என் மலர்
நீங்கள் தேடியது "Relief payment"
- மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை புலி தாக்கி கொன்றது.
- மாட்டின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள தேவா்சோலை 3-வது டிவிஷனில் மேய்ச்சலுக்கு சென்ற அம்சா என்பவரது மாட்டை கடந்த 31-ந் தேதி புலி தாக்கி கொன்றது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.