என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rs. 2 lakh scam"
- ராஜபாளையம் அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி நடந்துள்ளது.
- தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள மாங்குடியை சேர்ந்தவர் தாமோதரன். இவரிடம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தளவாய்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சப்-கலெக்டர் போல் நடித்து பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது நண்பர் மாசிலாமணி என்ப வர் மூலமாக தாமோத ரனின் பேரன் சதீஷ்குமாருக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2018ம் ஆண்டு ரூ.2 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தர வில்லை.
இதுதொடர்பாக தாமோ தரன் கேட்டபோது, அவரை யும், அவரது பேரனையும் கொலை செய்து விடுவதாக செந்தில்குமாரும், மாசிலா மணியும் மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக ராஜபாளையம் குற்றவியல் நீதி மன்றத்தில் தாமோதரன் வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட்டு உத்தரவின்பேரில் செந்தில்குமார், மாசிலாமணி மீது தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்