என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sexual crime"

    • அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

    தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சமீபத்தில், கிருஷ்ணகிரி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

    இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், தொல்லை இருந்தால் தெரிவிக்க வேண்டிய புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பாலியல் தொடர்பாக புகார்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 14417 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    தயக்கமின்றி புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல், தேர்வு, உயர்கல்வி வழிகாட்டுதலுக்கும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அரபு நாடுகளை போன்று பொது இடத்தில் வைத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளது. #GKVasan
    சென்னை:

    மாற்றுத்திறனாளி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அதில் மாற்றுதிறனாளிகள் உரிமை சட்டத்தின் விதிமுறைகளை உடனடியாக அமுல்படுத்தும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மாற்றுத்தினாளிகள் மட்டுமல்லாது பொதுவாகவே பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும். அரபு நாடுகளில் இருப்பதுபோல் பொதுமக்கள், குற்றவாளியின் உறவினர்கள் மத்தியில் பொது இடத்தில் வைத்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளி என்று தெரிந்ததும் காலம் கடத்தாமல் உடனடியாக தூக்குதண்டனை கொடுக்கும் அளவுக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.



    காவல்துறையினர் பாலியல் குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும்போது அவர்களது முகத்தை மூடக்கூடாது. இதுபோன்று இழி செயலில் ஈடுபடுவோர் முகம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும். மக்கள் முன்னிலையில் அவர்கள் அவமானப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாற்றுதிறனாளிகள் சங்க தலைவலி லலிதாம்பிகை, செயலாளர் மகேஸ்வரி, த.மா.கா. நிர்வாகிகள் ஞானதேசிகன், சக்திவடிவேல், முனவர் பாஷா, ஜி.ஆர்.வெங்கடேஷ், அனுராதா அபி, அண்ணாநகர் ராம்குமார், சைதை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #GKVasan
    ×