என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhika"

    • தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    திருப்பதி:

    பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.

    திருமணத்தில் கலந்து கொள்ள தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. முக்கிய பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி (வயது 26) மற்றும் முகமது ரஃபி ஷேக் (28) ஆகியோர் திருமணம் நடைபெறும் மண்டபத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

    சந்தேகத்திற்கு இடமாக இருவரும் சுற்றி திரிந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர்களை பிடித்து வெளியே அனுப்பினர்.

    வெளியே சென்ற இருவரும் மீண்டும் யாருக்கும் தெரியாமல் மண்டபத்திற்குள் நுழைந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள் 2 வாலிபர்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரவன் செல்ல அச்சப்பட்டு ஓட்டல் அறைக்கு சென்று உடை மாற்றினேன்.
    • ஆண்கள் யாரும் நடிகைகளுக்கு ஆதரவாக பேசவில்லை.

    பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்பட உலகம் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு, இயக்குனர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது:

    * மலையாள திரையுலகில் நடிகைகளின் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    * கேரவனில் கேமரா பொருத்தி நடிகைகள் உடை மாற்றும் வீடியோவை ஆண்கள் ரசித்ததை பார்த்தேன்.

    * கேரவன் செல்ல அச்சப்பட்டு ஓட்டல் அறைக்கு சென்று உடை மாற்றினேன்.

    * திரையுலக சிஸ்டமே சரியாக இல்லை.

    *ஆண்கள் யாரும் நடிகைகளுக்கு ஆதரவாக பேசவில்லை

    * நடிகைகளின் அறை கதவை தட்டும் நிலை பல திரையுலகிலும் உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு மலையாள படப்பிடிப்பின்போது அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
    • ராதிகா சரத்குமாரின் பேட்டி திரை உலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    மலையாள திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பாலியல் வன்முறைகள் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் உள்ளது.

    ஒரு மலையாள படப்பிடிப்பின்போது அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து செல்போனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதுபற்றி கூட்டத்தில் தமிழ் தெரிந்த ஒருவரிடம் விசாரித்தபோது கேரவனில் ரகசியமாக கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    இதையடுத்து கேரவன் ஆட்களை அழைத்து கேரவனுக்குள் கேமரா வந்தால் செருப்பால் அடிப்பேன் என எச்சரித்தேன். தொடர்ந்து நான் கேரவனை பயன்படுத்துவதில்லை. ஓட்டலுக்கு சென்று விடுவேன் என கூறினார்.

    ராதிகா சரத்குமாரின் பேட்டி திரை உலகம் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    தொடர்ந்து கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுப்பிய ராதிகாவிடம் விசாரிக்க முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து ராதிகாவை தொலைபேசியில் கேரள போலீசார் தொடர்பு கொண்டு கேரவனுக்குள் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்ட சம்பவம் பற்றி விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை ராதிகா.
    • இவர் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடியுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் 'கொலை', 'லவ் டுடே', 'சந்திரமுகி -2' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    சிவகுமார் குடும்பத்துடன் ராதிகா

    இந்நிலையில், ராதிகா சரத்குமார் தீபாவளி பண்டிகையை நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். இவர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேற்று மாலை தீபாவளியை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராதிகா பகிர்ந்துள்ளார்.




    • ஷெரோ 2022-க்கான விருதுகள் வழங்கும் விழாவில் திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
    • இவ்விழாவில் நடிகை ராதிகா இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள் கூறினார்.

    ஷெரோ 2022-க்கான விருதுகள் வழங்கும் விழாவில் சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், ஷெரோ ஹோம் புட் நிறுவனர் ஜெயஸ்ரீ, திலக் வெங்கடசாமி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் ஆகியோர் இணைந்து வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை படைத்த திருமதி நித்யாவிற்கு குயின் விருதை வழங்கினர்

    .

    ராதிகா

    ராதிகா

     

    இந்த விழாவில் வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனை புரிந்த 50க்கும் மேற்பட்ட பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை ராதிகா பேசியதாகவது, நானும் சுகாசினியும் 42 ஆண்டுகள் தோழிகளாக இருக்கிறோம். சுகாசினி மிகவும் பொறுமைசாலி, ஆனால் தான் பொறுமையாக இருக்க மாட்டேன்.

    ராதிகா

    ராதிகா

     

    திறமையான பெண்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தன்னை அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் போன்ற பிரபலங்களுக்கு பாராட்டுக்கள் விருதுகள் கிடைப்பது பெரிதல்ல. வீட்டிலேயே உணவு தயாரிக்கும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்குவது உண்மையில் பாராட்டுக்குரியது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பிரபலங்களாக உருவாக முடியாது இருந்தாலும் அனைவரும் இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ராணியாக இருப்பது மகிழ்ச்சி என்றார்.

    நடிகை ராதிகா தயாரிக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமியும் சிம்புவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ArvindSwamy #STR #Simbu #Radhika
    அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் என்று முக்கியமான நபர்களின் பயோபிக் படங்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க சில இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

    ஜெயலலிதா வாழ்க்கை படத்தை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. ராதிகா சரத்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐக் இயக்குகிறார்.



    இவர் ஏற்கனவே ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை இயக்கி உள்ளார். எம்.ஜி.ஆர் வேடத்துக்கு அரவிந்த்சாமியிடமும் எம்.ஆர்.ராதாவாக நடிக்க சிம்புவிடமும் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வருகிறது.

    எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் மோதல் ஏற்பட்டதும் எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள். இந்த சம்பவங்கள் படத்தில் முக்கிய காட்சிகளாக இடம்பெறும் என்று தெரிகிறது.
    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அதிதி ராவ் ஹிடாரி பாடல் ஒன்றை பாடுகிறார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    வசந்த பாலன் இயக்கத்தில் நான் நடித்து, இசையமைக்கும் ஜெயில் படத்தின் மூலம் திறமைமிக்க அதிதி ராவ் ஹிடாரி தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். காத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


    ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். #Jail #GVPrakashKumar #AditiRaoHydari
     
    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் `ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஜி.வி. அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Jail #GVPrakashKumar
    ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

    ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    விறுவிறுப்பாக நடந்துவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அருமையான கதையை கொடுத்த இயக்குநர் வசந்த பாலனுக்கு நன்றி. படத்தை திரையில் பார்க்க ஆவோலடு இருக்கிறேன்.

    ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Jail #GVPrakashKumar
     

    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #Jail #GVPrakashKumar
    `வெயில்', `அங்காடித் தெரு', `அரவாண்', `காவியத் தலைவன்' என யதார்த்தமான படங்களை கொடுத்தவர் வசந்த பாலன். இவரது `வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்.

    இந்த நிலையில், வசந்த பாலன் இயக்கி வரும் புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு `ஜெயில்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான அபர்ணதி நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் இந்த படத்தை தயாரிக்கிறார். #Jail #GVPrakashKumar
     
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராதிகா ஆப்தே, தான் சினிமா துறைக்கு வந்த புதிதில் பணத்திற்காக மோசமான படங்களில் நடித்ததாக கூறியிருக்கிறார். #RadikaApte
    ராதிகா ஆப்தே சமீபத்தில் தென்னிந்திய நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். படப்பிடிப்பில் தனது காலை அந்த நடிகர் உரசி தொல்லை கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். இந்தி படங்களில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து வருகிறார். அவரது ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    இந்த நிலையில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:-

    “சினிமா துறையில் பின்புலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடுகின்றன. உறவினர்கள் இல்லாதவர்கள் கஷ்டப்பட வேண்டி உள்ளது. பட வாய்ப்புக்கு அவர்கள் போராடும் நிலை இருக்கிறது. பின்புலம் உள்ளவர்கள் உறவினர்கள் உதவியால் வாய்ப்புகள் பெற்றாலும் திறமை இருந்தால்தான் அவர்களால் நிலைக்க முடியும். நான் எந்த பின்னணியும் இல்லாமல்தான் சினிமாவுக்கு வந்தேன். நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சினிமா துறைக்கு வந்தபோது எந்த மாதிரி கதைகளில் நடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அந்த படங்களில்தான் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.



    என் பிழைப்புக்கு தேவையான பணத்துக்காக அதுபோன்ற மோசமான படங்களை என்னால் தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு பெயர் புகழ் கிடைத்து விட்டது. நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. இதனால் எல்லா கதைகளுக்கும் ஒப்புக்கொள்ளாமல் எனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன்.”

    இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். 
    வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியிருக்கும் நிலையில், இந்த படம் இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று ஜி.வி. கூறியிருக்கிறார். #GV17 #GVPrakashKumar
    `வெயில்', `அங்காடித் தெரு', `அரவாண்', `காவியத் தலைவன்' என எதார்த்தமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பிரபலமாகி இருக்கும் வசந்த பாலன் அடுத்தாக ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

    இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்ற அபர்ணதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியக் கதாபாத்திரத்தில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு, கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறியிருப்பதாவது,



    `ஜி.வி.17 படப்பிடிப்பு ஆரம்பம்... சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கிறேன். இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்' என்று கூறியிருக்கிறார். 

    ஜி.வி.பிரகாஷின் 17-வது படமாக உருவாகும் இந்த படத்தை கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். ஜி.வி. நடிப்பில் `செம' படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. #GV17
     
    ×