search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarabjot singh"

    • முதலில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன்.
    • கவுரவமான வேலையில் சேருமாறு எனது குடும்பம் என்னை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

    புதுடெல்லி:

    ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங், மனு பாக்கர் இணை வெண்கலப்பதக்கம் வென்றது. வெண்கலப்பதக்கம் வென்ற 22 வயதான சரப்ஜோத் சிங் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். 

    நாடு திரும்பிய அவருக்கு சொந்த ஊரில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரப்ஜோத் சிங்குக்கு அரியானா மாநில அரசு விளையாட்டு துறையில் துணை இயக்குனர் பதவி கொடுக்க முன்வந்தது. ஆனால் அதனை ஏற்க சரப்ஜோத் சிங் மறுத்து விட்டார்.

    இது குறித்து அவர் கூறுகையில், 'வேலை என்பது நல்லது தான். ஆனால் அதனை இப்போது நான் செய்ய மாட்டேன். முதலில் துப்பாக்கி சுடுதலில் கவனம் செலுத்த நான் விரும்புகிறேன். கவுரவமான வேலையில் சேருமாறு எனது குடும்பம் என்னை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நான் துப்பாக்கி சுடுதலில் ஈடுபட விரும்புகிறேன். நான் ஏற்கனவே எடுத்த சில முடிவுகளுக்கு எதிராக செல்ல விரும்பவில்லை. எனவே என்னால் தற்போது வேலை செய்ய முடியாது' என்றார்.

    • துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
    • மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

    இதற்கிடையே, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம் இதுவாகும்.


    இந்நிலையில், வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில், துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாக்கர். அவர் எங்களை மிகவும் பெருமைப்படுத்தினாள். அவருக்கும் சரப்ஜோத் சிங்குக்கும் எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    • அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்றுப் போட்டி பகல் 12.45 மணிக்கு நடைபெற்றது. அதில், இந்தியாவை சேர்ந்த சரப்ஜோத் சிங் - மனுபாகெர் ஜோடி 3 ஆம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு சரப்ஜோத் சிங்- மனுபாகெர் ஜோடி முன்னேறியுள்ளது.

    அதே சமயம், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு தகுதி சுற்று போட்டியில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் சிங் சீமா- ரிதம் சங்வான் ஜோடி 7 ஆம் இடம் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறியது.

    10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ரமிதா ஜிண்டால் ஏழாவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

    முன்னதாக, இந்திய ஆடவர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி -சிராக் ஷெட்டி ஜோடி ஜெர்மனியின் மார்வின் சீடல் மற்றும் மார்க் லாம்ஸ்ஃபஸ் ஆகியோருக்கு எதிரான ஆட்டம் ஜெர்மனி வீரர் மார்க்கின் முழங்கால் காயம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    • சரப்ஜோத் சிங் மற்றும் ஜெர்மனி வீரர் ஆகியோர் தலா 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.
    • சரப்ஜோத் சிங் 16x, ஜெர்மனி வீரர் 17x பெற்றிருந்ததால் வாய்ப்பை இழந்தார்.

    துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் தகுதிச் சுற்று இன்று மதியம் நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம் 33 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    ஆறு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் 10 முறை இலக்கை நோக்கி சுட வேண்டும். மொத்த புள்ளிகள் கணக்கிடப்பட்டு முதல் 8 இடங்கள் பிடிக்கும் வீரர்கள் பதக்கத்திற்கான சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

    இந்திய வீரரான சரப்போஜத் சிங் தொடக்கம் மற்றும் ஐந்தாவது சுற்றில் சிறப்பாக செயல்படவில்லை. முதல் சுற்றில் 94 புள்ளிகளும், 5-வது சுற்றில் 93 புள்ளிகளும் பெற்றார். 4-வது சுற்றில் 100 புள்ளிகள் பெற்று அசத்தினார். மொத்தமாக 577 புள்ளிகள் பெற்றார். இதில் 16 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார்.

    அதேவேளையில் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர், துருக்கி வீரர் இஸ்மாயின் கெலேஸ் ஆகியோரும் 577 புள்ளிகள் பெற்றிருந்தனர்.

    ஆனால் ஜெர்மனி வீரர் ராபின் வால்டர் 17 முறை துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டார். சரப்ஜோத் சிங் 16 முறைதான் துல்லியமான இலக்கை குறிவைத்து சுட்டதால் 9-வது இடம் பிடித்து பதக்கப்போட்டிக்கான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நூழிலையில் இழந்தார்.

    மற்றொரு வீரர் அர்ஜுன் சிங் சீமா 574 (17 முறை 10) புள்ளிகள் பெற்றி 18-வது இடத்துடன் ஏமாற்றம் அடைந்தார்.

    ×