search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pune Porsche Crash Case"

    • சிறுவனை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.
    • சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    டெல்லியின் ஜகத்புரி பகுதியில் தொழிலதிபரின் 16 வயது மகன் கார் ஓட்டி சென்று மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.

    காரின் உரிமையாளரான சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிருஷ்ணா நகரின் காலை உணவு சாப்பிட வந்ததாகவும் அந்த இடத்தில் தள்ளுவண்டி மீது கார் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த தூய்மை பணியாளர் மீது மோதியது. பின்னர் சாலையில் நடந்து கொண்டிருந்த 3 பேர் மோதியது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் (Porsche) மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தை ஏற்படுத்தியபோது சிறுவன் மதுபோதையில் இருந்துள்ளான்.
    • அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் (Porsche) மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

    ஆனால் உறவினர்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான். அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் இருவர் கடமை தவறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களுடைய குடும்ப டிரைவர் தவறாக மறைத்து வைத்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளனர்.

    குடும்ப டிரைவர்தான் இந்த விபத்தை ஏற்படுத்தினார் என இந்த வழக்கை திசைதிருப்ப அந்த சிறுவனின் குடும்பத்தினர் சதி செய்துள்ளனர். இது தொடர்பாக டிரைவரின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    சிறுவனின் தாத்தா மற்றும் தந்தை டிரைவரின் போனை எடுத்து வைத்துக் கொண்டு அவர்களுடைய பங்களா வீட்டில் மே 19-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மறைத்து வைத்துள்ளனர். பின்னர் அவரது மனைவி விடுவித்துள்ளார்.

    • 17 வயது சிறுவன் 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை.
    • விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் குடிபோதையில் சொகுசு காரை (Porsche car) அதிவேகமாக (150 கி.மீட்டர் வேகத்தில்) ஓட்டி வந்தபோது, அந்த கார் இரு சக்கர வாகனத்தில் மோதி இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    குடிபோதையில் கார் ஓட்டிய அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 15 மணி நேரத்தில் சிறார் நீதி வாரியம் அவருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், சாலை விபத்து குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுத உத்தரவிட்டது.

    குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமினா? என கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் சிறார் நீதி வாரியம் அந்த சிறுவனுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்துள்ளார். மேலும், சிறார் காண்காணிப்பு மையத்தில் ஜூன் 5-ந்தேதி வரை அடைக்க உத்தரவிட்டுள்ளது.

    வாரியத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யுமாறும், குற்றம் கொடூரமானதால் குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை வயது வந்தவராகக் கருதுவதற்கும் அனுமதி கோரி போலீசார் மீண்டும் வாரியத்தை அணுகினர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் 25-வது வயது வரை வாகனம் ஓட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மகாராஷ்டிரா போக்குவரத்து ஆணையர் விவேக் பிமான்வார் பிறப்பித்துள்ளார். 

    அந்த சிறுவன் ஓட்டி வந்த சொகுசு காரான 'Porsche Taycan'-க்கான நிரந்தர வாகனப் பதிவு கடந்த மார்ச் மாதம் முதல் நிலுவையில் உள்ளதாகவும், அதற்கான பதிவுக் கட்டணம் ரூ.1,758 உரிமையாளர் தரப்பில் செலுத்தப்படவில்லை என்றும் மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, 150 கிலோ மீட்டர் வேகம், தற்காலிக வாகனப் பதிவு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த சொகுசு காரை அடுத்த 12 மாதங்களுக்கு எந்தவொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது. விபத்து ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இந்த வழக்கில் கடமை தவறியதற்காக ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    காவல் ஆய்வாளர் ராகுல் ஜக்டேல் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் விஸ்வநாத் டோட்காரி ஆகியோர், இந்த வழக்கில் இரவு பணியில் இருக்கும் போலீஸ் துணை கமிஷனருக்கு - அவர்களின் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் நெறிமுறையை பின்பற்றாததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    ×