search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ration scam case"

    • வியாழக்கிழமை சோதனை செய்யபோது கும்பலால் அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
    • நேற்று தொடர்ந்து சோதனை நடத்திய நிலையில், சங்கர் சத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் ரேசன் ஊழல் வழக்கு தொடர்பாக பாங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    சுமார் 17 மணி நேர சோதனைக்குப்பின் நேற்றி நள்ளிரவு சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் அழைத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், சங்கர் ஆத்யாவின் ஆதரவாளர்கள் கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் அவர்களை விரட்டியடித்தனர். அதன்பின் அதிகாரிகள் சங்கர் ஆத்யாவை அழைத்துச் சென்றனர்.

    வியாழக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் சங்கர் ஆத்யா மற்றும் ஷேக் ஷாஜஹான் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்த சென்றபோது மர்ம கும்பல்களால் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×