என் மலர்
நீங்கள் தேடியது "Pune"
- நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.
நேற்று நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய பிறகு அங்குள்ள உல்ஹாஸ் ஆற்றில் இறங்கினர்.
திடீரென நீர் மட்டம் உயர்ந்தபோது அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் சாம்டோலியில் உள்ள போடார் குரு வளாகத்தில் வசிக்கும் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) என்று அடையாளம் காணப்பட்டனர்.
நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார்.
- அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் குடியிருப்பு பகுதியில் தூங்கி கொண்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாடிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேகான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெயானந்த் என்பவர் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்துக்கொண்டு போன் பயன்படுத்தி கொண்டுள்ளார். அப்போது கட்டிலுக்கு கீழே அவரது வளர்ப்பு நாய் தூங்கி கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் சத்தமில்லாமல் நுழைந்த சிறுத்தை தூங்கி கொண்டிருந்த நாயை வேட்டையாடியது. அப்போது சிறுத்தையை கண்டு ஜெயானந்த் அதிர்ச்சியடைந்த
இதனையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
- பயின்றவர், பயிற்றுவிப்பவர் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன
- விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை
மகாராஷ்டிரா மாநில புனே மாவட்டத்தில் உள்ளது பாராமதி தாலுக்கா.
பாராமதியில் விமான ஓட்டுதல் பயிற்சி அளிக்கும் ரெட் பேர்ட் விமான பயிற்சி நிறுவனம் (Red Bird Flight Training Academy) எனும் நிறுவனத்திற்கு சொந்தமான டெக்னாம் விடி-ஆர்பிடி (Tecnam VT-RBT) விமானம் ஒன்று, நேற்று காலை 08:00 மணியளவில் அம்மாவட்டத்தின் கோஜுபாவி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு வயலில் கீழே விழுந்து நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், அவ்விமானத்தில் பயிற்சி பெற்று கொண்டிருந்த விமானி ஒருவருக்கும் அவருக்கு பயிற்றுவிப்பவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அவசரமாக தரையிறங்க முற்பட்ட போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 19 அன்று பாராமதி தாலுகாவில் ஒரு விமானம் கீழே விழுந்தது என்பதும் அச்சம்பவம் நடந்து 4 நாட்களில் அதே போன்ற இரண்டாவது சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள்
- போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வீடுகளில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.
திருநங்கைகள் யாசகம் பெறுவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி திருநங்கைகள் யாசகம் பெற முயன்றால், சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருநங்கைகளுக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து யாசகம் வழங்கும் தொகையை விட அதிக பணம் வேண்டும் வலுக்கட்டாயமாக கேட்கிறார்கள் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார்.
- இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரது பிறப்புறுப்பில் துளையிட்டு பூட்டு போட்டு கொடுமைப்படுத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார். அவர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் மே 16 ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் நாட்டை சேர்ந்த இந்த தம்பதி வேலை தேடி புனே நகரத்திற்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர் என்றும் வந்த இடத்தில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவன் அவளது பிறப்புறுப்பை ப்ளேடு வைத்து காயப்படுத்தி, ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளான் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மனைவியின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கணவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
- விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள சக்கன் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென எரிவாயு டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது.
வெடிப்பின் தீவிரம் மிக அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள ஓட்டல்கள், வீடுகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வெடித்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், எரிவாயு டேங்கரில் சட்டவிரோதமாக எரிவாயு நிரப்பப்பட்டதாகவும், இதனால் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
விபத்து தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகிறோம் என்றும் பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறையின் டிசிபி சிவாஜி பவார் தெரிவித்துள்ளார்.
- குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார்.
- ர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகி வரும் நிலையில், சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதாக என்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை திரிக்க முயன்றதாக சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.
- போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது அருந்திவிட்டு கார் ஒட்டிய 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் பைக்கில் வந்த ஒரு பெண் உட்பட 2 இளம் ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் குடும்ப கார் டிரைவரை விபத்து பழியை ஏற்குமாறு கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்த சிறுவனின் தாத்தாவையும் டிரைவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் புனே போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று (மே 27) சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை மாற்றியதாக 2 மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை பியூன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்ற தன் மூலம் ரூ.3 லட்சத்தை லஞ்சமாக சிறுவனின் குடும்பத்திடம் இருந்து மருத்துவர்கள் பெற்றதாக மருத்துவமனை பியூன் வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுவன் குடித்துவிட்டு வாகனம் ஒட்டியடியதற்கு சாட்சியாக ஏற்கனவே சிறுவன் மது அருந்திய சிசிடிவி காட்சிகள் பாரில் இருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் மனிதன் பட பாணியில் நடந்து கொண்டிருக்கும் இந்த வழக்கில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த நிமிர்ந்து நில் பட பாணியில் பியூன் மூலம் மருத்துவர்கள் லஞ்சம் வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுவன் 2 பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
- சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் சிறுவனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளார்.
இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வருகின்றனர்
இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.
- சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
- மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளளது அம்பலமாகியுள்ளது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளளது அம்பலமாகியுள்ளது. முன்னதாக இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது மகன் மது அருந்துவது போன்று வெளியாகியுள்ள வீடியோ போலியானது என்று ஷிவானி வீடியோவில் பேசி குறிப்பிடத்தக்கது.
- இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
- ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இளைஞர் ஒருவர் போக்குவரத்துக் காவலரின் கால்களை மசாஜ் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சாலையோரம் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் பாதுகாப்பு காவலரின் கால்களை அந்த இளைஞர் மசாஜ் செய்வது பதிவாகியுள்ளது.
சமீபத்தில் சிறுவன் குடிபோதையில் போர்ச்சே கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். புனேவையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்த கல்யாணி நகர் பகுதியில்தான் இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
போக்குவரத்துக் காவலரின் கால்களை இளைஞன் அமுக்கி விடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவிய நிலையில் புனே போக்குவரத்து துணை ஆணையர் சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், எரவாடா போக்குவரத்து டிவிஷன் சப் இன்ஸ்பெக்டர் கொராடே (57) வாகன சோதனையில் ஈடுபட்டார்.
ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 2 நாட்கள் காலை மற்றும் நைட் ஷிப்ட் பார்த்ததால் மிகவும் சோர்ந்து போனார். அவரது கால்கள் அதிக வலியெடுத்துள்ளது. இதனால் அங்கு வந்த இளைஞன் அவருக்கு தானாக முன்வந்து கால் அமுக்கி விட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வின் பலமும், பெரும்பான்மையும் குறைந்துள்ளது.
- ஓரிருவர் மட்டுமே தங்கள் விருப்பப்படி ஆட்சியை நடத்தினர்.
புனே:
மராட்டியத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் கட்சியின் 25-வது நிறுவன தினம் புனேயில் உள்ள அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி தலைவர் சரத்பவார் பேசியதாவது:-
ஆட்சி அதிகாரம் தற்போது பிரதமர் நரேந்திர மோடி கைகளுக்கு சென்றுள்ளது. ஆனாலும் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, மக்களின் ஆணை அவர்களுக்கு சாதகமாக இல்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பெற்ற இடங்களை ஒப்பிடுகையில், இந்த முறை அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பாராளுமன்றத்தில் அவர்களின் பலமும், பெரும்பான்மையும் குறைந்துள்ளது.
ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறவில்லை என்றால், அவர்கள் பெரும்பான்மையை பெறுவது கடினமாகிவிடும்.
கடந்த 5 ஆண்டுகளில் ஓரிருவர் மட்டுமே தங்கள் விருப்பப்படி ஆட்சியை நடத்தினர். நாட்டை பற்றி பரந்த கண்ணோட்டத்தில் அவர்கள் சிந்திக்கவில்லை. அதிகாரத்தை மையப்படுத்த அவர்கள் விரும்பினர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக மக்கள் நிலையை உணர்ந்து அதிகாரம் ஒன்று அல்லது 2 பேரின் கைகளில் குவிவதை தடுக்கும் வகையில் வாக்களித்துள்ளனர்.
முழு அதிகார பரவல் நடக்கவில்லை என்றாலும், அதிகார பரவலாக்கத்தின் பாதையில் செல்லும் நிர்வாகத்தை உருவாக்குவதற்காக செயல்முறையை தொடங்கி உள்ளனர்.
தற்போது மராட்டிய சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றுவதும், உழைப்பதும் என்னுடைய மற்றும் உங்களின் கூட்டு பொறுப்பாகும். இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிகாரம் உங்களிடம் இருக்கும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி சாமானிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நாம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.