என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashid Khan"

    • அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ரஷித் கான் கூறினார்.
    • இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானர். கடந்த 1990-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2007 வரை மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மனாக அந்த சமயத்தில் இருந்த கிளன் மெக்ராத் முதல் சோயப் அக்தர் வரை அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் தலா 10000-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.

    நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழும் அவர் கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரைன் லாரா வர்ணனையாளராக செயல்பட்டார்.

    மறுபுறம் டிசம்பர் 13-ம் தேதி முதல் துவங்கும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். அந்த நிலையில் நேராக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்ற அவர்கள் சர்வதேச அரங்கில் மோத வாய்ப்பில்லை என்றாலும் நட்பின் அடிப்படையில் வலைப் பயிற்சியில் மோதினால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக போட்டி போட்டார்கள்.


    அதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலுடன் கூடிய நிலையில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கானை எதிர்கொண்ட பிரைன் லாரா எந்த பந்துகளிலும் கொஞ்சமும் தடுமாறாமல் அதிரடியாக பேட்டிங் செய்தார். குறிப்பாக காத்திருந்து அடித்த ஸ்கொயர் கட் மற்றும் இறங்கி வந்து பவுண்டரி பறக்க விட்ட அவரது ஷாட்களை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    24 வயதாகும் நம்பர் ஒன் டி20 பவுலரான ரஷித் கான் பந்துகளை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரஷித் கான் பேசியது பின்வருமாறு. "அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் சுழல் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் பிரைன் லாரா போன்ற ஒருவருக்கு பந்து வீசுவது சவாலாகும். இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்" என்று கூறினார்.

    அவரை எதிர்கொண்டது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. "இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும் ரசித் தற்போது பார்மில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற பெரிய பவுலரை எதிர்கொள்வது அற்புதமானது. அது எனக்கு அதிர்ஷ்டமாகும்" என்று கூறினார்.

    • ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் இருந்திருக்கிறார்.
    • ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது.

    டி20 உலக கோப்பையில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி தொடர் தோல்விகளை தழுவி, தொடரை விட்டு வெளியேறியது. ஆப்கானிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. டி20 உலக கோப்பை தோல்வி எதிரொலியாக அந்த அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் முகமது நபி.

    இதையடுத்து ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின் ஆல்ரவுண்டரும் மேட்ச் வின்னருமான ரஷித் கான், சர்வதேச கிரிக்கெட்டில் 5 டெஸ்ட், 86 ஒருநாள் மற்றும் 74 டி20 போட்டிகளில் ஆடிய சிறந்த அனுபவம் கொண்டவர்.

    பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்து ஆப்கானிஸ்தான் அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரஷித் கான், ஏற்கனவே 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார்.

    2019-ல் 7 டி20, 7 ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியிருக்கிறார். ரஷித் கான் கேப்டன்சியில் ஆடிய 7 டி20 போட்டிகளில் 4 வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. இந்நிலையில், இப்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெறும் 24 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுள்ள ரஷித் கான் தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், அணியை முன்னின்று வழிநடத்த சரியான வீரர் ஆவார். 

    • இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.
    • பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். அதிரடி பேட்ஸ்மேனான அவர், தனியார் டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்களின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு டிவில்லியர்ஸ் கூறியதாவது:-


    எனது ஒட்டுமொத்த காலத்திற்கான சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.

    பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார். அவர் வெற்றி பெற வேண்டுமென்று எப்போதும் நினைப்பார். அவர் மிகச்சிறந்த போட்டியாளர். அவர்தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், பல்வேறு 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட போட்டித் தொடரில் விளையாடி வருகிறார்.

    டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது.
    • இரு அணிகளும் இரு தரப்பு தொடரில் விளையாடியது இதுவே முதல் முறையாகும்.

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்த முடிந்த நிலையில் அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரஷித்கான் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    இவ்விரு அணிகள் மோதிய டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வென்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளும் இரு தரப்பு தொடரில் விளையாடியது இதுவே முதல் முறையாகும். முதல் தொடரையே கைப்பற்றி ஆப்கானிஸ்தான் ஏற்கனவே புதிய வரலாற்று சாதனை படைத்தது.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 100 பந்துகளில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட விட்டு கொடுக்காமல் ரஷித்கான் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ரஷித் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த போட்டியில் அவர் இரண்டு சிக்சர்களை விட்டுக்கொடுத்தார்.

    இதனால் தொடர்ச்சியாக 106 பந்துகளில் பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியுள்ளார். 2 சிக்சர்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் தொடர்ச்சியாக பவுண்டரிகள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியது முடிவுக்கு வந்துள்ளது.

    • முதலில் ஆடிய குஜராத் விஜய்சங்கர், சாய் சுதர்சன் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய கொல்கத்தா 207 ரன்கள் மட்டுமே திரில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார். அவர் 63 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷுப்மன் கில் 39 ரன்னில் அவுட்டானார்.

    கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஜெகதீசன் 6 ரன்னும், குர்பாஸ் 15 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    3வது ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் அய்யர், நிதிஷ் ரானா ஜோடி அதிரடியாக ஆடியது. இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 45 ரன்னில் அவுட்டானார்.

    வெங்கடேஷ் அய்யர் 40 பந்தில் 5 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 83 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    17-வது ஓவரை வீசிய ரஷீத் கான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆண்ட்ரூ ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்குர் ஆகியோரை வெளியேற்றினார்.

    ஆனால், கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து அணியை திரில் வெற்றிபெறச் செய்தார் ரிங்கு சிங்.

    இறுதியில், கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

    குஜராத் சார்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
    • அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என டுவிட்டர் பயனர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் ஐ.பி.எல். போட்டிகளில் கலக்கி வருகிறார். மாயாஜால சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அவர் குஜராத் காந்திநகரில் தெருவில் இந்திய ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    முபாடல் வோக்ரா என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள 26 வினாடிகள் கொண்ட அந்த வீடியோ காட்சியில் ரஷித்கான் பேட்டிங் செய்கிறார். பின்னணியில் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்த இந்த வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் ரஷித்கானை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், வெறுப்பாளர்கள் இல்லாத, அனைவராலும் விரும்பப்படும் ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என குறிப்பிட்டுள்ளார்.

    • சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
    • எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார்.

    மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 57-வது ஐபிஎல் லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

    இந்நிலையில் தோல்வி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில்:-

    எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார். அவர் பேட்டிங் செய்த விதமும், பவுலிங் செய்த விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரை தவிர்த்து நாங்கள் எங்களுடைய சிறப்பான செயல்பாட்டை இன்று வெளிப்படுத்த தவறிவிட்டோம். ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் இல்லை என்று கூற வேண்டும். ஏனெனில் எங்களுடைய திட்டங்களில் தெளிவு இல்லை.

    அதோடு அதனை நாங்கள் சரியாகவும் பயன்படுத்தவில்லை. இந்த மைதானத்தில் நாங்கள் 25 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டதாக நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது. தற்போதைய டி20 கிரிக்கெட்டில் அவருக்கு எதிரான திட்டங்கள் தவறி போனால் அவர் எப்படி பேட்டிங் செய்வார் என்பதை இந்த போட்டியின் மூலமே அறிந்து கொள்ளலாம்.

    இந்த போட்டியில் எங்களுடைய திட்டங்கள் தவறியதாலே தோல்வி கிடைத்தது. ஆனால் இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டு வருவோம்.

    இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.

    • ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.
    • இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக ரஷித்கான் மாறியுள்ளார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று சென்னையில் தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

    சென்னை அணியில் பேட்டிங் வரிசை தரமாக அமைந்தாலும் பந்துவீச்சு சொல்லுபடியாக இல்லை. அதே வேளையில் பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து பகுதிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் குஜராத் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

    குஜராத் அணியின் பேட்டிங்குக்கு முக்கியமாக கருதப்படுவர் சுப்மன் கில். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்சில் 680 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். பந்து வீச்சில் ரஷித்கான் மற்றும் முகமது சமி சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களில் அவர்கள் இருவரும் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

    இந்நிலையில் குஜராத் அணியின் துருப்பு சீட்டு ரஷித் கான் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத் அணிக்கு ரஷித் கான் தான் துருப்புச்சீட்டு. குஜராத் அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றால் ரஷித் கானை தான் அழைத்து வருகிறார்கள். ஹர்த்திக் பாண்ட்யா ரஷித் கானை பயன்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது. ரஷித் கான் பார்ட்னர்ஷிப்புகளை முறியடிக்க விரும்புகிறார்.

    அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தற்போது இந்த சீசனின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக மாறியுள்ளார். அதுபோல சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களுக்கு அவர் அதிக அளவில் நெருக்கடி கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    • ஐபிஎல் தொடரில் குஜராத் அணி சேசிங் செய்வதில் மிக சிறந்த அணியாக செயல்பட்டு வந்தது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை முதல்முறையாக வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குவாலிபையர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை முதல்முறையாக வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    இந்த போட்டியில் 172 ரன்கள் மட்டுமே அடித்த சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா என ரசிகர்களுக்கு கேள்வியாக இருந்தது. ஏனென்றால் குஜராத் அணி சேசிங் செய்வதில் மிக சிறந்த அணியாக செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரஷித்கான் விக்கெட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது வேற லெவலாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    குஜராத் அணி பவர் பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதில் ஒன்று பாண்ட்யா. இவருக்கு டோனி அழகாக ஸ்கெட்ச் போட்டார் என்றே சொல்லலாம்.

    பவர் பிளேயில் முதல் 5 ஓவரில் 39 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பவர் பிளேயின் கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் குஜராத் அணி வீரர்கள் இருந்தனர். அந்த ஓவரை தீக்சனா வீசினார். முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே வந்தது. இதனால் 4-வது பந்தை பாண்ட்யா ரிஷ்க் எடுத்து ஆப் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சி செய்தார். அது பீல்டரிடன் தஞ்சம் புகுந்தது. 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே வந்த நிலையில் 2 பந்துகளில் கண்டிப்பாக ரிஷ்க் ஷாட் ஆட முயற்சிபார்கள் என நினைத்த டோனி உடனே லேக் திசையில் உள்ள பீல்டரை உடனே ஆப் திசையில் மாற்றி அதே திசையில் பந்து வீச வைத்தார்.


    இதை கொஞ்சம் கூட மதிக்காத பாண்ட்யா அடுத்த பந்தையே மீண்டும் ஆப் திசையில் அடிக்க முயற்சித்தார். ஆனால் அது ஜடேஜா கையில் புகுந்தது. இதனால் பாண்ட்யா 8 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த ரஷித் கானுக்கு அருமையான திட்டம் தீட்டினார். அனைத்து திசையில் அருமையாக விளையாடி கொண்டிருந்த ரஷித் கானுக்கு ஆப் திசையில் பீல்டர்களை அதிகப்படுத்திய டோனி, பந்து வீச்சாளரை ஆப் திசையில் வைடு யார்க்கர் போட சொன்னார். டோனி கணித்தப்படியே அவர் வைத்த பொறியில் ரசித் கான் எலி போல் சிக்கினார்.

    இதனால் குஜராத் அணி 157 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.
    • ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    கொழும்பு:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது.

    இந்நிலையில் கீழ் முதுகு காயம் காரணமாக முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிதானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் விலகி உள்ளார். ஜூன் 7-ந் தேதி நடக்கும் மூன்றாவது போட்டியில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அனைத்து போட்டியிலும் (17 போட்டிகள்) விளையாடி 27 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் கல்லி கிரிக்கெட்டில் இம்பெக் பிளேயர் என இந்த வீடியோவுக்கு தலைப்பிட்டுருந்தார்.
    • இவரது தலைப்புக்கு ரஷித்கான் கிண்டலாக பதில் அளித்தார்.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் வரிசையில் சாஹல் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், 174 விக்கெட்டுகளுடன் பியூஷ் சாவ்லா மூன்றாம் இடத்திலும், 172 விக்கெட்டுகளுடன் அமித் மிஷ்ரா நான்காம் இடத்திலும் உள்ளனர்.

     

    ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், யுஸ்வேந்திர சாஹல் தெருவில் சில கிரிக்கெட் ஆர்வலர்களுடன் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் சாஹல் பேட்டிங் செய்வது போல இருந்தது. சில அற்புதமான ஷாட்களை விளையாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நான் கல்லி கிரிக்கெட்டில் இம்பெக் பிளேயர் என இந்த வீடியோவுக்கு சாஹல் தலைப்பிட்டுருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலரும் சுவாரஸ்யமாக கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

    இந்த தலைப்புக்கு ஆப்கானிஸ்தான் அணியின் சூழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், 'கல்லி கிரிக்கெட்டில் ஒரு சிக்சராவது அடிங்க சகோதரா' என கிண்டலாக கமெண்ட் செய்தார்.

    அதற்கு பதிலளித்த சாஹல், இங்கே சிக்சர் அடித்தால் அவுட் என தெரிவித்தார். 

    • கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஏபிடி வில்லியர்ஸ் அறிமுகமானார்.
    • சில சமயங்களில் அடி வாங்கினாலும் ரஷித்கான் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் அழைக்கப்படுகிறார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 19000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் குவித்துள்ளார்.

    இந்நிலையில் தனது கேரியரில் 3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள கஷ்டப்பட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    2006-ல் முதல் முறையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஷேன் வார்னே பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக நுணுக்கங்களை தாண்டி தம்முடைய பெயராலேயே அவர் பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். மறுபுறம் அனுபவமின்றி இருந்த நான் அந்த சமயத்தில் அவரிடம் மிகவும் தடுமாறினேன்.அதன் பின் வயது அதிகரிக்கும் போது அனுபவமும் அதிகரித்தது.

    ஆனால் அதற்கு நிகராக பும்ரா போன்ற புதிய பவுலர்கள் மிகப் பெரிய சவாலை கொடுத்தனர். ஏனெனில் அதிக போட்டியை கொடுத்த அவர் எப்போதும் பின் வாங்காமல் உங்களது முகத்துக்கு நேராக சவாலை கொடுப்பார்.

    அதே போல் ரஷித் கான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான ஒருவர். சில சமயங்களில் அடி வாங்கினாலும் அவரும் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    அவர் ஓவரில் நான் ஒருமுறை 3 சிக்சர்களை அடித்தேன். ஆனால் அவர் அடுத்த பந்திலேயே என்னை அவுட்டாக்கினார். அந்த வகையில் அவர்களைப் போன்ற பவுலர்கள் நான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

    என்று அவர் கூறினார்.

    ×