என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SDPI"

    • நான்கு இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடியேற்றப்பட்டு, 14வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.
    • திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது முன்னிலை வகித்தார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் 14- ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு மங்கலத்தில் கொடியேற்று விழா மற்றும் பேரணி நடைபெற்றது. மங்கலம் அருகே உள்ள வடுகன்காளிபாளையத்தில் இருசக்கர வாகன பேரணி ஆரம்பித்து அக்ரஹாரப்புத்தூர், மங்கலம் வழியாக பல்லடத்தில் முடிவடைந்தது. மேலும் ரம்யா கார்டன், அக்ரஹாரபுத்தூர், மங்கலம், பல்லடம் உள்ளிட்ட நான்கு இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கொடியேற்றப்பட்டு, 14வது துவக்க தின விழா கொண்டாடப்பட்டது.

    எஸ்.டி.பி.ஐ., கட்சியின் பல்லடம் தொகுதி பொருளாளர் நாசர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கோவை மண்டலத் தலைவர் ராஜா உசேன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டத்தலைவர் ஹாரிஸ் பாபு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது முன்னிலை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் முகமது ரபிக், எஸ்.டி.டி.யு. தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக், எஸ்.டி.டி.யு, மாவட்ட செயலாளர் ஜாபர் சாதிக், எஸ்.டி.டி.யு. துணைத் தலைவர் நாகூர் மீரான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பல்லடம் தொகுதி தலைவர் யாசர் அரபாத், பல்லடம் தொகுதி துணை தலைவர் அபுதாஹீர் மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. #Babrimasjid
    திருச்சி:

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்காக மக்கள் வரிப்பணம் ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்கி மோடி அரசு வீணடித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது. இந்த சிலைக்கான முதலீட்டை கொண்டு ஏராளமான விவசாய மற்றும் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தி இருக்கலாம். அத்துடன் 2 புதிய ஐ.ஐ.டி.க்கள், 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 5 புதிய ஐ.ஐ.எம். வளாகங்களை அமைத்திருக்க முடியும்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் மொத்தம் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட இருப்பதால் இத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு கொடுப்பதா? என்பதை கள ஆய்வு செய்து முடிவு செய்ய பொதுச்செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பது.

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதி கட்ட வேண்டும், அங்கு சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டு தலத்தை அப்புறப்படுத்த வேண்டும், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #Babrimasjid
    ×