என் மலர்
நீங்கள் தேடியது "rotting"
- சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை, இரவில் மழை பெய்கிறது.
- லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்க ளில் எடுத்து வரப்படும் வெங்காயம் வரும் வழியில் மழையில் நனைந்து விடுவ தால் விரைவில் அழுகி விடுகின்றன.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள், தினசரி காய்கறி மார்க்கெ ட்டுகள், சேலம் லீபஜார் மார்க்கெட் ஆகியவற்றுக்கு பெரிய வெங்காயம் மேட்டுப்பாளை யம், பெங்களூரு, மகா ராஷ்டிரா, குஜராத் மாநி லங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
3 மாதங்கள் வரை அழுகாமல் இருக்க நன்கு உலர்த்தப்பட்டு, ஈரத்தன்மை எதுவும் இல்லாதபடி குடோன், குளிர்பதன கிடங்குகளில் பதப்படுத்தப்ப டுகிறது. ேம, ஜூன் மாதங்க ளில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிகளவில் வெங்காயத்தை இருப்பு வைப்பர்.
சுட்டெரிக்கும் வெயில்
தற்போது சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை, இரவில் மழை பெய்கிறது. இதனால் குடோன்களில் இருப்பு வைத்த வெங்காயம், மழைநீர், குளிர் காற்றால் விரைவில் அழுகும் நிலையை எட்டி விடுகிறது.
அத்துடன் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்க ளில் எடுத்து வரப்படும் வெங்காயம் வரும் வழியில் மழையில் நனைந்து விடுவ தால் விரைவில் அழுகி விடுகின்றன.
இப்படி அழுகும் வெங்கா யத்தை அப்புறப்ப டுத்த செலவு செய்ய வேண்டும் என்பதால், ஒரு சில வியா பாரிகள் சேலத்தில் லீபஜார் சாலை, சூரமங்கலம் பிரதான சாலை, செவ்வாய்ப்பேட்டை ஆகிய இடங்களில் கொட்டி விடுகின்றனர். பருவ நிலை மாற்றத்தால் வெங்காயம் விரைவில் அழுகி விடுவதால் தொடர்ந்து வியாபாரிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.