என் மலர்
நீங்கள் தேடியது "RR vs KKR"
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் இடம் பெறவில்லை.
- மொயீன் அலி முதன்முறையாக கொல்கத்தா அணிக்காக களம் இறங்க உள்ளார்.
ஐபிஎல் 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா முதல் போட்டியில் ஆர்சிபி-யிடம் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அண விவரம்:-
ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர், வணிந்து ஹசரங்கா, ஆர்ச்சர், தீக்ஷனா, தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-
டி காக், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், மொயீன் அலி, ரசல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
- இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
- முதல் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி.
ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் கடைசி லீக் போட்டி மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி புள்ளிகள் அடிப்படையில் முன்னணி இடத்திற்கு முன்னேறும். மாறாக மழை காரணமாக போட்டி நடைபெறாத பட்சத்தில் ஐதராபாத் அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கும்.
- நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி இது.
- மழை காரணமாக ஏழு ஓவர்கள் போட்டி நடைபெறுகிறது.
ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெறும் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
மழை காரணமாக டாஸ் தாமதமாக போடப்பட்ட நிலையில், இது ஏழு ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.
தோல்வி அடையும் பட்சத்தில் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் ராஜஸ்தான் அணி இருக்கும். அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.
- நடப்பு ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி இது.
- மழை காரணமாக ஏழு ஓவர்களாக மாற்றப்பட்டது.
ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (மே 19) நடைபெற இருந்த இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன. எனினும் மழை காரணமாக இந்த போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இடையில் மழை நின்றதால், போட்டி ஏழு ஓவர்கள் நடத்தப்படும் என்று கூறி டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்த நிலையில், டாஸ் போடப்பட்டதில் இருந்து மழை மீண்டும் துவங்கியது.
தொடர்ச்சியாக மழை பெய்ததால், போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் குவாலிஃபையர் சுற்றின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதைத் தொடர்ந்து மே 22 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த இரு போட்டிகளும் ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது.