என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Restored temple site"
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- 8 ஆயிரத்து 600 சதுர அடி இடம் உள்ளது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
இவற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோவில் பின்புறம் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 8 ஆயிரத்து 600 சதுர அடி இடம் உள்ளது.
இந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தும், கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை பல வருடங்களாக செலுத்தா மலும் இருந்து வந்தனர்.
இதுகுறித்து கோர்ட்டு அமினாக்கள் முன்னிலையில் அந்த இடம் மீட்கப்பட்டு கோவில் இணை ஆணையர் குமரேசனிடம் ஒப்படைக்க ப்பட்டது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கடைகளில் இருந்து பொருட்களை கோவில் ஊழியர்கள் அப்புறப்ப டுத்தினர். அதன்பிறகு கடை உரிமையாளர்களே பொருட்களை எடுத்து சென்றனர். அதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
மீட்கப்பட்ட இந்த இடத்தை அருணா சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சீர்படுத்த வேண்டும். பக்தர்கள் பயன்பாட்டிற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்