை எதிர்பார்க்காமல் இளைஞர்கள் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். உழைப்பாளிகளை உருவாக்கும் தொழிலாக பட்டாசு தொழில் உள்ளது. எனவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்க அதிக நேரம் கொடுக்க வேண்டும். இந்த தொழிலை பாதுகாப்பதுடன் அதன் வளர்ச்சிக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Deepavali