என் மலர்
நீங்கள் தேடியது "SA20 league"
- தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தன.
- இறுதிப் போட்டிக்கு பிரிட்டோரியா, சன்ரைசர்ஸ் அணிகள் முன்னேறின.
ஜோகனஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ், பெர்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெர்ல் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரூசோவ் 56 ரன்கள் குவித்தார்.
அடுத்து ஆடிய பெர்ல் ராயல்ஸ் அணி 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதியில், ஜோபர் சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜோபர்க் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்கிராம் அதிரடியாக ஆடி சதமடித்து அவுட்டானார்.
தொடர்ந்து ஆடிய ஜோபர்க் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஹென்ரிக்ஸ் 96 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா, சன்ரைசர்ஸ் அணிகள் மோத உள்ளன.
- முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 184 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 152 ரன்கள் எடுத்து தோற்றது.
கேப் டவுன்:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடந்து வருகிறது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றனது.
இதில் நேற்று முன்தினம் நடந்த தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. கேப்டன் மார்கிரம் 40 பந்தில் 62 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எஸ்.ஏ.20 தொடரில் இருந்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது. ஆட்ட நாயகன் விருது மார்கிரமுக்கு வழங்கப்பட்டது.
- முதலில் ஆடிய எம்.ஐ.கேப் டவுன் அணி 181 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 105 ரன்னில் ஆல் அவுட்டானது.
கேப் டவுன்:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் நடந்தது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதி நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
தகுதிச்சுற்று 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை எம்.ஐ.கேப்டவுன் அணி வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது. எலிமின்னேட்டர் 2 சுற்றில் பார்ல் ராயல்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது. அந்த அணியின் எஸடரூசியன் 39 ரன்னும், பிரேவிஸ் 38 ரன்னும், ரிக்கல்டன் 33 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவரில் 105 ரன்னில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டாம் ஏபெல் 30 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
எம்.ஐ.கேப் டவுன் சார்பில் ரபாடா 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட், ஜார்ஜ் லிண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- எஸ்.ஏ.20 லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
- இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ஜோகன்னஸ்பெர்க்:
எஸ்.ஏ.20 லீக் தொடர் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்கில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும், எம் ஐ கேப் டவுன் அணியும் மோதின.
இதில் எம்.ஐ.கேப் டவுன் அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில், தனது அணி இறுதிப்போட்டியை எட்டியதால் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பெடிங்ஹாமுக்கு சனிக்கிழமையான நேற்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் தனது அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து, தனது திருமணத்தை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார்.
- தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டிக்கு எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.
- தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
கேப்டவுன்:
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
இதில் இறுதிப்போட்டிக்கு எம்.ஐ.கேப் டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் தகுதிப்பெற்றன. இறுதிப்போட்டியில் எம்.ஐ.கேப் டவுன் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் இரு அணியின் உரிமையாளர்களான ஆகாஷ் அம்பானி மற்றும் காவ்யா மாறன் மைதானத்தில் நேரில் சந்தித்து பேசிக் கொண்டனர். பின்னர் இருவரும் அரவணைத்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து பிரிந்து சென்றனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.