என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sangakiri"

    • தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன், டிராக்டர் மீது மோதியது.
    • விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 44). இவரது நண்பர் மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரை சேர்ந்த நரசிம்மன் (43). டிராக்டர் டிரைவர்களான இவர்கள் இருவரும் டிராக்டர் வண்டியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சங்ககிரி அடுத்த கலியனூர் பிரிவு என்ற இடத்தில் பின்னால் வந்த தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன், டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ் அவரது நண்பர் நரசிம்மன் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.


    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் டிரைவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தீபக் ( 23) என்பவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று பலியான மாதேஷ், நரசிம்மன் உடல்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் முழுவதும் சோகமாக காட்சி அளித்தது.

    விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்பு எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • சங்ககிரி ஒன்றியத்தில் ரேசன்கடைகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு செய்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் ஆர்.டி.ஓ. கேட்டறிந்தார்.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, எம்ஜிஆர் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆர்.டி.ஓ. சௌம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் கேட்ட றிந்தார். பின்னர், அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்கள் கேட்டறிந்து, உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    அதனையடுத்து அங்கு குடிநீர் வசதி உடனடியாக செய்து தருவதாக அங்கன்வாடி பணியாளர்களிடம் ஆர்டிஓ கூறினார். இதனைத் தொடர்ந்து கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளியில் குழந்தைகள் தங்கும் வசதிகள், பராமரிப்புகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    புதூர் பகுதியில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்தார். அனைத்து பொருட்களும் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து, கிழக்கு ஆர்.ஐ .,ராஜு, வி.ஏ.ஓ., முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×