search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranveer allahbadia"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? என யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • சர்ச்சை கருத்து தெரிவித்தற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் இவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    சமீபத்தில் India's Got Tatent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார்.

    இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையே சர்ச்சை கருத்து கூறியதற்காக யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், " நகைச்சுவை என்ற பெயரில் வரம்பு மீறி பேசுவதை ஏற்க முடியாது. உங்களுக்கு ஒரு பிளாட்பார்ம் கிடைக்கிறது என்பதற்காக நீங்கள் எதையும் பேசலாம் என்று அர்த்தமல்ல. பிரதமர் அவருக்கு விருது வழங்கியுள்ளார். தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் நான் இந்த பிரச்சினையை எழுப்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவின் சர்ச்சை கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்திலும் பல எம்.பி.க்கள் புகார் கொடுத்தனர்.

    இதனையடுத்து, யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியாவிற்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதற்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிலைக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் நிலைக்குழுவின் முன்பு நேரில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்கு ரன்வீர் அல்லாபாடியா விளக்கம் அளிக்க வேண்டுமென அவருக்கு நோட்டீஸ் வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

    • யூடியூபரின் கருத்து பெரும் கண்டத்திற்கு உள்ளானது.
    • யூடியூபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு.

    பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாபாடியா. பீர்பைசெப்ஸ் என்று அறியப்படும் இவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் India's Got Latent நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம் கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கேள்வியை கேட்டார். இவரது கேள்வி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் இருந்தது.

    இதையடுத்து ரன்வீர் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இவருக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஹேமந்த் பிஸ்வா, "இன்று கவுகாத்தி காவல் துறையினர் சில யூடியூபர்கள் மற்றும் சமூக வலைதளInfluencers மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி அசிஷ் சஞ்சல்னி, ஜஸ்பிரீத் சிங், அபூர்வா மகிஜா, ரன்வீர் அல்லாபாடியா மற்றும் சமய் ரெய்னா மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    India's Got Latent நிகழ்ச்சியில் ஆபாச மற்றும் தரக்குறைவான விவாதத்தில் ஈடுபட்டதாக இவர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா? அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா?" இரண்டில் எதை தேர்தடுப்பீர்கள் என்று கேட்டார். 

    ×