என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sayarpuram"

    • சாயர்புரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ பாடல் போட்டி மற்றும் குடில் போட்டி நடந்தது
    • வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி அணிகளுக்கு ரொக்க பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் ஜி.யு. போப் சபை மன்றத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா போட்டிகள் சாயர்புரம் தூய திரித்துவ ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ பாடல் போட்டி மற்றும் குடில் போட்டி நடந்தது. இதில் சாயர்புரம் ஜி.யு.போப் சபை மன்றத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் ஆலய குழுக்கள் கலந்து கொண்டனர்.

    போட்டிகளை சாயர்புரம் சேகர குரு இஸ்ரேல் ராஜா துரை சிங் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார் .

    குடில் போட்டியில் முதலிடம் பிடித்த இடையர் காடு குட் ஷெப்பர்ட் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் நர்சரி பள்ளிக்கு ரூ.7,500 ரொக்கப் பரிசும், 3-ம் இடம் பிடித்த சாயர்புரம் ஜி.யு போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கமும், மற்றும் 3 அணிகளுக்கும் பரிசு கோப்பைகளும் வழங்கபட்டது.

    அதேபோல் கிறிஸ்தவ பாடல் போட்டியில் முதலிடம் பிடித்த ஜி.யு.போப் பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2-ம் இடம் பிடித்த சாயர்புரம் சபை பாடல் குழுவினர் அணிக்கு ரூ.7,500 ரொக்கம், 3-வது இடம் பிடித்த சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் பணமும், பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு லே செயலர் நீகர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். உப தலைவர் தமிழ் செல்வன், குருத்துவ செயலாளர் இம்மானுவேல், பொருளாளர் மோகன் ராஜ் அருமை நாயகம்,போப் மேல்நிலைப்பள்ளி தாளா ளர் பிரேம் குமார் ராஜா சிங்,போப் சபை மன்ற தலைவர் அகஸ்டின் கோயில் ராஜ், ரட்சன்யபுரம் சேகர தலைவர் பாக்கியராஜ், சாயர்புரம் சபை ஊழியர் சாமுவேல் பொன்சிங்,விழா குழு உறுப்பினர்கள் ராஜேஷ் ரவி சந்தர், அலெக்சாண்டர், அபிஷேகம், ராஜதுரை ஏசுவடியான்,ஆன்ட்ரு அதிசயராஜ், ஜான்சன் பொன்சிங் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவி கள், சபை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாயர்புரம் பேரூராட்சியில் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் இருந்தது.
    • புதுப்பிக்கபட்ட‌ ரேஷன் கடையை கலெக்டர் செந்தில் ராஜ் திறந்து வைத்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் 14-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் இருந்தது. அதை சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.வி.பி.எஸ்.பொ. ஜெயக்குமார் மற்றும் சாயர்புரம் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் உள்ளிட்டோர் நிதி திரட்டி புதிய ரேஷன் கடையை புதுப்பிக்க ஏற்பாடு செய்தனர்.

    இந்நிலையில், புதுப்பிக்கபட்ட ரேஷன் கடையை கலெக்டர் செந்தில் ராஜ் திறந்து வைத்தார். பின்னர் வீடுவீடாக சென்று பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்களை பொது மக்களிடம் விநியோகம் செய்தார்.

    தொடர்ந்து, அப்பகுதியில் மரகன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார். சேகரகுரு இஸ்ரவேல் ராஜாதுரைசிங், ஏரல் தாசில்தார் கண்ணன், திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயர்புரம் பேரூர் செயலாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி, திருப்பணி செட்டி குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், சாயர்புரம் செயல் அலுவலர் பிரபா, பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா, ப்ளாட்டினா மேரி, இந்திரா, சுமதி, முத்து மாரி, ராமமூர்த்தி, முத்துராஜ், மற்றும் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண், செபத்தையாபுரம் அரிமா சங்க தலைவர் ஆலயமணி, அகதாஸ், 14- வார்டு பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது.
    • புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தேர்வுநிலை பேரூராட்சியில் சிறப்பு ஒட்டு மொத்த தீவிர தூய்மை பணி முகாம் 10-வது வார்டு புளியநகரில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.சாயர்புரம் தி.மு.க. செயலாளர் கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவரும் எனது குப்பை எனது பொறுப்பு, எனது சுத்தமான கிராமம் எனது பெருமை என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    முகாமில் புளிய நகர் வார்டு முழுவதும் கொசு மருந்துகள் வீடுவீடாக தெளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்த உள்ளது. இதில் சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் முத்துராஜ், சாயர்புரம், நாசரேத், ஏரல் பேரூராட்சி ஊழியர்கள், பரப்புரை யாளர்கள் ஜெயா, பெனிட்டா மேரி மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சாயர்புரம் பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் செய்து இருந்தார்.

    • நட்டாத்தி ஊராட்சி‌ சேவை மையத்தில் மருத்துவ காப்பீடு சேவை முகாம் நடந்தது.
    • நட்டாத்தி ஊராட்சி‌ பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    நட்டாத்தி ஊராட்சி சேவை மையத்தில் மருத்துவ காப்பீடு சேவை முகாம் நடந்தது. இதில் பிரதம மந்திரி ஆயுஷ் மான் பாரத் மற்றும் முதல்-அமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் தகுதியான நபர்களுக்கு ரூ.5லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு நட்டாத்தி ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் அன்னகனி , பிரியா, சரோஜா, மணிமந்திரம்.திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி , சண்முகா டிஜிட்டல் ஜெராக்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து பயன் பெற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயல்அலுவலர் முத்துராஜ் செய்து இருந்தார்.

    • சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது.
    • சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே காசநோய் பரிசோதனை முகாம் நட்டாத்தி பஞ்சாயத்து சேவை மையத்தில் நடந்தது. துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சின்ன நட்டாத்தி ஆகிய ஊர்களில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே ஆம்புலன்ஸ் அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை, நீரழிவு நோய் சோதனை ஆகிய பரிசோதனைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கொம்புகாரன் பொட்டல் வார்டு உறுப்பினர் பண்டாரம், நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்துராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் மலைவிக்னேஷ், கண்ணன்,ஏரல் ஆய்வக மேற்பார்வையாளர்சுரேஷ், சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை, நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி, நுண் கதிர் வீச்சாளர்கள் சுரேஷ்,மாலதி, நுண்கதிர் உதவியாளர் எட்டையா, சுகாதார தன்னார்வலர்கள், மஸ்தூர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை நட்டாத்தி இடைநிலை சுகாதார செவிலியர் பூர்ணா கலையரசி செய்து இருந்தார்.

    • மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் நடந்தது.
    • போட்டிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி ஸ்பார்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடமி மற்றும் தூத்துக்குடி மாவட்ட கராத்தே அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்திய 5-வது ஆண்டு மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள் சாயர்புரம் போப் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    தமிழக மீனவளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டி களை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆறுமுக பெருமாள், முக்காணி கூட்டுறவு வங்கி தலைவர் உமரி சங்கர், சாயர்புரம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டாரம், தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் மத்திய பகுதி பி.ஜி.ரவி, மேற்கு கொம்பையா, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், சாயர்புரம் பேரூராட்சி தலைவி பாக்கிய லெட்சுமி, அறவாழி, பேரூர் செயலா ளர்கள் ஏரல் ராயப்பன், சாயர்புரம் கண்ணன், பெருங்குளம் நவநீத முத்துக் குமார், ஸ்ரீவைகுண்டம் சுப்புராஜ், மாவட்ட பிரதி நிதிகள் பேய்க்குளம் ஜெயக் குமார், அருண் கிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் சண்முக ராஜா, குலையன் கரிசல் கூட்டுறவு வங்கி தலைவர் சுரேஷ், முன்னாள் சாயர் புரம் நகர செயலாளர் வரதராஜ் ஸ்டாலின், நடுவக் குறிச்சி நாராயணன், பழைய காயல் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கராத்தே மற்றும் சிலம்பம் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கராத்தே முதன்மை மாஸ்டர் சுரேஷ் குமார் தலைமையில் கராத்தே மாஸ்டர்கள் பாட்ஷா, கணேஷ்குமார், முகில் மாறன், திலீப் மற்றும் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகாலை 4 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
    • சபை மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் படைத்த அசன பொருட்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அசன வேலைகள் ஆரம்பமாயிற்று.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் பரி மாற்கு ஆலயத்தின் 163-வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது. அதிகாலை 4 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. சேகர குரு இஸ்ரவேல் ராஜதுரைசிங் ஆராதனையை நடத்தினார். சபை குரு ஆமோஸ் மற்றும் குருவானவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். சபை மக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் படைத்த அசன பொருட்கள் ஆசீர்வதிக்கப்பட்டு அசன வேலைகள் ஆரம்பமாயிற்று.

    மாலை 5 மணிக்கு அசன பண்டிகை நடந்தது. நிகழ்ச்சியில் டி.எஸ்.எப்.சீ புட்ஸ் நிர்வாக இயக்குனர் சத்தியநாதன் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், உப தலைவர் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் திருமண்டல பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அசன விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த பொறுப்பாளர்கள் அருள்ராஜ், சசிகுமார், ரூபன், அமிர்தராஜ் மற்றும் சபை நிர்வாக செயலாளர் ஸ்டீபன், சபை நிர்வாக பொருளாளர் கன்னையா கனகராஜ் மற்றும் சேகர செயலாளர் செல்வகுமார் ஆகியோரை திருமண்டல நிர்வாகஸ்தர்கள் பாராட்டினர். ஆலயமணி வரவேற்றார். சபை மன்ற நண்பர்கள் ஐக்கியம் சார்பில் நிர்வாகஸ்தர்களுக்கு பண்ணைவிளை உதங்கன் மற்றும் நடுவக்குறிச்சி சாலொமோன் பொன்ராஜ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான மக்கள் அசன விழாவில் கலந்துகொண்டனர்.

    • முள்ளன்விளையில் நண்பர்கள் குழு சார்பில் மாவட்ட அளவிலான 24-வது மின்னொளி கபடி போட்டி நடந்தது.
    • விளையாட்டு போட்டிக்கு பிரபாகர், ராஜேஷ், ஜெயசந்திரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள முள்ளன்விளையில் நண்பர்கள் குழு சார்பில் மாவட்ட அளவிலான 24-வது மின்னொளி கபடி போட்டி நடந்தது. விழாக்குழு தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். கருப்பசாமி கோவில் தர்மகர்த்தா பாலமோகன் முன்னிலை வகித்தார்.

    இதில் 86 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் முதலிடம் பெற்ற முள்ளன்விளை வெண்ணிலா அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் 2-வது இடம் பெற்ற வேம்பார் கடல்புறா அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும், 3-ம் இடம்பெற்ற கூட்டாம்புளி கணேசா அணிக்கு ரூ.15 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற முத்தையாபுரம் நேசம்மாள் அணிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கு பிரபாகர், ராஜேஷ், ஜெயசந்திரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இவ்விழாவில் முள்ளன்வி ளை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    • சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ராகிங் எதிர்ப்பு குழு, மாணவர் படை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • உங்கள் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்றால் நன்றாக படித்து போட்டிகள் நிறைந்த எதிர்காலத்திற்கு இப்போதே நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ராகிங் எதிர்ப்பு குழு, மாணவர் படை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி க்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வ குமார் தலைமை தாங்கினார். ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சாயர்புரம் சப்-இன்ஸ்பெக்டர் தேவ சகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் சாந்தினி இஸ்ரேல் வரவே ற்றார். இதில் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்ட ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. மாயவன் பேசிய தாவது:-

    பெரும்பாலான பெற்றோர்கள் தங்களால் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்காமல் போய்விட்டோம். ஆனால் நமது பிள்ளைகள் படித்து, பெரிய ஆளாக வரவேண்டும் என பல்வேறு கனவுகளோடு உங்களை கல்லூரி வரை படிக்க வைத்துள்ளனர். உங்கள் எதிர்காலம் நன்றாக அமையவேண்டும் என்றால் நன்றாக படித்து போட்டிகள் நிறைந்த எதிர்காலத்திற்கு இப்போதே நாம் நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எதுவுமே கஷ்டப்படாமல் கிடைத்துவிடாது. அதற்கான முயற்சி களை படித்து கொண்டே இருக்கும் இத்தரு ணத்தில் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    மேலும் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல கூடாது. பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்ய கூடாது. மாணவிகளை கிண்டல் செய்யக்கூடாது என கேட்டுக் கொண்டார்.

    தொட ர்ந்து அனைவரும் ராகிங் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்த னர். நிகழ்ச்சியை ஆங்கில த்துறை மாணவிகள் மெர்சி, ஜெய பிரதிபா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பொருளியல் துறை பேராசிரியர் ஜானகி மற்றும் சாம் ஆகியோர் நன்றி கூறினார். பேராசிரியர் மெர்லின் சலோமி நிறைவு ஜெபம் செய்தார்.

    • சிவத்தையாபுரத்தில் ஆனந்த விநாயகர் கிளப் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 3 நாட்கள் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடக்கிறது.
    • அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி- சென்னை வைஷ்ணவா கல்லூரிகளுக்கு இடையான போட்டியினை தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே சிவத்தையாபுரத்தில் ஆனந்த விநாயகர் கிளப் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் 3 நாட்கள் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியின் 2-வது நாளன்று சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி- சென்னை வைஷ்ணவா கல்லூரிகளுக்கு இடையான போட்டியினை தொடங்கி வைத்தார். சிவத்தையாபுரம் முத்துமாலையம்மன் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் பரமசிவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தெற்கு மாவட்ட அவை தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன் ராஜா, சாயர்புரம் நகர செயலாளர் துரைசாமி ராஜா,சிவத்தையாபுரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால்ராஜ், துணைத்தலைவர் சரவணகுமார் ராஜூ, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், பவுன்சிங், அ.தி.மு.க. வார்டு செயலாளர்கள் பாண்டியன், பார்த்திபன், செல்வ குரு, எட்வர்ட், பட்டுராஜ் மற்றும் ஊர் பிரமுகர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை காட்டுநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனகலட்சுமி, சங்கீதா, மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர்.
    • போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் தூத்துக்குடி ஈ.சி. பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. ஆர்.எஸ். புரத்தில் தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்த போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    போட்டியினை சரவணராஜா, ராம்குமார் ஆகியோர் கொடியசைக்து தொடங்கி வைத்தனர். பெண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை காட்டுநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனகலட்சுமி, சங்கீதா, மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர். ஆண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை பசுபதி, அஜித்குமார் மற்றும் பார்வதிநாதன் ஆகியோர் பிடித்தனர்.

    தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கி பேசினார். முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

    முன்னதாக ஈ.சி. பிட்னஸ் பயிற்சியாளர் இம்மானுவேல் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னர்களாக தொழிலதிபர்கள் பரமேஸ்வரன், ஜெபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் செயல் விளக்க காட்சிகளாக போதை இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் உடல் வலிமை யுடனும், மன வலிமையுடனும் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

    மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், ட்ராவல் பேக் மற்றும் டி-ஷர்ட் வழங்கப்பட்டது. முடிவில் ஜெபதிலகர் நன்றி கூறினார்.

    • ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்கொரியாவிலுள்ள ஐ.என்.சி.ஹச்.இ. என்ற நிறுவனத்திற்கும், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் கல்லூரிகளான போப் கல்லூரி, சாயர்புரம், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார்.

    கல்லூரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். திமோத்தி ரவீந்தர் தலைமை உரையாற்றினார். இதனையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தென்கொரியா ஐ.என்.சி.ஹச்.இ. இயக்குனர் கிம், போப் கல்லூரி செயலர், தநீகர் பிரின்ஸ் கிப்சன், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி செயலாளர் பிரேம்குமார் ராஜாசிங், ஐ.என்.சி.ஹச்.இ. மண்டல ஒருங்கிணைப்பாளர் டேனியல் எழிலரசு, ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் ஜவகர் சாமுவேல் நன்றி கூறினார். இம்மானுவேல் வான்ஸ்றக் இறுதி ஜெபம் செய்தார். பேராசிரியர்கள் ஜீவராணி தங்கம், பிரிங்கிள் குயின்ஸ்டா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதில் போப் கல்லூரி வேதியல் துறை உதவி பேராசிரியை கரோலின் டெய்சி, உடற்கல்வி இயக்குனர் ஜோன்ஸ் ராஜன், பேராசிரியர்கள் குட்டி ஜாஸ்கர், சாந்தினி கிரேஸ், ஆசீர், தினகர், கிறிஸ்டோபர், பொன்சாம், மரிய ஜெயோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×