என் மலர்
நீங்கள் தேடியது "Sayarpuram"
- நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
- நட்டாத்தியின் தென்புறம் கண்ணான்டி விளை வரை நட்டாத்தி- பட்டாண்டி விளை மெயின் ரோட்டின் ஓரங்களிலும் பனை விதைகள் நடப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி பஞ்சா யத்துக்கு உட்பட்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 1,200 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலாளர் ஜேசுராஜ் தலைமை தாங்கினார். ஏரல் நகர செயலாளர் திரவியம், நகர தலைவர் பாஸ்கர், மாவட்ட தலைவர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நட்டாத்தி ஊராட்சி செயலர் முத்து ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நட்டாத்தியின் தென்புறம் கண்ணான்டி விளை வரை நட்டாத்தி- பட்டாண்டி விளை மெயின் ரோட்டின் ஓரங்களிலும் பனை விதைகள் நடப் பட்டது. நிகழ்ச்சியில் ஸ்ரீவை குண்டம் வடக்கு தொகுதி தலைவர் அருண் ஆறுமுகம், தொகுதி பொருளாளர் இஸ்ரவேல், தெற்கு தொகுதி பொறுப் பாளர்கள் ஐகோர்ட் ராஜா, ஐசக், கணேசன். கருங்குளம் ஒன்றிய செயலாளர் சந்தனராஜ், மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை இணை செயலாளர் பேச்சிராஜா, ஸ்ரீவைகுண்டம் நகர செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் சுடலைக்கண்ணு, சுடலைமுத்து, கருங்குளம் ஒன்றிய துணை தலைவர் சண்முகவேல், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி செயலாளர் காசிபாண்டியன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சேது, ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய இணை செயலாளர் வாசிம், துணை செயலாளர் ஆறுமுகம், சாயர்புரம் நகர இணை செ யலாளர் ஆரோக்கியமணி, ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய வீரத்தமிழர் முன்னணி செயலாளர் சங்கர், சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சிவராமமூர்த்தி, ஏரல் நகர இணைச் செயலாளர் ஆத்திராஜ், ஏரல் நகர துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெபக்கனி முகாமை தொடங்கி வைத்தார்.
- முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, காய்ச்சல் உட்பட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சாயர்புரம்:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தூத்துக்குடி சுகாதார மாவட்டம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் டி.என்.டி.டி.ஏ. பள்ளியில் நடந்தது.
சேர்வைகாரன்மடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெபக்கனி முகாமை தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர் ஞானசேகர், காமராஜ் நகர் வார்டு உறுப்பினர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முடிவைத்தானேந்தல் மருத்துவ அலுவலர் டாக்டர் காளீஸ்வரி, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் முருகேசன், புதுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா ஆகியோர் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.
தூத்துக்குடி வட்டார மருத்துவமில்லா மேற்பார்வை யாளர் மதிவாணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுக நயினார் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவர்கள், சமுதாய நல செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மருத்துவம், ரத்த சோகை, விட்டமின் குறைபாடுகள், காய்ச்சல், நீரிழிவு நோய், இறப்பை மற்றும் குடல் நோய், மனநோய், பால் வினை நோய், இதயம், தோல், காது, மூக்கு, தொண்டை, பல், கண் நோய், மகளிர் நலம், மகப்பேறு, குழந்தைகள் நலம் உட்பட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, இரும்பு சத்து அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனை, கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறிய பாப் தடவல், இ.சி.ஜி, கர்ப்பிணி பெண்க ளுக்கு ஸ்கேன் பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோத னைகள் இலவசமாக செய்யப்பட்டன. இந்த முகாமில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் போப் கல்லூரி தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாந்தி பொன்இந்திரா தலைமை தாங்கி பேசினார்.
தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியை ஜெயசுதா வரவேற்றார். தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியை சகாய ஹென்சி ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் ஹேமா நன்றி கூறினார். ஜெயராணி நிறைவு ஜெபம் செய்தார்.
- சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது.
- கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை தலைவர் பிரியா மேரி, கவுன்சிலர்கள் கண்ணன், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், ராமமூர்த்தி, முத்துராஜா, முருகேஸ்வரி, ப்ளாட்டினா மேரி, இந்திரா, ஜெப தங்கம், சுமதி, பிரவீனா, அமுதா, முத்துமாரி, சுகாதார மேற்பார்வையாளர் நித்ய கல்யாண் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
- விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேசினார்.
சாயர்புரம்:
நட்டாத்தி இ-சேவை மைய வளாகத்தில் பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, பஞ்சாயத்து துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி கலந்து கொண்டு அரசு துறை சார்பில் அமைக்கபட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.
தொடர்ந்து பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு மழை கோர்ட் மற்றும் சால்வை கொடுத்து கவுரவபடுத்தினார். மேலும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் தனி நபர் வேலை அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கினார். பலவேறு அரசு துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்று, விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை கருவிகள், மருந்து மாத்திரைகள், மகளிர் சுய உதவிக் கடன் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
தொடர்ந்து ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் கோபால கிருஷ்ணன், சாயர்புரம் ஆர்.ஐ. விஜய் ஆனந்த், திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் உலகநாதன், செயலர் ஜெயஸ்ரீ, திருவை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன் பானு.ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சிவகலா, ஸ்ரீவை யூனியன் துணை தலைவர் விஜயன், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய், பற்றாளர் ஜோசப், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாம்துரை, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைசாமி, பஞ்சாயத்து உறுப்பினர்கள் அன்னகனி, ஜான்சிராணி, சுப்புலட்சுமி, சரோஜா, கொம்புகாரன் பொட்டல் பண்டாரம், பிரியா, மணிமந்திரம் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சாயத்து செயலர் முத்துராஜ் நன்றி கூறினார்.
- அ.தி.மு.க. பூத்கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சாயர்புரத்தில் நடந்தது.
- முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
சாயர்புரம்:
அ.தி.மு.க. ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றியம், சாயர்புரம் பேரூராட்சி இளைஞர், இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகள் ஏற்படுத்துதல், பூத்கமிட்டி அமைத்தல் குறித்த ஆலோ சனை கூட்டம் சாயர்புரத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோ சனைகள் வழங்கினார். முன்னதாக சாயர்புரம் நகர செயலாளர் துரைச்சாமி ராஜா வரவேற்றுப் பேசி னார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அழகேசன், நகர அவைத்தலைவர் ஜெயராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சுதர்சன் ராஜா, சிவத்தையாபுரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால்ராஜ், துணை தலைவர் சரவணக்குமார், ராஜு, ஸ்ரீவைகுண்டம் யூனியன் துணை தலைவர் விஜயன் மற்றும் சாயர்புரம் பேரூராட்சி வார்டு செய லாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், மகளிர் அமைப்பினர் மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
- செபத்தையாபுரம் அம்மன் கோவில் அருகில் ஆர்.ஓ. சிஸ்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கும் பணி தொடக்க விழா பூஜை நடந்தது.
- பேரூராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்
சாயர்புரம்:
சாயர்புரம் பேரூராட்சி 4-வது வார்டு செபத்தையாபுரம் அம்மன் கோவில் அருகில் பேரூராட்சி 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் ஆர்.ஓ. சிஸ்டம் அமைத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிடுவதற்கான பணி தொடக்க விழா பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பாக்கிய லட்சுமி அறவாழி தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்.
சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, செபத்தையாபுரம் இந்து நாடார் உறவின் முறை தர்மகர்த்தா பால்ராஜ், ஊர் தலைவர் அமிர்தராஜ், சாயர்புரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பிரவீணா, சுமதி, அமுதா, பிளாட்டினாமேரி, செபத்தையாபுரம் தொழிலதிபர் ஆர்.ஜி.சுதர்சன்ராஜா, பள்ளி கல்வி குழு துணைத் தலைவர் முரளிதரன், ஊர் பிரமுகர்கள் மாதவன், ரத்தினகுமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் நித்தியகல்யாண் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டாண்டி விளை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை உள்ளது.
- நியாய விலைக்கடையில் வாரம் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க கோரி அப்பகுதியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி ஊராட்சிக்குட்பட்ட பட்டாண்டி விளை கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடை உள்ளது. இங்கு வாரம் ஒரு நாள் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நியாய விலைக்கடையில் வாரம் 2 நாட்கள் ரேசன் பொருட்கள் வழங்க கோரி அப்பகுதியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாதம் ஒரு நாள் மட்டுமே பட்டாண்டி விளை கடையில் பொருட்கள் வழங்கப்படும் என்று சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி பொது மக்கள் காலை முதல் மாலை வரை ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.
- அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
- அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே பட்டாண்டிவிளை நேரு தெருவை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மனைவி டெல்பின் (வயது 51).
இவர்களது மகள் நியூனா (23). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 22-ந்தேதி டெல்பின் வீட்டு காம்பவுண்டக்குள் குப்பையை தீ வைத்து எரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தீ டெல்பின் மீது பட்டு பலத்த தீகாயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த டெல்பின் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது.
- சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கினார்.
சாயர்புரம்:
சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அறவாழி தலைமை தாங்கினார். இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக வங்கி எல்கைக்கு உட்பட்ட நட்டாத்தி பஞ்சாயத்து பட்டான்டிவிளை கிராமத்தில் வாரத்தில் ஒரு நாள் செயல்படும் பகுதி நேர நியாய விலை கடையை 2 நாட்கள் திறந்து வைப்பது, கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சங்க செயலாளர் சகுந்தலா தேவி வரவேற்றார். வங்கி பணியாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். காசாளர் கிருபாகரன் தவமணி நன்றி கூறினார்.