என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rahane"

    • முதலில் பேட்டிங் செய்த விதர்பா 221 ரன்கள் குவித்தது.
    • மும்பை 19.2 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.

    இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் விதர்பா- மும்பை அணிகள் மோதின. முதலில் விளையாடிய விதர்வா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.

    பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ரகானே ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரித்வி ஷா 26 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். ரகானே 45 பந்தில் 84 ரன்கள் விளாசினார்.

    ஷிபம் டுபே 22 பந்தில் 37 ரன்களும், சூரயான்ஷ் ஷெட்ஜ் 12 பந்தில் 36 ரன்களும் அடிக்க மும்பை அணி 19.2 ஓவரில் 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    222 இலக்கை எட்டியதன் மூலம் டி20 நாக்அவுட் போட்டியில் அதிக ரன்களை துரத்திப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    இதற்கு முன்னதாக 2010-ல் நடைபெற்ற பைசல் பேங்க் டி20 கோப்பை (Faysal Bank T20 Cup 2010) கோப்பையில் கராச்சி அணி ராவல்பிண்டி அணிக்கெதிராக 210 ரன்களை சேஸிங் செய்தது.

    • தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • ரஹானே இன்னும் ஓய்வு பெறவில்லை என்று ரோகித் சமாளித்தார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி மழையால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தமிழக வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இதனையயடுத்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் ரோகித்திடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ரோகித், "நாங்கள் எப்போதும் நண்பர்களாக இருப்போம். இந்திய அணியில் இல்லாவிட்டாலும் நாங்கள் கண்டிப்பாக சந்திப்போம். ரஹானே மும்பையில் இருப்பதால் அடிக்கடி அவரை பார்ப்பேன். புஜாரா ராஜ்கோட்டில் உள்ளதால் அவரை அடிக்கடி சந்திக்க முடிவதில்லை என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே புஜாராவும் ரஹானேவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்பதை ரோகித் உணர்ந்தார்.

    பின்னர் பேசிய அவர், "நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஹானே இன்னும் ஓய்வு பெறவில்லை. நீங்கள் என்னைக் கொன்றுவிடுவீர்கள். புஜாராவும் ஓய்வு பெறவில்லை. உங்களின் கேள்வியால் தான் இப்படி பதில் கூறி விட்டேன்.

    இந்த நேரத்தில், மூவரும் இந்திய அணியில் இல்லை, ஆனால் அஸ்வின் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் ரஹானே மற்றும் புஜாரா இந்திய அணிக்கு திரும்பி வரக்கூடும். அவர்களுக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும்" என்று தெரிவித்தார்.

    • கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

    மார்ச் 22-ம் தேதி தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் டெல்லி, கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களின் கேப்டன்களை அறிவித்து விட்டனர். அந்த வகையில் கொல்கத்தா அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன்களை அந்த அணியின் நிர்வாகம் இன்று அறிவித்தது. கேப்டனாக ரகானேவை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது.

    இந்நிலையில் கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளதாக கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்துவதை நினைத்தால் பெருமையாகவும், ஆர்வமாகவும் உள்ளது. வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். போராடி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு ரகானே கூறினார்.

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோகித் சர்மாவையே கேப்டனாக நியமித்து இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடியது.

    இந்த தொடருக்கான இந்திய அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் 20 ஓவர் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரிலும் விளையாடவில்லை. மேலும் முதல் டெஸ்ட் போட்டியிலும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    2-வது டெஸ்டில் விராட் கோலி இந்திய அணியுடன் இணைந்து கேப்டனாக பணியாற்றுவார். முதல் டெஸ்ட் போட்டிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தநிலையில் ரகானேவை கேப்டனாக நியமித்த தேர்வுக் குழுவின் முடிவு தொடர்பாக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

    ரகானேவை கேப்டனாக நியமித்தது தவறு. இது சரியான முடிவு அல்ல. இந்த தேர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக அவரது சராசரி சிறப்பாக இல்லை.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தனது பேட்டிங் திறனை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இதனால் அவருக்கு நெருக்கடி இருக்கிறது. மேலும் கேப்டன் பதவியில் அவருக்கு கூடுதல் நெருக்கடிதான் ஏற்படும்.

    ரோகித் சர்மாவையே கேப்டனாக நியமித்து இருக்க வேண்டும். அவருக்கு ஓய்வு கொடுத்தது சரியல்ல.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறினார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ள நிலையில், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார். #IPL2019 #RR
    ஐபிஎல் 2019 சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது.

    ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி பெற போராடி வருகின்றன. இரு அணிகளும் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தன. நான்காவது போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில் ஒரு அணி வெற்றி பெற்றே தீரும் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் வெற்றியை பெற்றது.

    அதன்பின் கொல்கத்தாவுக்கு எதிராக சரணடைந்தது. ஐந்து போட்டியில் நான்கில் தோல்வியடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இருந்த போதிலும், இன்னும் பயப்பட தேவையில்லை என்று அந்த அணியின் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறுகையில் ‘‘எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நாங்கள் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஒரு போட்டியில் மட்டுமே மோசமாக தோல்வியடைந்துள்ளோம். மற்ற நான்கு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அவற்றில் மூன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.



    தொரடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவது கடினமானதாகிவிடும். ஆனால் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அதிக அளவில் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் வீரர்கள் அவர்களுடைய சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தினால், மகிழ்ச்சியான முடிவு வந்து சேரும்’’ என்றார்.
    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களின் சிறிய தவறு தோல்வி காரணமாக அமைந்துள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே கூறியுள்ளார். #Rahane
    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 198 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரகானே கூறியதாவது:-

    நாங்கள் 190 ரன்னுக்கு மேல் குவித்தோம். இது நல்ல ஸ்கோர். இந்த ஆடுகளத்தில் 150-க்கு மேல் எடுத்தாலே சிறப்பான ஸ்கோர் தான். ஆனால் நாங்கள் வார்னரின் அதிரடியை கட்டுப்படுத்த தவறவிட்டோம். எங்களது பந்துவீச்சாளர்கள் செய்த சிறிய தவறால் அவர் அபாரமாக ஆடிவிட்டார். இது தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. சன்ரைசர்ஸ் வீரர்கள் பவர்பிளேயை நன்றாக ஆடி ஆட்டத்தை மாற்றிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, இது எளிதான வெற்றி அல்ல. இந்த ஆட்டம் மிகவும் சவாலாகவே இருந்தது. எங்களது இதே அதிரடி ஆட்டம் தொடரும் என்று நம்புகிறேன் என்றார். #Rahane
    சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், 55 பந்துகளில் 147 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    இந்தூர்:

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது.

    ஸ்ரேயாஸ் அய்யர் 55 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உள்ளூர் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.  இதற்கு முன் ரிஷப் பந்த், ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

    இதுதவிர டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் அய்யர் (15 சிக்சர்கள்) எட்டினார். இதற்கு முன் முரளி விஜய் ஒரு இன்னிங்சில் 11 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    மெல்போர்ன் டெஸ்டில் 6 ரன்களுக்குள் புஜாரா, விராட் கோலி, ரகானே, ரோகித் சர்மா ஆட்டமிழந்து 72 வருடகால மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது. 292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து 3-வது வீரராக களம் இறங்கிய புஜாரா (0), 4-வது வீரராக களம் இறங்கிய விராட் கோலி (0), 5-வது வீரராக களம் இறங்கிய (1) ரகானே, 6-வது வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா (5) ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். ரோகித் சர்மாவைத் தவிர மற்ற மூன்று பேரையும் கம்மின் 6 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வீழ்த்தினால். இதில் விராட் கோலி, ரகானேவை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.



    கடந்த 25 வருடங்களாக இப்படி 3 முதல் 6-ம் நிலை வரை களம் இறங்கும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது கிடையாது. நான்கு பேரும் சேர்ந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் குறைவாக பெற்ற ரன்கள் என்று கடந்த 72 ஆண்டு காலமாக இருக்கும் மோசமான சாதனையை சமன் செய்துள்ளனர்.

    இதற்கு முன் 1946-ல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் (3 முதல் 6 வரை) 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். அதன்பின் தற்போதுதான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.



    1969-ல் ஐதராபாத்தில் நியூசிலாந்திற்கு எதிராக 9 ரன்களும், 1983-ல் அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 9 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்துள்ளனர்.
    மெல்போர்னில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விராட் கோலி, புஜாரா, ரகானேவை சாய்த்தார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா 151 ரன்னில் சுருண்டது.

    292 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஜோடியான ஹனுமா விஹாரி - மயாங்க் அகர்வால் 12-வது ஓவர்கள் தாக்குப்பிடித்தனர்.

    கம்மின்ஸ் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் விஹாரி ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த புஜாரா கம்மின்ஸ் வீசிய 15-வது ஓவரின் 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ரகானே 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்தியாவின் நட்சத்திர வீரர்களான புஜாரா, விராட் கோலி, ரகானே ஆகியோரை ரன்ஏதும் விட்டுக்கொடுக்காமல் வெறும் 6 பந்தில் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 28 ரன்கள் வரை விக்கெட் ஏதும் இழக்காத இந்தியா 32 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து வந்த ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் 292 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
    உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். #Rahane
    புவனேஸ்வரில் நடைபெற்ற எகம்ரா விளையாட்டு இலக்கிய விழாவில் ரகானே கலந்து கொண்டார். அப்போது ரகானேவிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் தனக்கு நிச்சயம் இடம் உண்டு என்று ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பேன். இதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. இதற்காகத்தான் நான் விஜய் ஹசாரோ மற்றும் தியோதர் டிராபி தொடரில் விளையாடினேன்.



    இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா தொடரில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போனது. நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம். நாங்கள் சிறந்த அணியாக உள்ளதால், வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ரகானே ஆட்டமிழக்காமல் 144 ரன்கள் விளாசினார். #DeodharTrophy #Rahane
    தியோதர் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ‘சி’ - இந்தியா ‘பி’ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா ‘பி’ அணிக்கெதிராக ரகானே தலைமையிலான இந்தியா ‘சி’ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    ரகனே மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இஷான் கிஷன் 87 பந்தில் 11 பவுண்டரி, 6 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த ஷுப்மான் கில் 33 பந்தில் 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 39 ரன்கள் சேர்த்தனர். தொடக்க வீரர் ரகனே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 156 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 144 ரன்கள் விளாச இந்தியா ‘சி’ 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் 353 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா ‘பி’ பேட்டிங் செய்து வருகிறது.
    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள புதுமுக வீரர்களான மயாங்க் அகர்வால், ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம் என்று ரகானே தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகியோர் இருந்தனர். இந்த நீண்ட கால பட்டியலில் தற்போது வெட்டு விழுந்ததுள்ளது. இங்கிலாந்து தொடரின்போது ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரின்போதே முரளி விஜய் நீக்கப்பட்டார்.

    இருவருக்கும் பதில் உள்ளூர் தொடர் மற்றும் இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக விளையாடிய மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இருவரில் ஒருவர் லோகேஷ் ராகுல் உடன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அணியில் இடம்பிடிக்க பலத்த போட்டி நிலவி வரும் நிலையில் இவர்களுக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்யும். இந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை வைத்துதான் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.



    இந்நிலையில் புதுமுக வீரர்களான மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம் என்று துணைக் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரகானே கூறுகையில் ‘‘மயாங்க் அகர்வால் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் மீது நெருக்கடியை திணிக்க மாட்டோம். அவர்களுக்கு அணி நிர்வாகம் ஆதரவாக இருக்கும். இது அவர்கள் திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு.

    ப்ரித்வி ஷா இந்திய அணியில் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவன் சிறுவனாக இருக்கும்போதே நான் பார்த்திருக்கிறேன். இருவரும் இணைந்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம். உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். உள்ளூர் தொடரிலும், இந்தியா ‘ஏ’ அணிக்காகவும் ப்ரித்வி ஷா விளையாடிய ஆட்டத்தை பார்க்க விரும்புகிறேன். இந்த அணிக்காக சிறப்பாக விளையாடுவார்.



    வெஸ்ட் இண்டீஸ் அணியை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். ஆனால், எங்களுடைய ஆட்டம் மேம்படைய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம். எதிரணியை பார்ப்பதைவிட எங்களுடைய முக்கிய திட்டம், சிறப்பான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான்.

    தனிப்பட்ட முறையில் விஜய் ஹசாரே தொடரில் விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான சிறந்த பயிற்சி’’ என்றார்.
    ×