என் மலர்
நீங்கள் தேடியது "road maintenance"
- அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
- சாலைகள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது.
புதுச்சேரி:
மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதி குமாரபாளை யத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இப்பணியை அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம் ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.
- பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.
பொன்னேரி:
பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வட சென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், காமராஜர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், கண்டெய்னர் யார்டுகள், பெட்ரோல் நிறுவனங்கள், நிலக்கரி யார்டுகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் இருந்து தினமும் 40 ஆயிரம் கனரக வாகனங்கள் மீஞ்சூர் வழியாக பொன்னேரி பகுதிக்கும், வல்லூர் 100 அடி சாலையில் இருந்து மணலி வழியாக சென்னைக்கும், வண்டலூர் சாலை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கும் செல்கின்றன.
இந்நிலையில் மீஞ்சூர் வல்லூர் வரை சாலை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் பள்ளம் பள்ளமாக காணப்படும் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் பலமுறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிகாரியிடம் மனு அளித்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிதி ஒதுக்கப்பட்டு ரூ.14 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு சாலை பணிகள் கடந்த மாதம் ஆரம்பித்தது.

இந்நிலையில் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மீஞ்சூர் பி.டி.ஓ. அலுவலகத்தில் இருந்து வல்லூர் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலையில் ஏற்படும் தூசிகள் கடை முழுவதும் பரவி வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். வாடிக்கையாளர்கள் வராததால் ஓட்டல்கள், டிபன் கடைகள், டீக் கடைகளை வியாபாரிகள் மூடி வருகிறார்கள். மேலும் காய்கறி, பழக்கடைகள் முழுவதும் தூசி மற்றும் மணலால் நிரம்பி காணப்படுவதால் கடைகளை காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணிவரையும் திறந்து வியாபாரம் செய்துவிட்டு செல்கின்றனர். சிலர் கடையை காலி செய்து விட்டு வேறு இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு கடந்த 2 வருடத்திற்கு மேலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடையை நடத்த முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி மூலம் 5270.36 கி.மீட்டர் நீளமுடைய 34640 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 3932.13 கி.மீ நீளமுடைய 23,221 எண்ணிக்கையிலான தார் சாலைகளும், 1270.83 கி.மீ நீளமுடைய 11,039 எண்ணிக்கையிலான சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி சாலைகள் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார இணைப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிக்காகவும் சாலைகள் அவ்வப்போது பல இடங்களில் பள்ளம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பெரும் பள்ளங்களும் ஏற்படுகிறது. இதனை பராமரிக்க அல்லது புதுப்பிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒப்பந்ததாரர்கள் நியமித்து ஒரு வருட காலத்திற்கு அவ்வப்போது தேவைக்கேற்ப பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி 2021-2022-ம் ஆண்டிற்காக மொத்தம் 7 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் உட்புற சாலைகளை ஒட்டும் பணி மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள 6 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மேலும் 9 சாலைகள் மைய தடுப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு பணிக்காக ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.