என் மலர்
நீங்கள் தேடியது "Rangoli Competition"
- ஜிப்மர் டீன் வழங்கினார்
- ஜிப்மர் பேராசிரியர் டாக்டர் அபிஷேக் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
புதுச்சேரி:
உலக ரத்த கொடை தினத்தை முன்னிட்டு ஜிப்மர் ரத்த வங்கி சார்பில் ரங்கோலி கோலப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் ரத்தக்கொடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரங்கோலிகள் போடப்பட்டன.
புதுவை மாநில என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் அலமேலு மங்கை ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த ரங்கோலிகளை தேர்வு செய்தனர்.
சிறந்த ரங்கோலிக்கான முதல் பரிசை ஜிப்மர் செவிலிய அதிகாரிகள் சியாமளாதேவி - மாலதி அணியும், 2-வது பரிசினை ஓவியர்கள் அறிவழகி- ஞானவேல் அணியும் 3-ம் பரிசினை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விஜய விவேஷ்குமார்-விஜய விஜேஷ்குமார் அணி மற்றும் நந்தினி- அக்ஷ்யா அணியும் வென்றனர்.
ஜிப்மர் டீன் டாக்டர் பங்கச் குந்த்ரா, புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர், ஜிப்மர் பேராசிரியர் டாக்டர் அபிஷேக் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை முதன்மை மருத்துவ அதிகாரி வடிவேல் மற்றும் ஜிப்மர் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரு குடும்பத்தில் 2 பேர் கலந்து கொள்ள தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
- இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நெல்லை:
உலக புவி தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை 'பூமியின் எதிர்கால பாதுகாப்பிற்கான முதலீடு' என்ற தலைப்பில் குடும்ப ரங்கோலி வரைதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான குடும்பத்தினர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரங்கோலி வரைந்தனர்.
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கு ஒரு குடும்பத்தில் 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்குள் படிக்கும் ஒருவர் மற்றும் அவரது பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி இவர்களில் யாரேனும் ஒருவர் என 2 பேர் கலந்து கொள்ள தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் அறிவியல் மையத்துக்கு வந்து போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிறந்த ரங்கோலிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய அலுவலர் குமார் மற்றும் கல்வி அலுவலர் லெனின் ஆகியோர் செய்து இருந்தார்.