என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revanth Reddy"

    • சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் 16 நாட்கள் மேசாமான இரவை சிறையில் கழித்தேன்- ரேவந்த் ரெட்டி.
    • நீங்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா சிறைக்கு சென்றீர்கள்- கேடி ராமராவ்.

    தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் ஒருவாரம் கழித்து அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது. இது தொடர்பான பிஆரஎஸ் கட்சி செயல் தலைவர் கே.டி. ராமராவ் சட்டசபையில் கண்டனம் தெரிவித்தார்.

    இதற்கு ரேவந்த் ரெட்டி பதில் கொடுத்தார். சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் ஜெயிலில் 16 நாள் கொடூரமான இரவை கழித்தேன் என ரேவந்த் ரெட்டி கடும் பதிலடி கொடுத்தார்.

    இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

    16 நாட்கள் நான் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டேன். அது பயங்கரவாதிகள் அடைக்கப்பட்ட சிறை. என்னை யாரையும் சந்திக்க அனுமிக்கவில்லை. அப்போதும் கூட என்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு தொடர்ந்து மக்கள் நலனுக்காக பணியாற்றினே். என்மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு சட்டத்தின்படி வெறும் 500 ரூபாய்தான் அபராதம்.

    நான் அடைக்கப்பட்ட சிறை அறையில் இரவு முழுவதம் லைட் எரிந்து கொண்டிருந்தது. மேலும் சுகாதாரமற்றதாக இருந்தது. தேவைப்பட்டால் எம்எல்ஏ-க்களை அழைத்துச் சென்று உண்மை நிலைமை காட்ட முடியும். சிறையில் இருந்து விடுதலை ஆனதும், அந்த துயரத்தில் இருந்து விலக மரத்தடியில் தூங்கினேன்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    இதற்கு கே.டி. ராமராவ், "நீங்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதற்காகவா சிறைக்கு சென்றீர்கள். யாராவது ஒருவர் உங்களுடைய ஜூப்ளி ஹில்ஸ் பேலஸ் மீது டிரோன் பறக்கவிட்டு, உங்களுடைய மனைவி அல்லது குழைந்தைகள் படதெ்தை எடுத்தால், அமைதியாக இருப்கீர்களா?. உங்கள் குடும்பத்தைப் பற்றி வரும்போது நீங்கள் எதிர்வினையாற்றுகிறீர்கள்.

    பெண் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவாரம் வரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இவ்வாறு கே.டி. ராமராவ் தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த ரேவந்த் ரெட்டி "எனது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு எதிராக மோசமான வார்த்தையை பயன்படுத்தினால் எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்ள முடியும்" என்றார்.

    சந்திரசேகர ராவ் ஆட்சியின்போது கே.டி. ராமராவ் வீட்டின் மேல் டிரோன் பறக்கவிட்டு படம் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன்.
    • அடுத்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

    இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, "நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை. இதற்காக கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன். நீங்களும் உங்கள் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.

    நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும். அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள்.
    • பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    * தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள்.

    * மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா?

    * மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும்.

    * பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை.

    * பா.ஜ.க. நினைப்பதையே முடிவாக எடுப்பதாக குற்றம்சாட்டினார்.

    • கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார்.
    • அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.

    2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது.

    இதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.

    அதன்படி, நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார்.

    சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.

    தொடர்ந்து, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சென்னை வந்தடைந்தார்.

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு ஆகியோர் அவுரைவரவேற்றனர்.

    பின்னர், தொகுதி மறுவரை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார்.

    அவரை, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்

    தொடரந்து, நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    • தெலுங்கானாவில் சிவன் கோவில்களுக்கு என்ன பஞ்சமா உள்ளது.
    • தெலுங்கானா அற்புதமான கலாச்சார பாரம்பரியம் கொண்டது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு கடிதங்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

    இதற்கு தெலுங்கானா மாநில அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் ரவீந்திர பாரதியில் நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க செல்லும் ஒவ்வொரு முறையும் நமது எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து கடிதங்கள் மூலம் தரிசனம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

    தரிசனத்திற்காக நாம் ஏன் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் பிச்சை எடுக்க வேண்டும். அவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் என்றால். நமக்கு யாதாரி குட்டா தேவஸ்தானம் உள்ளது.

    பத்ராசலத்தில் ராமர் இருக்கிறார். தெலுங்கானாவில் சிவன் கோவில்களுக்கு என்ன பஞ்சமா உள்ளது. தெலுங்கானா அற்புதமான கலாச்சார பாரம்பரியம் கொண்டது.

    நாம் நமது பிராந்தியங்களை அபிவிருத்தி செய்ய தெலுங்கானாவில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியின் இந்த பரபரப்பான பேச்சு ஏழுமலையானின் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • எதிர்க்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் 15 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே சட்டசபை வந்துள்ளார்.
    • அவர் 57 லட்சத்திற்கு மேல் அரசு சம்பளத்தை பெற்றுள்ளார்.

    தெலுங்கானா சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அவையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர ராவ் சட்டசபைக்கு வராதது குறித்து விமர்சித்து பேசினார்.

    இது தொடர்பாக ரேவந்த ரெட்டி கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் 15 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே சட்டசபை வந்துள்ளார். அவர் 57 லட்சத்திற்கு மேல் அரசு சம்பளத்தை பெற்றுள்ளார். மக்களை அவர்களுடைய தலைவிதிக்கே விட்டுள்ளார். மத்திய அரசு என்பது மாநிலங்களுக்கான ஒன்றியம். நாட்டின் பிரதமர் எந்த முதலமைச்சருக்கும் உண்மையிலேயே மூத்த சகோதரர் போன்றவர்.

    இவ்வாறு ரேவந்த் ரெட்டி கூறினார்.

    ரேவந்த் ரெட்டி அடிக்கடி டெல்லி செல்கிறார் என பிஆர்எஸ் கட்சி குற்றஞ்சாட்டியதற்கு, ரேவந்த் ரெட்டி பதில் கூறினார். ரேவந்த ரெட்டி பிரதமரிடம் 2036 ஒலிம்பிக் போட்டியை ஐதராபாத்தில் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்பு துறைக்கான நிலத்தை மாநில அரசுக்கு மாற்ற ஒப்புக்கொண்டதற்கான பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார்.

    • தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.
    • DELIMITATION கிடையாது, தென்மாநிலங்களுக்கான LIMITATION என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.

    இதன்பின்பு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரேவந்த் ரெட்டி, "தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன், இது தொடர்பாக எனது கட்சி தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடைபெறும் சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்தார். மத்திய அரசின் நடவடிக்கை, DELIMITATION கிடையாது, தென்மாநிலங்களுக்கான LIMITATION. இதை நாங்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் வடஇந்தியாவை விட அதிக வரி கொடுக்கிறோம். நாங்கள் அதிக தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளோம்.

    பாஜக வளர தென்னிந்தியா அனுமதிக்காததால் தென்னிந்தியாவை பாஜக அரசு பழிவாங்குகிறது. கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஏன் கர்நாடகா கூட பாஜகவை தோற்கடித்துள்ளனர். அவர்களுக்கு ஆந்திராவில் கூட இல்லை. இதற்கு பெயர் தான் பழிவாங்கும் அரசியல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
    • ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

    அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் ஐதராபாத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக ரேவந்த் ரெட்டி காரில் பேரணி சென்றார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும், ரேவந்த் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
    • ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 39 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    இதையடுத்து, வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் ஐதராபாத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக ரேவந்த் ரெட்டி காரில் பேரணி சென்றார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    இதற்கிடையே, தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் மற்றும் பிற காவல்துறை அதிகாரிகள், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.



     


    இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக டி.ஜி.பி. அஞ்சனி குமாரை சஸ்பெண்ட் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    • டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
    • மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    நேற்று ஐதராபாத் தனியார் ஓட்டலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல் அமைச்சரை அறிவிப்பார்.

    இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறார். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வரும் 7ம் தேதி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. மேலும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால் ஒரு முதல் முதலமைச்சர், 2 துணை முதலமைச்சர்கள் நியமிக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.

    • ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
    • டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதலமைச்சரை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்கவுள்ளார் என்றும் வரும் 7ம் தேதி ஐதராபாத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அகிய இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பார்வையாளர்களின் அறிக்கையை பரிசீலித்து, மூத்த தலைவர்களுடன் கலந்துரையாடிய பிறகு, தெலுங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தேர்ந்தெடுத்து காங்கிரஸ் தலைவர் முடிவு செய்துள்ளார்" என்றார்.

    கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தீபா தாஸ்முன்ஷி, அஜோய் குமார், கே.ஜே. ஜார்ஜ், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே உள்ளிட்ட 4 பார்வையாளர்களை கட்சி நியமித்துள்ளது.

    எத்தனை அமைச்சர்கள் பதவியேற்பார்கள், துணை முதல்வர்கள் இருப்பார்களா என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
    • காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல் மந்திரியாக வரும் 7-ம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

    காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இதற்கிடையே, டெல்லியில் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல் மந்திரியாக வரும் 7-ம் தேதி பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இன்று தலைநகர் டெல்லி சென்றார். அங்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவைச் சந்தித்தார்.


    மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது பதவி ஏற்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    ×