என் மலர்
நீங்கள் தேடியது "puducherry govt"
- கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது.
- கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை யூனியன் பிரதேசத்தின் 2023-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி ரூ. 9 ஆயிரத்து 369 கோடி கடன் உள்ளது.
மொத்த நிலுவை தொகையில், பெரும்பாலான தொகை வெளிசந்தைக் கடன்கள் மூலம் பெறப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தேதியிட்ட பத்திரங்களை ஏலம் விட்டு மாநில மேம்பாட்டுக்காக திரட்டப்பட்டது.
ஜனவரி 20-ந்தேதி நிலவரப்படி, வெளி சந்தை கடன்கள் மூலம் ரூ. 7 ஆயிரத்து 980 கோடி கடன் நிலுவையில் உள்ளது. சிறுசேமிப்புத் திட்டத்தில் கடன் வாங்கிய தொகை ரூ.594 கோடி, திட்டமில்லாத கடன் ரூ.219 கோடி, விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் பெற்ற கடன் ரூ. 149 கோடி மற்றும் பிற நிறுவனங்களுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை ஆகியவை உள்ளடக்கம்.
சட்டத்தின் விதிகளின்படி, வரையறுக்கப்பட்ட வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களுடன் கடன் வரம்பு 25 சதவீதத்தை கடக்கக்கூடாது.
நடப்பு நிதியாண்டில், நமது கடன் விகிதம் 24.28 சதவீதம் ஆகும். சட்டப்பேரவை கொண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதுவை 4-வது இடத்தில் உள்ளது.
கடந்த 2007-ல் நிலுவைக் கடன் சுமார் ரூ.2176 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இறுதி மாதம் வரை அரசு நிர்வாகம் சுமார் ரூ.1558 கோடி வரை செலுத்தியுள்ளது. இப்போது இருப்பில் உள்ள ரூ.618 கோடியை மரபுக் கடனாக திருப்பி செலுத்த வேண்டும். இந்த மொத்த நிலுவையில், ரூ.425 கோடி தேசிய சிறுசேமிப்பு நிதியிலிருந்து பெறப்பட்டது.
இருப்பினும், நிலுவையில் உள்ள கடனைக் காட்டும் புள்ளிவிவரங்கள், நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கடன் வரம்புகளுக்குள் புதுவை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.
புதுச்சேரி:
இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதுபோல் புதுச்சேரியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக தற்போது புதுச்சேரியில் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர்.
தற்போது கோடை வெயில் வருத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள்.
அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் வெயிலால் படாத பாடுபட்டனர்.
இதற்கிடையே கோடை வெயிலுக்கு இதமாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏ.சி.ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.
இதனை புதுவையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரத்தியேமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏ.சி. ஹெல்மெட்டை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அணிந்து பரிசோதனை செய்தார். விரைவில் இந்த ஏ.சி. ஹெல்மெட் புதுவையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
- ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாகியில் புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
இந்த வைரஸ் பற்றி மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை. அதேநேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
கேரளாவில் இருந்து வரும் ரெயிலை நிறுத்துவது ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற அவசரகால சூழ்நிலைகள் இப்போது எழவில்லை. அந்தளவுக்கு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தில் பரவும் வைரஸ் என்ன? என கண்டறிந்துள்ளனர். அது பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பரிசோதனை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாகியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
புதுச்சேரியில் தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளித்து அம்மாநில முதல் மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரைக்கு பதில் ரூ. 490 வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 490 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சுமார் 3.37 லட்சம் பயனாளிகளுக்கு தலா ரூ.490 வழங்க 16.53 கோடி ரூபாயை புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
- புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது.
- மக்களுக்கான பல திட்டங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றி தராத மாநில அரசைக் கண்டித்தும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்திற்கு இதுநாள் வரையிலும் மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக் குழுவில் புதுச்சேரி மாநிலத்தை இணைக்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காதது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் புதுச்சேரிக்கென உரிய இடஒதுக்கீடு வழங்காதது.
முதலானவற்றிற்கு காரணமான மத்திய அரசைக் கண்டிப்பது புதுச்சேரியை ஆளும் அரசு ரேஷன் கடைகளைத் திறக்காது பொது விநியோகத்திட்டத்தை அமல்படுத்தாது அரசு சார்பு நிறுவனங்களை படிப்படியாக மூடியது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குரிய சிறப்பு கூறு நிதியை முறையாக செயல்படுத்தாதது, மீனவர்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு வழங்காதது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஐ.டி. பார்க் உள்ளிட்ட புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வராதது, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படாதது, சட்டமன்றத்தில்அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படாதது மூடப்பட்டுள்ள அரசு பஞ்சாலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்காதது மின் துறையை தனியார்மயமாக்கும் பிரச்சனை, மின் கட்டணம் வசூலிப்பத்தில் பிரிபெய்டு மீட்டர் சிஸ்டம் கொண்டுவரப்படுவது. ஸ்மார்ட் சிட்டி பணிகளில் குளறுபடிகள் அரசின் தவறான விவசாயக் கொள்கை முடிவு உள்ளிட்ட மாநிலம் சம்பந்தமாகன பல்வேறு பிரச்சனைகளில் பாராமுகமாக இருந்து வருவதை கண்டித்தும், புதுச்சேரி மாநில மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்றித தர மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் 10-ந் தேதி காலை 10 மணிக்கு கடலூர் சாலை ஏ.எப்.டி. மைதானத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி வழியாக சட்டமன்ற பேரவை அருகில் சென்றடைந்து, அங்கே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகம் எம்.பி. தலைமையில் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் முன்னாள் எம்.எல்.ஏ., முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தப் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சியினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
- அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொகுதிதோறும் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் பிரசாரத்தை முடித்துவிட்டு புதுச்சேரியில் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் ஆட்சியில் முழுமையாக எல்லா திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். பிரசாரத்தின்போது பெரிய குறை என மக்கள் எதையும் கூறவில்லை. இலவச அரிசி கொடுங்கள் என எல்லா இடத்திலும் தாய்மார்கள் கேட்டுள்ளனர்.
என்.ஆர். காங்கிரஸ் அரசின் கொள்கை மாநில அந்தஸ்து புதுவைக்கு வேண்டும் என்பதுதான். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து முயற்சியையும் எங்கள் அரசு எடுக்கும்.
எங்கள் அரசின் செயல்பாடுகள் புதுவை மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது. எனவே தேர்தலுக்காக நாங்கள் புதிதாக எந்த வியூகமும் அமைக்க வேண்டியதில்லை. புதுவை அரசு சொன்னதை செய்து கொண்டிருக்கிறது. மத்தியில் எந்த ஆட்சி உள்ளதோ அந்த ஆட்சியின் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் புதுவை மாநிலத்துக்கு பயனுள்ளதாக அமையும் என்பது எனது ஆணித்தரமான எண்ணம்.
எனவேதான் பா.ஜனதா வேட்பாளருக்கு கூட்டணியில் தொகுதியை வழங்கினோம். பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எனது ஆட்சியை கலைத்து விடுவார்கள் என்று அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் எனது ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் 2 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடக்கும். மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவையில் பணியாளர் தேர்வாணையம் இல்லை.
- புதுவையில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வாடிக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் சார்பில் பி மற்றும் சி பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 15 வகையான பணிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அனைத்துப் பணியிடங்களுக்கும் அதிகபட்ச வயதாக 30 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பில் பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புதுவை மாநிலத்தில் ஆள்தேர்வு நடத்தப்படும் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பு தளர்வு போதுமானதல்ல. இது லட்சக்கணக்கான இளைஞர்களை பாதிக்கும்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பதைப் போன்று புதுவையில் பணியாளர் தேர்வாணையம் இல்லை. அதனால், அம்மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆள்தேர்வு நடைபெறுவதில்லை. பொதுப்பணித் துறையில் சிவில் பிரிவு இளநிலை பொறியாளர் பணிக்கு 37 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஆள்தேர்வு நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள 15 வகை பணிகளில் 7 வகையான பணிகளுக்கு இப்போது தான் முதல் முறையாக நேரடியாக ஆள்தேர்வு நடைபெற உள்ளது. இவ்வளவு அதிக கால இடைவெளியில் ஆள்தேர்வு நடைபெறும் போது, அதற்கேற்ற வகையில் வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மத்திய அரசும், புதுவை மாநில அரசும் தவறிவிட்டன.
கடந்த 37 ஆண்டுகளில் பொறியியல் படிப்பு படித்த அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு வசதியாக அந்தப் பணிக்கு 57 அல்லது 58 வயதை வரம்பாக நிர்ணயிக்க வேண்டும். முதல்முறையாக நேரடித் தேர்வு நடத்தப்படும் பணிகளுக்கு வயது வரம்பே கூடாது என்பது தான் இயற்கை நீதியாகும்.
ஆனால், புதுவை பட்டதாரி இளைஞர்களின் கோரிக்கை என்பது வயது வரம்பு மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது தான். அதுவும் கூட கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆள்தேர்வு எதுவும் நடைபெறாததால், பல இளைஞர்கள் வயது வரம்பை கடந்து விட்டதால், அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இது நியாயமான கோரிக்கை தான். அதனால், இதை புதுவை அரசு ஏற்றுக் கொண்டு, இந்த ஒரே ஒரு முறை மட்டும் வயது வரம்பை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய உள்துறை மற்றும் பணியாளர் நலன் அமைச்சகங்கள் இந்தக் கோரிகையை ஏற்க மறுத்து விட்டன. இது புதுவை மாநில இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதி.
புதுவையில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி வாடிக் கொண்டிருக்கின்றனர். வயது வரம்பு விலக்கு மறுக்கப்பட்டால், பாதிக்கப்படுபவர்கள் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்படும். அதுமட்டு மின்றி, மாநில அந்தஸ்து கிடைக்காததால் தான் இத்தகைய அநீதிகள் இழைக்கப்படுகின்றன என்று இளைஞர்கள் நினைக்கும் போது, மாநில அந்தஸ்து கோரியும் போராட்டங்கள் வெடிக்கக்கூடும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, புதுவையில் அனைத்து பி மற்றும் சி பிரிவு பணிகளுக்கும் இந்த ஒருமுறை மட்டுமாவது மூன்று ஆண்டுகள் வயது வரம்பு உயர்வு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரு பள்ளியை 15 ஆண்டுகளாகியும் கட்ட முடியவில்லை.
- மக்களுக்காக என்றால் எந்த செயலையும் செய்து முடிக்க வேண்டும்.
புதுச்சேரி:
அரசு அதிகாரிகளுக்கான பயிற்சி ஒப்பந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
நிர்வாகம் விரைவாக இருக்க பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் தற்போது வளர்ச்சி கிடைத்துள்ளது. அதைதான் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். நாட்டின் வளர்ச்சி போல் புதுச்சேரி வளர்ச்சி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
ஒரிடத்தில் முடியும் என்று சொல்லி மறு இடத்தில் வேறு கேள்வியை அரசு செயலர்கள் எழுப்பினால் எப்படி விரைவாக செய்ய முடியும்? ஒரு பள்ளியை 15 ஆண்டுகளாகியும் கட்ட முடியவில்லை. எப்படி முன்னேற்றம் கிடைக்கும்? கோப்புகள் திரும்பினால் முதலமைச்சர் நிலை எப்படி இருக்கும் என நினைத்து பார்க்க வேண்டும்.
மக்களுக்காக என்றால் எந்த செயலையும் செய்து முடிக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் அதுபோல் இல்லை. முதலமைச்சராகி 3½ ஆண்டுகளாகி விட்டது. சுற்றுலாவை மேம்படுத்த வளர்ச்சி திட்டத்தை 4 ஆண்டுகளாகியும் செய்ய முடியவில்லை.
நிர்வாக நிலையில் வெவ்வேறு எண்ணத்தில் கோப்புகள் செல்கிறது. ஒரு திட்டத்தை கொண்டு வர ஓராண்டு ஆகலாம் ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எதற்கு இத்தனை ஆண்டுகள்? எந்த சங்கடமும் இல்லாமல் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
அரசு பணிகளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை தர முடிவு எடுத்தோம். காலிபணியிடங்களை நிரப்பினால் அரசு பணிகள் விரைவாக நடக்கும். அரசு முடிவு எடுத்து நிலையில் விரைவாக பணியிடங்களை நிரப்புவதில் என்ன சிரமம் என தெரியவில்லை.
பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப முடிகிறது. ஆனால், மின்துறையில் முடிய வில்லை. அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து விரைவாக நிரப்ப வேண்டும். செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். காலம் கடத்துவதுபோல் இருக்க கூடாது. காலம் கடத்தாமல் மக்களுக்கு சேவையாற்றினால்தான் வளர்ச்சியை கொண்டு வரமுடியும்.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
- சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12-லிருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சமாக ரூ.36-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்வு.
- புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்வு. 25 கி.மீ., வரை ரூ.20 லிருந்து ரூ.25 ஆக அதிகரிப்பு.
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பிற்கு பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.
அதன்படி, ஏசி வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.7 ஆகவும், அதிகபட்சமாக ரூ.13-லிருந்து ரூ.17 ஆகவும் கட்டணம் உயர்வு.
ஏசி வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.10-லிருந்து ரூ.13 ஆகவும், அதிகபட்சமாக ரூ.26-லிருந்து ரூ.34 ஆகவும் அதிகரிப்பு. சொகுசு பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.12-லிருந்து ரூ.16 ஆகவும், அதிகபட்சமாக ரூ.36-லிருந்து ரூ.47 ஆகவும் உயர்வு.
புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 75 பைசா என்பது 98 பைசாவாக உயர்வு. 25 கி.மீ., வரை ரூ.20 லிருந்து ரூ.25 ஆக அதிகரிப்பு.
புதுச்சேரி எல்லைக்குள் ஏசி விரைவுப் பேருந்துக் கட்டணம் கி.மீ.,க்கு ரூ.1.30-லிருந்து ரூ.1.69 ஆக உயர்வு. புதுச்சேரி நகரத்திற்குள் வோல்வோ பேருந்துகளுக்கான கட்டணம் கி.மீ.,க்கு ரூ.1.70-லிருந்து ரூ.2.21 ஆக உயர்வு. புதுச்சேரியிரிலிருந்து கடலூருக்கான கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், விழுப்புரத்திற்கு ரூ.25-லிருந்து ரூ.30 ஆகவும் அதிகரிப்பு.
- பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை.
- கோப்பு கவர்னர் அனுமதி கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு உட்பட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான டோக்கன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுச்சேரியிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை. எனவே கடந்த ஆண்டை போல பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரேஷன்கார்டுகளுக்கு ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ரூ.500 ரேஷன்கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கோப்பு கவர்னர் அனுமதி கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.
- ரங்கசாமி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
- புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரஸ் ஆலோசனை பெறாமலேயே நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய பா.ஜ.க. அரசு நியமித்தது.
இதில் என்.ஆர். காங்கிரசுக்கு எந்த பிரதிநிதித்துவமும் அளிக்கப்படவில்லை. அன்று முதலே என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. இடையே உரசல் தொடர்ந்து வருகிறது.
அதிகார பதவிகளில் இல்லாத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும் 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள், தங்களுக்கு வாரிய பதவி வேண்டும் என கடந்த 4 ஆண்டாக கேட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளும், முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாரிய பதவி வழங்கும் படி வலியுறுத்தினர்.
ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி இதுவரை யாருக்கும் வாரிய பதவி வழங்கவில்லை. இது ரங்கசாமி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக்கூட கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி அளிப்பதில்லை. தொகுதியில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கக்கூட முடியவில்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதங்கப்பட்டனர்.
தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.
நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார். இந்த தோல்விக்கு பிறகு அதிருப்தி பா.ஜ.க., ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தினர். டெல்லியில் பா.ஜ.க. தலைமை நிர்வாகிகளை சந்தித்தும் இதுகுறித்து பேசினர்.
இதனிடையே புதுவை அரசு புதிதாக 8 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க ஒப்புதல் அளிக்க கூடாது என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்றம் கூடியது. கூட்டத்துக்கு வந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாண சுந்தரம், ரிச்சர்டு, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன், சீனிவாச அசோக் ஆகியோர் சட்டசபை படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பி தர்ணா போராட்டம் நடத்திய பின் சட்டசபை நிகழ்வில் பங்கேற்றனர்.
கூட்டணி ஆட்சியிலிருந்து கொண்டே அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் போராட்டம் நடத்தியிருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என்.ஆர். காங்கிரசுடனான கூட்டணியை தொடர பா.ஜ.க. தலைமை விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தகைய சூழலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் போராட்டம் கூட்டணி தொடருமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
- அவசரமாக விடுமுறை தேவை என்று எடுத்த அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு திரும்புவது கிடையாது.
- சிலர் வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்துவிட்டு அங்கேயே செட்டிலாகி விடுவது உண்டு.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் விடுமுறையில் சென்ற அரசு ஊழியர்கள் சிலர் பணிக்கு திரும்பாமல் நீண்ட நாட்களாக உள்ளனர். இதனால் பிற அரசு ஊழியர்களுக்கு பணிசுமை அதிகரித்துள்ளதோடு, அரசு துறை பணிகளிலும் தேக்க நிலை ஏற்படுகிறது.
அவசரமாக விடுமுறை தேவை என்று எடுத்த அரசு ஊழியர்கள் விடுமுறை முடிந்த பிறகு பணிக்கு திரும்புவது கிடையாது. அரசு துறைக்கும் தகவல் தெரிவிப்பது கிடையாது. சிலர் வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்துவிட்டு அங்கேயே செட்டிலாகி விடுவது உண்டு.
சிலர் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய துறைக்கு செல்லாமல் அரசியல்வாதிகளிடம் தஞ்சம் அடைவதும் உண்டு.
இது தொடர்பாக புதுச்சேரி தலைமை செயலர் சரத்சவுகானுக்கு புகார் சென்றதையடுத்து, ஒவ்வொரு அரசு துறையிலும் நீண்ட காலமாக பணிக்கு வராமல் டிமிக்கி கொடுத்து வரும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதையடுத்து நிர்வாக சீர்திருத்த துறை, அனைத்து துறைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பி பணிக்கு வராத அரசு ஊழியர் விவரங்களை உடனடியாக சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலமாக பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என கூறப்படுகிறது. அந்த விளக்கம் திருப்தி இல்லாத பட்சத்தில், பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது. மேலும் அவர்களது பணிக்காலம் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.