என் மலர்
நீங்கள் தேடியது "sengottai"
- விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்
- 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும்.
செங்கோட்டை:
செங்கோட்டை குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹார திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும். விழாவில் தினமும் காலை, மாலை , இரவு நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும், 29-ந் தேதி திருமலை குமரன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவில் யானை சூரன் முகம், சிங்க சூரன், மகா சூரன் முகம் காட்டும் வைபோகம் நடைபெறும்.
வருகிற 30-ந் தேதி மதியம் 2.00 மணிக்கு முருக பெருமாள் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு முக்கிய ரத வீதிகளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பத்கர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்படும். 31-ந்தேதி காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாண வைபோகமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- சூரசம்ஹாரம் மாலை 5 மணிக்கு முக்கிய ரத வீதிகளின் 3 இடங்களில் நடைபெறுகிறது.
- நாளை காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும்.
செங்கோட்டை:
செங்கோட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சந்த சஷ்டி விழாவையொட்டி நேற்று இரவு சூரன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்து யானை சூரன் முகம், சிங்க சூரன், மகா சூரன் முகம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருக பெருமானையும் சூரபத்மர்களையும் வழிபட்டுனர்.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மாலை 5 மணிக்கு முக்கிய ரத வீதிகளின் 3 இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நாளை காலை ஆராட்டு நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது
- 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்தார்
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏபிஎஸ் செஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாணவிகள் பிரிவில் மாநில அளவில் 2-வது இடத்தையும், 5-ம் வகுப்பு மாணவன் ஜெகத் பிரபு மாணவர்கள் பிரிவில் மாநில அளவில் 7-வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் புன்னைவனம் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்
- சமீப காலமாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
செங்கோட்டை அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி. இவரது மகன் புன்னைவனம்(வயது 22). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.
சமீப காலமாக அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.
- அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பது தெரியவந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையை அடுத்த பிரானூர் பார்டர் அருகே மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அரசு அனுமதி பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த மன்றத்தில் சில முறைகேடுகள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையிலான சிறப்பு தனிப்படை அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக 549 யூனிட் மது இருப்பதும், உரிமம் இல்லாத 30-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும், அந்த மன்றத்திற்கு சீல் வைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து சுமார் 50,000 தலைப்புகளில் புத்தகங்கள் செங்கோட்டை நூலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் சுடலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை நூலக வாசகர் வட்டமும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து சுமார் 50,000 தலைப்புகளில் புத்தகங்கள் செங்கோட்டை நூலகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் நூலகர் ராமசாமி வரவேற்று பேசினார்.
வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆதிமூலம், வாசகர் வட்ட இணைச் செயலாளர் செண்பககுற்றாலம், நூலக போட்டித் தேர்வு பொறுப்பாளர் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் சுடலை புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார்.
மதுரையை சேர்ந்த சர்வதேச டென்னிஸ் பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குனர் மாரியப்பன், செங்கோட்டை காதி நிறுவன மேலாளர் மாரியப்பன், ரோட்டரி கிளப்ஆப் குற்றாலம் தலைவர் திருவிலஞ்சி குமரன், ரோட்டரி கிளப் ஆப் செங்கோட்டை செயலாளர் அபு அண்ணாவி, எஸ்.எம்.எஸ்.எஸ் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ஆறுமுகம், பட்டிமன்ற பேச்சாளர் சங்கர்ராமன், கடையநல்லூர் வாசகர் வட்ட தலைவர் ஜெயராமன், சுரண்டை புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், வாசகர் அய்யப்பன், மைதீன் பிச்சை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன பணியாளர்கள், வாசகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- கோவில் நடைதிறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது.
- நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர்சந்தனம் போன்ற 36 நறுமணம் வகையான அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.
செங்கோட்டை:
செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், இளநீர்சந்தனம் போன்ற 36 நறுமணம் வகையான அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கணேஷ பட்டர் செய்தார். பூஜை முடிவில் கேசரி, பொங்கல், தேங்காய் சாதம், லெமன் சாதம், பஞ்சாமிர்தம், சுண்டல் என 6 வகை அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மண்டாக படிதாரர்கள் செய்திருந்தனர்.கொட்டும் மழையிலும் செங்கோட்டை மற்றும்அதன்சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- செங்கோட்டை சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது.
- அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை சிவன் கோவில் மற்றும் ஆறுமுகசாமி ஒடுக்கம், மலையாளசாமி கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு, அன்னதான கூடத்தில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. பின்னர் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜை புஷ்பாஞ்லி வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
- செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது
- அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்
செங்கோட்டை:
செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் புதிய சொத்துவரி உயர்வு தொடர்பான அவரசக் கூட்டம் நடந்தது.
நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் பார்கவி, என்ஜினீயர் ஜெயப்ரியா, மேலாளா் ரத்தினம், சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெகன் கூட்டத்திற்கான அஜன்டா தனக்கு காலதாமதமாக வந்ததை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
அதனைதொடர்ந்து தி.மு.க. உறுப்பினா்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை சரிவர தீர்க்காமலும், பாரபட்சமாக நடப்பதாகவும் கூறி ரஹீம் தலைமையில் இசக்கித்துரை பாண்டியன், மேரிஅந்தோணிராஜ், பினாஷா, சரவண கார்த்திகை, பேபிரெசவுபாத்திமா ஆகியோர் வெளிநடப்பு செய்தனா்.
பின்னா் தமிழக அரசின் புதிய சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. உறுப்பினா்கள் பொன்னுலிங்கம் என்ற சுதன், வேம்புராஜ், செண்பகராஜன், ராஜ்குமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனா். அதனைதொடா்ந்து புதிய சொத்துவரி உயர்வு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினா்கள் சுடர்ஒளி ராமதாஸ், ராதா, சரஸ்வதி, சுகந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
- நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியான தேன்பொத்தை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது
- உளுந்து பயிரில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்து கூறப்பட்டது
செங்கோட்டை:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் இயங்கும் நீர்வள நிலவள திட்டத்தின் சிற்றாறு பாசனப் பகுதியான தேன்பொத்தை கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகச்சாமி வழிகாட்டுதலின் படி துணை பேராசிரியர் ரஜினிமாலா தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் பயிற்சியின் நீர்வள நிலவள திட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் சுடலை ஒளிவு வரவேற்று பேசினார். உளுந்து பயிரில் விதை உற்பத்தி முறைகள் மற்றும் உயிர் உரத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செயல் விளக்கத்தின் முறைகளை எடுத்து கூறி இதன் செயல் விளக்கம் விவசாயிகள் முன்னிலையில் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் பாலா உளுந்து பயிரில் ஏற்படும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை எடுத்து கூறினார். இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். அருண் சசிக் குமார் நன்றி கூறினார்.
- வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ஒரு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி பூங்கா அருகில் உள்ள முருகாத்தாள் என்பவர் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்து ஒரு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு டன் ரேஷன் அரிசியுடன் அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சேர்ந்தமரம் அருகே உள்ள கடையாலுருட்டி சர்ச் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுந்தரராஜன் (வயது 20) என்பவரை கைது செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.
- 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
- கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரம் பகுதியில் சிலர் ஆம்பர்கிரீஸ் கட்டிகளை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அங்கு தங்கச்சன் என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது சிறு சிறு துண்டுகளாக சுமார் 3 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் ஒரு அறையில்மறைத்து வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் சந்தை மதிப்பு சுமார் 41 லட்சம் என கூறப்படுகறது.
இதுசம்பந்தமாக தங்கச்சன் (வயது 65) மற்றும் அவரது மகன் வர்கீஸ் (35) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து செங்கோட்டைகாவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் 2 பேரிடமும் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கோட்டை வனத்துறையினரும் தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.