என் மலர்
நீங்கள் தேடியது "Rajyasabha"
- வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் பிற்பகல் 2 மணிவரை சபாநாயகர் மக்களவையை ஒத்திவைத்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்தனர்.
அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், எம்.பி.க்களை டி-சர்ட் அணிந்து வரவேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கர் அவையை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அவையில் தான் பார்த்த விஷயங்களைப் பற்றி பேசவேண்டும் எனக்கூறி அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், மக்களவை மீண்டும் கூடியதும் வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மாநிலங்களவை கூடியதும் முதலில் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- பாராளுமன்றத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.
- உறுப்பினர்கள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், அவை தலைவர் தன்கார் அவையை மீண்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் அவை நடவடிக்கைகள் இன்று 12வது நாளாக முடங்கியது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பிய நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோன்று, பாராளுமன்ற மேலவையும், மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்றும் கருப்பு உடை அணிந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதன்பின்னர் மேலவை கூடியது. அப்போது அதானி விவகாரம் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதில், வன பாதுகாப்பு திருத்த மசோதா, 2023 பற்றிய கூட்டு குழுவுக்கான நியமனம் பற்றிய தீர்மானம் அவையில் எடுத்து கொள்ளப்பட்டது, சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் சார்பில், உறுப்பினர்களை நியமிப்பது பற்றிய தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், குரல் வாக்கெடுப்பு வழியே அது நிறைவேற்றப்பட்டது.
இந்த சூழலில், உறுப்பினர்கள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், அவை தலைவர் தன்கார் அவையை மீண்டும் ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதன்படி வருகிற திங்கட்கிழமை காலை 11 மணி வரை (ஏப்ரல் 3) ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளியால் மக்களவை வருகிற ஏப்ரல் 3ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
- பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்.
- மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம்.
மாநிலங்களவையில் திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா சுட்டிக்காட்டிய பெரியாரின் மேற்கோளுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததற்கும், பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மாநிலங்களவையில் எம்.பி., எம்.எம்.அப்துல்லா
உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.
மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்.
மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும்- எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம். அனைவரும் பயன்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- அ.தி.மு.க.விற்கு தற்போதைய நிலையில் 2 ராஜ்யசபா சீட் கிடைக்கும். பா.ம.க தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
- கூட்டணியில் இருந்த போது அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க.விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டதாக தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் 6 ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசியல் கட்சியினர் இடையே ராஜ்யசபா இடம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க.விற்கு தற்போதைய நிலையில் 2 ராஜ்யசபா சீட் கிடைக்கும். பா.ம.க தலைவர் அன்புமணியின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவடைய உள்ளது. கூட்டணியில் இருந்த போது அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. ஒதுக்கியது. அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைவதால் அந்த இடத்தை பெற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று முன்தினம் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறும்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது என்றார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் இதுவரை தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் குறித்து வாக்குறுதி அளிக்கவில்லை. சீட் குறித்து அப்போது பார்த்துக்கொள்ளலாம் என அ.தி.மு.க. கூறியதாகவே தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 20-ந்தேதி அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் 5 எம்.பி. தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் ராஜ்யசபா சீட் பற்றி குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.

தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் என அ.தி.மு.க. சார்பில் இதுவரை குறிப்பிடப்படவில்லை. தே.மு.தி.க.வினர் மட்டுமே தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேசி வருவதாக அ.தி.மு.க. தரப்பில் கூறப்படுகிறது.
கூட்டணி அமைந்தபோதே ராஜ்யசபா சீட் என ஒப்பந்தத்தில் கையெழுத்தானதாகவும் பாராளுமன்ற தேர்தலின்போதே ராஜ்யசபா சீட் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் தே.மு.தி.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் ஏற்கனவே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், ராஜ்யசபா சீட் விவகாரத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
- மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
- இளையராஜாவுக்கு, மத்திய இணை மந்திரி எல்.முருகன் சால்வை அணிவித்து வாழ்த்து.
விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா பதவியேற்றுக் கொண்டார். தமிழில் அவர் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பதவி ஏற்ற பிறகு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அவரது அழைப்பின்பேரில் டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இளையராஜா சந்தித்தார்.

முன்னதாக பாராளுமன்ற அலுவலகத்தில் இளையராஜாவிற்கு சால்வை அணித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி, மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட, இசைஞானி இளையராஜா சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன் என்று தமது டுவிட்டர் பதிவில், மந்திரி எல். முருகன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவியும் இளையராஜாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கேரளாவை சேர்ந்த மத்திய இணை மந்திரி முரளிதரனும் உடன் இருந்தார்.
- பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டார்.
கடந்த திங்களன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றதால் இளையராஜா பங்கேற்கவில்லை.
இதற்கிடையே, இசைஞானி இளையராஜா மாநிலங்களவை எம்.பி. ஆக நாளை பதவி ஏற்க நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா இன்று பதவியேற்றுக் கொண்டார். மேலும், அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேர் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
2 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான பிரச்சனையை எழுப்பி முழக்கமிட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். #AssamNRC #NRCReleased
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி முக்கிய மசோதாக்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய நடன கலைஞர் சோனல் மன்சிங், டெல்லியை சேர்ந்த பேராசிரியர் ராகேஷ் சின்ஹா, ஒடிசாவை சேர்ந்த சிற்பக் கலைஞர் ரகுநாத் மொஹபத்ரா ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
