என் மலர்
நீங்கள் தேடியது "rajasthan royals"
- 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
- போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்தது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதின. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இதைதொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு 11-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் மோதியுள்ளன.
இரு அணிகளுக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலாவதாக களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. சிஎஸ்கே பந்து வீச்சில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா-81, ரியான் பரக்-37, சஞ்சு சாம்சன்-20 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
- 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
- போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
இந்த போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில், இன்று மாலை 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை அணிகள் மோதின. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், இதைதொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது.
இரு அணிகளுக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற சிஎஸ்கே பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய உள்ளது.
- ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
- ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.
ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.
அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.
2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.
அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.
- ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- கவுகாத்தியில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர்.
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் புதிய விதிகளை கொண்டுவருவதை ஐபிஎல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் புதிய விதிகளை கொண்டுள்ளது.
ஆனால் இந்த ஆண்டு புதிதாக கலை நிகழ்ச்சியில் ஒரு புது முயற்சியை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆனால் இந்த முறை 12 மைதானங்களில் நடக்கும் தொடக்க போட்டியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடிய தொடக்க ஆட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த வகையில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி கவுகாத்தியில் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நட்சத்திரம் சாரா அலி கானின் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் பெங்களூருவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதே போல் தோல்வியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், தனது முதல் லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்சிடம் போராடி பணிந்தது.
கொல்கத்தா அணியின் முதல் ஆட்டத்தில் ரஹானே, சுனில் நரின் தவிர மற்றவர்களின் பேட்டிங் சிறப்பாக இல்லை. குயின்டான் டி காக், வெங்கடேஷ் அய்யர், ஆந்த்ரே ரஸ்செல் ஒற்றை படையை தாண்டவில்லை. பந்து வீச்சும் மெச்சும்படி இல்லை. எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததுடன், 4 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து ஏமாற்றம் அளித்தார்.
ராஜஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், ஐதராபாத்துக்கு எதிராக 286 ரன்களை வாரி வழங்கி விட்டனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை சிதறவிட்டு வள்ளலாக மாறினார். இமாலய இலக்கு என்றாலும் ராஜஸ்தான் அணியினர் 246 ரன்கள் வரை நெருங்கினர். சஞ்சு சாம்சன், துருவ் ஜூரெல் அரைசதம் அடித்தனர். விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கேப்டன் சஞ்சு சாம்சன் கடந்த ஆட்டத்தில் 'இம்பேக்ட்' வீரராகவே பயன்படுத்தப்பட்டார். இன்றைய ஆட்டத்திலும் அதே நிலை தொடருவதால் ரியான் பராக் கேப்டன் பணியை கவனிப்பார்.
மொத்தத்தில் இரு அணிகளும் தங்களது பந்துவீச்சில் உள்ள குறைபாட்டை சரி செய்து முதல் வெற்றிக்கு தீவிரம் காட்டும். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 29 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணியும் தலா 14 ஆட்டத்தில் வெற்றி கண்டிருக்கின்றன. மற்றொரு போட்டியில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ராஜஸ்தான்: சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா அல்லது ஹசரங்கா, சந்தீப் ஷர்மா, பசல்ஹக் பரூக்கி, துஷர் தேஷ்பாண்டே அல்லது ஆகாஷ் மத்வால்.
கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப்சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன் அல்லது அன்ரிச் நோர்டியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ஆர்ச்சர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்களை வாரி வழங்கினார்.
- இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி
நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) ரன் வழங்குவதில் வள்ளலாக திகழ்ந்தார். அவர் 4 ஓவர்கள் பந்து வீசி விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 76 ரன்கள் வாரி வழங்கினார். இது ஐ.பி.எல். தொடரில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சாக பதிவானது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய மொகித் ஷர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் (டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக) விட்டுக்கொடுத்ததே மோசமான பந்து வீச்சாக இருந்தது.
அந்த போட்டியை வர்ணனை செய்த ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் அணி வீரர் ஆர்ச்சர் குறித்து இனவாத கருத்து தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், "லண்டன் கருப்பு டாக்ஸிகளின் மீட்டரைப் போல, ஜோப்ரா ஆர்ச்சரின் மீட்டரும் அதிகமாகவே உள்ளது என ஹர்பஜன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் கருப்பு டாக்ஸியுடன் ஆர்ச்சரை ஒப்பிட்டுப் பேசியது 'இனவாத கருத்து' என வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
- ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது.
- ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக், ஐதராபாத் அணியை முதலில் பேட் செய்ய பணித்தார். அதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. கடந்த ஆண்டு 3 முறை 250 ரன்களை கடந்து இருந்த ஐதராபாத் ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது. அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணி, கவுண்டி அணியான சுர்ரே (தலா 3 முறை) ஆகியவை உள்ளன.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியினர் 34 பவுண்டரிகளை விளாசினர். 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவுண்டரி இதுவாகும்.
ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி எடுத்த 2-வது அதிகபட்ச ரன் இதுவாகும். ஏற்கனவே ஐதராபாத் அணி கடந்த ஆண்டு பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக நீடிக்கிறது.
- ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார்.
- தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ஐதராபாத்:
18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்து அசத்தியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தினார். டிராவிஸ் ஹெட் 67 ரன்னில் அவுட் ஆனார். இஷான் கிஷன் 106 ரன்னுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 242 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் விக்கெட் எடுக்காமல் 76 ரன்கள் கொடுத்தார்.
இதன்மூலம் ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ஜோப்ரா ஆர்ச்சர் படைத்துள்ளார்.
ஒரு ஐ.பி.எல். இன்னிங்சில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த வீரர்கள்:
ஜோப்ரா ஆர்ச்சர்: 4-0-76-0
மொஹித் சர்மா: 4-073-0
பாசில் தம்பி: 4-0-70-0
- சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்குவார்கள்.
- ஜாஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, மபாகா, ஆகாஷ் மத்வால், அசோக் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
பேட்ஸ்மேன்கள்
சுஞ்சு சாம்சன், ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, குணால் ரத்தோர், ஷிம்ரன் ஹெட்மையர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், த்ருவ் ஜுரேல், ரியான் பராக்
ஆல்-ரவுண்டர்கள்
நிதிஷ் ராணா, யுத்வீர் சிங்
பந்து வீச்சாளர்கள்
ஜாஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, க்வேனா மபாகா, அஷோக் சர்மா, சந்தீப் சர்மா,
தொடக்க பேட்ஸ்மேன்கள்
சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். ஆனால் முதல் 3 போட்டிகளில் சஞ்சு சாம்சன் (கைவிரலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை) பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களம் இறங்குவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மிடில் ஆர்டர் வரிசை
நிதிஷ் ராணா, ஹெட்மையர், ரியான் பராக், த்ருவ் ஜுரேல் ஆகியோர் உள்ளனர். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி அணியில் உள்ளார். இவர் களம் இறக்கப்படுவாரா? என்பது பின்னர்தான் தெரியவரும். இவர்களுடன் ஷுபம் துபே, குணால் ரத்தோர் உள்ளனர்.

தொடக்க ஜோடி சரியாக விளையாடவில்லை என்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியை எப்படி அழைத்துச் செல்வது என்பதை பார்க்க சுவாரஷ்யமாக இருக்கும்.
வேகப்பந்து வீச்சு
ஜாஃப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, பாசல்ஹக் பரூக்கி, மபாகா, ஆகாஷ் மத்வால், அசோக் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
இதில் சந்தீப் சர்மா, தேஷ்பாண்டே, ஜாஃப்ரா ஆர்ச்சர், பரூக்கி, மபாபா, மத்வால் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சில் பலமாகவே உள்ளது.
சுழற்பந்து வீச்சு
மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் மட்டுமே முதன்மை சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்களுடன் குமார் கார்த்திக்கேய சிங் உள்ளார். ரியான் பராக் பகுதி நேரமாக சுழற்பந்து வீசக்கூடியவர். மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆடும் லெவனில் இடம் பிடித்தால் சுழற்பந்து வீச்சு வலுவானதாகவே கருதப்படும்.
வெளிநாட்டு வீரர்கள்
ஹெட்மையர், ஆர்ச்சர், தீக்ஷனா, ஹசரங்கா, பரூக்கி, மபாகா. இந்த 6 பேரில் ஹெட்மையர், ஆர்ச்சர் மற்றும் இரண்டு ஸ்பின்னர்கள் தீக்ஷனா, ஹசரங்கா ஆகியோருடன் களம் இறங்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் ஹெட்மையருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஒருவரை களம் இறக்கலாம்.
ராஜஸ்தான் எப்போதுமே தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடும். 2-வது பாதியில் மோசமாக விளையாடி பிளேஆஃப் சுற்றை எட்ட முடியாத நிலை ஏற்படும். இல்லையெனில் புள்ளிகளில் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க முடியாத ஏற்படும். இந்த முறை இதை மாற்றிக்காட்டுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது.
ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. 23-ந் தேதி சன்ரைசர்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் அணி விளையாடும் முதல் 3 போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டுமே இடம்பெறுவார் என்றும் ஆர்ஆர் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பிசிசிஐ இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
ராஜன்ஸ்தான் அணி விளையாடிய பயிற்சி போட்டியில் ரியான் பராக் 64 பந்தில் 144 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும்.
- ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் சாம்சன் காயம் அடைந்தார்.
- விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சஞ்சு சாம்சன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
இந்த தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் உள்ளார். இவர் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு இங்கிலாந்து- இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியது. அப்போது ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் சாம்சன் காயம் அடைந்தார்.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் முழு உடற்தகுதியை எட்டிய நிலையில் இன்று அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். சாம்சன் முழு உடற்தகுதியை மீட்டெடுத்திருந்தாலும், உடனடியாக விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொள்வாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அவர் உடற்தகுதியுடன் இல்லை என்றால், துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராக களமிறங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- கடைசி அணியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று கேப்டன் யார் என்பதை அறிவித்துள்ளது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்ட்யா), சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்), குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன் கில்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (பேட் கம்மின்ஸ்), ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்) ஆகிய ஐந்து அணிகள் கேப்டன்களை தக்கவைத்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தக்கவைக்கவில்லை.
மெகா ஏலத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணிகளாக கேப்டன்களை அறிவித்து வந்தது. இறுதியான இன்று காலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது.
இந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா ஆகிய ஐந்து அணிகள் புது கேப்டன்களாக களம் இறங்குகின்றன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமித்துள்ளது. ஆர்சிபி ரஜத் படிதாரை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அக்சார் பட்டேலை கேப்டனாக நியமித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் ஷ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானேவை கேப்டனாக நியமித்துள்ளது.
இதில் ரஜத் படிதார் தற்போது புதிதாக கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். அக்சார் பட்டேல் பகுதி நேர கேப்டனாக பணியாற்றியுள்ளார். தற்போது முழு நேர கேப்டனாக செயல்பட உள்ளார்.
10 அணிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மட்டும் வெளிநாட்டு வீரரை கேப்டனாக கொண்டுள்ளது.