search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school student attacked"

    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜூக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்.
    • தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    திருவைகுண்டம் அருகே 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அரியநாயகபுரம் கிராமத்தைச் சார்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் மீது சாதிவெறியர்கள் நடத்தியுள்ள சாதிய கொலைவெறித் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    சில நாட்களுக்கு முன்னர் கட்டாரிமங்கலத்தில் அரியநாயகபுரம் அணிக்கும் கெட்டியம்மாள்புரம் அணிக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் அரியநாயகபுரம் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அரியநாயகபுரம் அணியில் இடம் பெற்றிருந்த தேவேந்திர ராஜ் உள்ளிட்ட அனைவரும் கோப்பையுடன் கொண்டாடியுள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள இயலாத காழ்ப்புணர்ச்சியால் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என தேவேந்திர ராஜின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    கெட்டியம்மாள்புரத்தைச் சார்ந்த மூன்று பேர் இன்று பள்ளிக்கு தேர்வு எழுத பேருந்தில் சென்ற மாணவன் தேவேந்திர ராஜை பேருந்திலிருந்து கீழே இறக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இத்தாக்குதலில் மாணவன் தேவேந்திர ராஜின் இருகைகளிலும் விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. நான்கு விரல்கள் துண்டாகியுள்ளன. அவற்றில் ஒரு விரல் கிடைக்கவில்லை. மற்ற மூன்று விரல்களையும் ஒட்டும் அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்று வருகிறது. தலையில் ஆறு இடங்களில் வெட்டியுள்ளனர். மண்டைஓடு வரை படுகாயம் பட்டுள்ளது. முதுகிலும் பல இடங்களில் வெட்டுக் காயம் உள்ளது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜூக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்.

    தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    சாதிய வன்கொடுமைகளை தடுத்திடும் வகையில் தமிழக அரசு இதற்கென காவல்துறையில் தனியே ஒரு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்கிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    என திருமாவளவன் கூறியுள்ளார்.

    பள்ளி மாணவனின் பிறப்புறுப்பில் தாக்கிய ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அழகாபுரியை சேர்ந்த சேதுராஜ் என்பவர் மகன் சேகர் (வயது 13). இவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இவரின் தாய் சந்திரா (32). இவர் டெய்லரிங் தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த சேகர் மிகவும் சோர்வாக இருந்துள்ளான். கட்டிலில் படுத்தவன் எழுந்திரிக்க முடியாமல் இருந்தாராம். இதனால் பதறிப் போன பெற்றோர் அவனை திருவேங்கடத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தன்னிடம் பள்ளியில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாததால் ஆசிரியர் பிறப்புறுப்பில் அடித்ததாகவும் அதனால் வலி தாங்க முடியாமல் உள்ளதாக சேகர் தெரிவித்தான்.

    மேலும் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதால் அவனின் பெற்றோர் மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக குருவிகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் குருவிகுளம் போலீசார் பள்ளி மாணவனை தாக்கியதாக ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×