என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "R N Ravi"

    • நாட்டிற்காக தன் வாழ்வை வாழ்ந்த ஏவுகணை நாயகன் அப்துல்கலாம்.
    • அப்துல்கலாம் வகித்த உயர் பதவி இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

    சென்னை எம்.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அதன் அடியில் வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களை வடிவமைப்பதில் எம்.ஐ.டி. சிறப்பான சேவையை வழங்கி வருகிறது என்றும், வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கலாமை எம்.ஐ.டி.நிறுவனம் உருவாக்கியது பாராட்டுக்குரியது என்றும் கூறினார். 


    மேலும் அவர்  பேசுகையில் கூறியுள்ளதாவது:  நாட்டிற்காக தன் வாழ்வை வாழ்ந்த ஏவுகணை நாயகன் அப்துல்கலாம். சாதிக்க வானமே எல்லை என்ற அவரது எண்ணங்களே இளைஞர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது. அப்துல்கலாம் வகித்த உயர் பதவி இளைஞர்களுக்கு உண்மையான உத்வேகம் அளிக்கிறது.

    சிறந்த தலைவரான அவர், எளிமையானவராகவும், பணிவானவராகவும் இருந்தார். நமது நாட்டை நன்கு புரிந்து கொண்டு அதன் பாரம்பரியத்தையும் பெருமையையும் நிலை நிறுத்தினார், நவீன இந்தியாவை அவர் உருவாக்கினார். இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார்.

    • ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன.
    • அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.

    மாநாட்டில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 48 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரும்பாலான துணை வேந்தர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன. மேலும் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமி யங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.


    இன்றைய முதல் நாள் மாநாட்டில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வைத்திய சுப்பிரமணியம் எழுதிய நிறுவன மேம்பாட்டு திட்டம்- பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ண றிவு எதிர்காலம் குறித்து விளக்கப்பட்டது.

    மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினர். யு.ஜி.சி. சி.ஐ.எஸ்.ஆர். தேர்வுகளில் தகுதி பெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்றுமுன்தினம் மாலை ஊட்டிக்கு வந்தார். வருகிற 30-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். மாநாடு நிறைவுக்கு பின் 29-ந் தேதி கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சி முனையை பார்வையிடுகிறார். பின்னர் 30-ந் தேதி ஊட்டியில் இருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.

    • மத்திய அரசின் பட்ஜெட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
    • ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல.

    2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    ராஜ்பவனின் பதிவில், "வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிதிநிலை அறிக்கையை வழங்கிய பிரதமர் மோடி அவர்களுக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த முன்னோக்கு நிதிநிலை அறிக்கை, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளிப்பதுடன், மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதற்காகவும் இந்த பட்ஜெட்டை குறிப்பாகப் பாராட்டுகிறோம்.

    2047-ம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை வளர்த்து, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகையின் இந்த பதிவை மதுரை எம்பி சு. வெங்கடேசன் விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரின் எக்ஸ் பதிவில், "அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர். என்.ரவி. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை "முன்னோக்கு நிதிநிலை அறிக்கை" என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல" என்று பதிவிட்டுள்ளார்.

    • சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்ற வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது.
    • ஒரு வேளை, இதன் காரணமாக, ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமலேயே புறக்கணிந்துவிட்டாரோ என்ற எண்ணமும் எழுந்துள்ளது.

    சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து சென்றார். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார்.

    இந்நிலையில் பொய்மையின் மறு உருவமாகத் திகழும் ஆளுநர் உரை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஆளுநர் பேருரை என்பது ஆட்சியாளர்கள் இனி செய்யப் போகின்ற காரியங்களையும், கடைப்பிடிக்க இருக்கின்ற கொள்கைகளின் விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆனால். இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

    சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திட்டங்களே இல்லாத உரையாக, உண்மைகளை மறைக்கின்ற உரையாக ஆளுநர் உரை அமைந்தள்ளது. ஆளுநர் ஆற்றிய உரை என்று புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள் ஏற்பட்ட அமளி காரணமாக உணயை வாசிக்காமல் ஆளுநர் சென்றுவிட்டார். ஒருவேனை, ஆளுநர் அவர்கள் இந்த உரையை வாசித்து இருந்தால், அந்த உரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுத்தது போல் ஆகிவிடும்.

    அந்த அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, "சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது" என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்பதும்; அன்றாடம் பல கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன என்பதும்; திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு, வேங்கைவயலில் உள்ள பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்த வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும்; மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்படுவதும், அண்ணா பல்கலைக்கழக மாலாவி அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் நாடறிந்த உண்மை.

    இவற்றையெல்லாம் மறைத்து, சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்ற வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு வேளை, இதன் காரணமாக, ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமலேயே புறக்கணிந்துவிட்டாரோ என்ற எண்ணமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    ஆளுநர் உரையின் 58-வது பத்தியில், "மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நிறைவேற்றியுள்ளதுடன், குறுகிய காலத்தில் செய்த இச்சாதனைகள் குறித்தும், ஒருபித்த முன்னேற்றம் குறித்தும் இந்த அரசு பெருமிதம் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவர்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வு, சத்துணவுப் பணியாளர்களுக்கான கால முறை ஊதியம்.

    மாதம் ஒரு முறை மின் கட்டணம், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, ரேஷன் கடைகளில் கூடுதலாக உ தவாக உகு உளுத்தம் பருப்பு மற்றும் கூடுதலாக ஒரு கிலோ அரிசி, 100 ரூபாய் எரிவாயு மானியம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான வஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு என பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.

    இதற்கு முற்றிலும் முரணாக ஆளுநர் உரையில் தெரிவிப்பது என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல், ஆளுநர் உரையின் பத்தி 4-ல், மகளிர் உரிமைத் தொகை 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் மொத்தம் 2.20 கோடி குடும்பங்கள் இருக்கின்ற நிலையில், 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கியிருப்பது ஒருதலைபட்சமானது. இது தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு மின் கட்டண உயர்வு வாகன வரி உயர்வு பத்திரப் பதிவு உயர்வு விலைவாசி உயர்வு என பல்வேறு காரணிகள் மூலம் மாதம் 5,000 ரூபாய் வரை கூடுதல் நிதிச் சுமை சுமத்தப்பட்டிருக்கிறது.

    தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 1,000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 7,713 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்றும், 500 பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கைகள் வாயிலாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இதுவரை 2,578 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கப்பட்டதில் 33 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசின் எல்லாத் திட்டங்களும் இந்த நிலையில் தான் உள்ளன. நீட் தேர்வு ரத்து என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இன்று அதுபற்றி வாய் திறக்காதது ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும் செயல்.

    கூட்டு புலனாய்வுக்குழு தலைவராக பதவி வகித்து வரும் ஆர்.என்.ரவியை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. #RNRavi #DeputyNSA
    புதுடெல்லி:

    ஐ.பி.எஸ் அதிகாரியாக தனது பணியை துவக்கிய ஆர்.எம்.ரவி தற்போது கூட்டு புலனாய்வுக்குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். நாகலாந்துக்கான தேசிய சோசலிச குழுவின் அரசு பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.

    இந்நிலையில் தற்போது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக அவரை நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை தேர்வுக்குழு ஒருமனதாக அளித்துள்ளது. தற்போது அஜித் டோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #RNRavi #DeputyNSA
    ×