என் மலர்
நீங்கள் தேடியது "Rheumatism"
- தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.
- மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
வாதநீர் பிரச்சினை இல்லாமல், எப்போதும் உடல் வலி, சோர்வு இருந்தால் அது தசை வாதம் எனப்படும் பைப்ரோமயால்ஜியா நோயாக இருக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோர்வு, உடல் வலி, தசை சோர்வு, அதிக தூக்கம், நினைவாற்றல் குறைவு காணப்படும்.
காரணங்கள்:
1. மூளை மற்றும் முள்ளந்தண்டுவடத்தில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வலி மற்றும் வலியற்ற சமிக்ஞைகளை மிகைப்படுத்தலாம்.
2. மரபணு தொடர்புகள் இப்பிரச்சினையை வளர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
3. நோய்த்தொற்றுகள் சில நேரங்களில் பிரச்சினையை தூண்டும் அல்லது மோசமாக்கும்.
4. சில நேரங்களில் காயங்கள், விபத்து போன்ற உடல்ரீதியான நிகழ்வுகளால் தூண்டப்படலாம். நீடித்த உளவியல் அழுத்தமும் இந்த நிலையைத் தூண்டலாம்.

சித்த மருத்துவ தீர்வுகள்:
சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
1) அமுக்கரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச்செந்தூரம் 200 மில்லிகிராம், சிவனார் அமிர்தம் 200 மில்லிகிராம், முத்துச்சிப்பி பற்பம் 200 மில்லிகிராம், குங்கிலிய பற்பம் 200 மில்லிகிராம் இவைகளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
2) அமுக்கரா லேகியம் 5 கிராம் வீதம் இரு வேளை சாப்பிட வேண்டும்.
3) வலியுள்ள இடத்தில் சிவப்பு குங்கிலிய தைலம், கற்பூராதி தைலம் கலந்து மெதுவாக தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
4) வைட்டமின் டி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பால், முட்டை, பாதாம், பிஸ்தா, முருங்கை கீரை, பாலக் கீரை, வால்நட் இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
5) உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும், மனச்சோர்வு நீங்க இறை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- சுக்கு செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது.
- மிளகு உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும். இவை முத்தாதுக்கள் அல்லது திரிதோடங்கள் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

நோய்க்கு தரப்படுகின்ற சித்த மருந்துகள் வாத, பித்த, கப நிலையை சமன் செய்து உடம்பை இயல்பு நிலைக்கு திரும்பக் கொண்டு வருகிறது. முத்தோடங்கள் இயல்பு நிலையை அடைந்ததும், நோய் குணமடைகிறது.
இந்த திரிதோடத்தை சமன் செய்ய ஏலம், மஞ்சள், சீரகம், மிளகு, சுக்கு, பெருங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவை உதவுகின்றன. இவை அனைத்தும் நமது சமையலறை அஞ்சறைப் பெட்டியிலும் தவறாமல் இருக்கும். இவற்றை அன்றாடம் முறையாக பயன்படுத்தும் போது முத்தோடங்களும் உடம்பில் சமச்சீராக இருக்கும்.

சுக்கு
இது கார்ப்பு சுவை உடையது. செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. அஜீரணத்தை நீக்கும். உடலில் 'வாதம்' சமநிலைப்படுத்த உதவுகிறது. கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்கவும். இஞ்சியாகவும் இதை பயன்படுத்தலாம்.

மஞ்சள்
இது கசப்பு, கார்ப்பு சுவைகளை உடையது. சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட இது, உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது. இதை இனிப்பு பண்டங்களைத் தவிர மற்ற எல்லா உணவிலும் சேர்க்கலாம்.

மிளகு
காரத்தன்மை உள்ள இதன் நஞ்சு எதிர்ப்பு ஆற்றல் அலாதியானது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது, உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது. மிளகாய்க்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவது நல்லது.

பூண்டு
வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது வாதம், பித்தம், கபம் மூன்றையும்சமநிலைப்படுத்த உதவுகிறது. பருப்பு மற்றும் கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

சீரகம்
சிறிது கார்ப்பு சுவையுடைய இது, உடலின் உள் உறுப்புகளை சீர்படுத்துகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. வயிற்று உப்புசத்தை குறைக்க சிறந்தது. காரமான உணவு வகைகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

ஏலக்காய்
சிறிது கார்ப்பு, இனிப்பு சுவையுடையது. இது செரிமானத்திற்கு உதவும், உடல் வெப்பத்தை தணிக்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. இனிப்புகள் மற்றும் இறைச்சி சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.

பெருங்காயம்
கார்ப்பு, கசப்பு சுவைகளை உடையது. செரிமானத்திற்கு உதவும் இது, வாயு, வயிற்றுப் பொருமல், வயிறு எரிச்சல் ஆகியவற்றை நீக்கும். கிழங்கு, பருப்பு வகைகள் சமைக்கும் போது இதை பயன்படுத்த வேண்டும்.

வெந்தயம்
இரும்பு போன்று உடலை உறுதியாக்கும் இது, கசப்பு சுவையுடையது. உடலில் பித்தத்தை நீக்கும். வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. காரமான உணவுகளை சமைக்கும் போது இதை சேர்க்கவும்.
இந்நோய், ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாகும்போது வரும். யூரிக் அமிலம் படிகங்களாகி அவை மூட்டுக்கள், ஜவ்வு மற்றும் சுற்றியுள்ள திசுக்களையும் பாதிக்கும். ஆண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவர். பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பின் இந்நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
அறிகுறிகள் :
* இரவில் திடீரென வரும்.
* வந்து 24 மணிநேரம் வரை வலி மிகக்கடுமையாக இருக்கும்.
* பெரும்பாலும் பாதத்தில் பெருவிரல் அடியில் வந்தாலும், பாதம், கணிக்கால், முழங்கால், கை, மணிக்கட்டு ஆகிய இடங்களிலும் வரலாம்.
* கடுமையான வலி குறைந்தபின்னும், ஒ
ருவித சவுகரியம் இருந்து கொண்டே இருக்கும். அவை நீண்ட நாட்கள் இருப்பதோடு, பிற மூட்டுக்களையும் பாதிக்கும்.
* பாதித்த இடம் சிவந்து உப்பி விடும்.
கவுட் தீவிரமாகும்போது, யூரிக் அமில படிகங்கள் (டோபி) உடலின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் மென்மையான திசுக்களை பாதிக்கும். பெரும்பாலும் விரல்களில் முடிச்சு முடிச்சாக காணப்பட்டாலும், நோய் தீவிரமாகும்போது, தோள் பட்டை துனி, காது ஆகிய இடங்களிலும் வரலாம். சில சமயம் குரல்வளை, முதுகுத்தண்டு ஆகிய இடங்களில் வரவாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகம், இதயம் ஆகியவற்றில் கூட யூரிக் அமிலப்படிகங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.
அதிக யூரியா தான் கவுட் நோய்க்கு காரணம் என்றாலும் வேறுசில காரணங்களாலும் இந்நோய் வரலாம். உணவு முறை பரம்பரை, யூரிக் அமில உப்பான யூரேட் குறைவாக சுரப்பது ஆகியன அவற்றுள் சில மதுப்பழக்கம், இளமையிலேயே அதிக உடல் எடை, அதிக இரத்த அழுத்தம், சிறுநீரக செயல்பாட்டில் குறைபாடு, செயற்கை ரசாயனங்கள் சேர்ந்து வளர்ந்த உணவை உண்டு வளர்த்த இறைச்சி, மீன் ஆகியவற்றை அதிகம் உண்பது ஆகியனவும் சில காரணங்கள்.
வழக்கமாக யூரிக் அமிலம் ரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும். யூரிக் அமிலம் குறைவாக சுரப்பதன் காரணமாக 90 சதவீத கவுட் நோய் வருகிறது. அதிக உற்பத்தியால் 10 சதவீத கவுட் நோய் வருகிறது. மூட்டுக்களை சுற்றியுள்ள திரவத்தில் யூரிக் அமில படிகங்கள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.
* ரத்தத்தில் யூரியாவின் அளவு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.
* ரத்தத்தில் எலக்ட்ரோலைட், எரித்ரோசைட் அளவு பார்க்க வேண்டும்.
* வெள்ளை அணு எண்ணிக்கை எவ்வளவு என்று அறிய வேண்டும்.
* சிறுநீரக செயல்பாடு பற்றி அறிய வேண்டும்.
* எக்ஸ்ரே மூலம் யூரேட் படிகங்கள் எவ்வாறு இருக்கிறது என்பதையும், எலும்பின் பாதிப்பு அளவையும் அறியலாம்.
ஆயுர்வேத சிகிச்சை முறை
வாத ரக்தம், ஆத்ய வாதம் என்பது தான் ஆயுர்வேதத்தில் கவுட் நோய்க்கான பெயர். வாததோஷம், பித்த தோஷம் ரக்ததாது ஆகியவை நிலைப்பாடு மாறுவதே இந்நோய்க்கான காரணம். ஆயுர்வேத கூற்றுப்படி, அதிக உப்பு, புளிப்பு, கசப்பு கார சுவையுள்ள உணவுகள், அதிக எண்ணெய் உணவுகள், அதிக சூடான உணவுகள், உலர்ந்த, பாதுகாக்கப்பட்ட, கெட்டுப்போன இறைச்சி, மீன் உணவுகள், கொள்ளு, உளுந்து, புளித்த மோர், தயிர், மது, பகல் தூக்கம், இரவில் தூங்காமை, கோபம் சேர்க்கக்கூடாத முறைகளில் சேர்த்த உணவுகள் (எ.காட்டு: பாலுடன் அல்லது பால் பொருட்களுடன் மீன் சேர்க்கக்கூடாது) ஆகியன கவுட் நோயை அதிகமாக்கும்.
உள்ளே சாப்பிடும் மருந்துகள்
* நீர்முள்ளி கஷாயம் எனப்படும் (கோகிலாஜகம் கஷாயம்). 15 மீ. கஷாயம் + 60 மீ. தண்ணீர் சேர்த்து காலை மாலை வெறும் வயிறில் உணவுக்கு ஒரிரு மணிநேரம் முன்பு
* சீந்தில்கொடி எனப்படும் குடூச்சி கஷாயம் மேற்சொன்னவாறே எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பால் முதுக்கன் கிழங்கு எனப்படும் விதாரி கஷாயம் மேற்சொன்னபடியே எடுக்கலாம்.
* நெருஞ்சில் முள் + சதாவரி (தண்ணீர் விட்டான் கிழங்கு) இரண்டையும் 1 டம்ளர் பால், 4 டம்ளர் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆக குறைந்தவுடன் இறக்கி, அதை காலை, மாலை இருவேளையும் அல்லது இரவு படுக்கு முன் எடுக்கலாம். சந்திரபிரபா வடி, கைஷேநர குக்குலு எனப்படும் மாத்திரைகள் வலியை கட்டுப்படுத்தும்.
மேலே பூசுவதற்கு
பிண்டத்தைலம் மேலே பூசி, 1 மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். காஞ்சிரை வேரை கஷாயமாக்கி, வலி உள்ள இடங்களில் தாரா செய்வதுபோல ஊற்ற வேண்டும். (அரை மணிநேரம்) அத்தி, ஆல், அரசு, இத்தி ஆகிய மரப்பட்டைகளை கஷாயம் வைத்து மேற்சொன்னபடி செய்ய வேண்டும்.
கழிவு வெளியேற்றம்
திரிபலாசூரணம் உள்ளே சாப்பிடவும்
கழிவுகளை வெளியேற்றி, தோஷங்களை சமனப்படுத்தி ரசாயனம் ஆக செயல்படும்.
யூரிக் அமிலம் நீண்ட காலம் உடலில் தங்கும்போது, அவை படிகங்களாகி விடுகின்றன. உடலில் பிற கழிவுகள் தேங்கி விடுவது தான் நோய்க்கு முக்கிய காரணம். ஆகவே கழிவுகளை வெளியேற்றுவதுதான் சிகிச்சையின் முதற்படி ஆகும். தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் விரையேச்சனம் (பேதி) எடுப்பது நல்லது.
உள்ளே மருந்து சாப்பிடுவது, பாதிக்கப்பட்ட இடங்களில் தைலம், கஷாயம் பூசுவது இவற்றோடு சரியான உணவு முறை மாற்றம், சரியான வாழ்க்கை முறை மாற்றம் ஆகியன மிகவும் அவசியமாகும்.
-டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422&2367200, 2313188, 2313194)