search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Shukla"

    • ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கூறினார்.
    • இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரரது கருத்துக்கு பாஜக முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

    இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

    அதில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். விளையாட்டு வீரர்கள் குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கத்தேவையில்லை. இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

    • ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணி புறந்தள்ளப்பட்டது.
    • பாராட்டு விழாவின்போது உலக அதிகாரிகள் யாரும் அணியுடன் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் ராஜீவ் சுக்லா கலந்து கொண்டனர்.

    வீரர்கள் உட்கார்ந்த வரிசையில் ஜெய்ஷா மற்றும் ராஜீவ் சுக்லா முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

    இதனை முன்னாள் வீரரும், முன்னாள் எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கடும்யைாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ஜெய்ஷா அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு, உண்மையிலேயே உலகக் கோப்பையை வென்றது ஜெய்ஷா, ராஜீவ் சுக்லா.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணி புறந்தள்ளப்பட்டது. பாராட்டு விழாவின்போது உலக அதிகாரிகள் யாரும் அணியுடன் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை. வெட்கம் கெட்ட சந்தர்ப்பவாதிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ×